செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி பழைய மாணவர்பொதுக்கூட்டம் 26.02.17 !

நுவரெலியா பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டத்திற்க்கான அழைப்பு  வாழ்வில் எல்லோருக்கும் மறக்க முடியாத அநுபவம் என்றால் அது அவர்களது பாடசாலை வாழ்க்கையே. கல்வி, விளையாட்டு சண்டைகள், அழகான இனபுரியாத அழகான  காதல்கள், அன்பான ஆசிரியர்கள், வாழ்வில் என்றும் மறக்க முடியாத நண்பர்கள் என அனைத்துமே வாழ்வின் பொக்கிசங்கள்!
அவ்வாறாக  நுவரெலியா ஹாவா எலியாவில் அமையப்பெற்றுள்ள பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி பல சாதனையாளர்களை உருவாக்கிய ஒன்றாக காணப்படுகின்றது.
குறிப்பாக மதிப்பிற்குறிய  திரு. புத்திரசிகாமணி,  திரு. முத்துசிவலிங்கம், திரு. கிசோக்குமார்,திரு. சதாசிவம், தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சர் திரு. இராதாகிருஸ்ணன், திரு. பந்துல செனவிரட்ன,
திரு. மாதவன், திரு. சசி மாதவன், திரு என்.கார்திக்,  திரு. அபேசிங்க,திரு. பெருமாள், திரு. உமாசந்திர, திரு. நேருஜி,  என சமூகத்தில் பெயர்  சொல்லக்கூடிய பல ஜாம்பவான்களையும், அரசியல்வாதிகளையும், கல்விமான்களையும், உருவாக்கிய பாடசாலையாக  நுவரெலிய பரிசுத்த திருத்துவ கல்லூரி காணப்படுகின்றது.
இதனை தாண்டி பல்வேறு மாணவர்கள் இன்று தனது குடும்ப வாழ்வில் சிறப்பாக வாழவும், சமூகத்தில் மதிப்புடன் வாழ்வதற்கான அடித்தளத்தினை இட்டு தந்த பாடசாலையாக பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி காணப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையின் அனைத்து பாடசலைகளின் பழைய மாணவர்களை தத்தமது பாடசாலைக்கு வரவழைத்து அவர்களது இளமைக்கால மறக்க முடியாத அந்த பள்ளி நாட்களை மறுபடியும் ஞாபகமூட்டும் பழைய மாணவர்களை முதநிலைப்படுத்திய செயற்திட்டத்தினை லங்காபுரி செய்தி சேவை எதிர்வரும் காலங்களில் செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்ட பாடசாலையாக  நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியினை தெரிவு செய்துள்ளது. ஆகவே பழைய மாணவர்கள் தொடர்ந்தும் லங்காபுரி செய்தி சேவையுடன்  இணைந்திருக்கவும் உங்களுக்கான மேலதிக தகவல்கள் வந்தடையும்..
இத்தகவலை பகரிந்து உங்களது நண்பர்ளை மறுபடியும் நேரடியாக சந்திப்பதற்கான அழகான வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்…
தற்போது இப்பாடசாலை பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டத்திற்க்கான அழைப்பு விடுத்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.