செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜொலித்த இந்திய கொடி

சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது. 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. 
இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. முழுவதும் கருப்பு நிற சலவைக்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
 இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்தியாவின் மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.



திங்கள், 14 ஆகஸ்ட், 2023

உத்தரகாண்ட் மாநிலத்தின் மேக வெடிப்பைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது

மேக வெடிப்பு என்பது ஒரு சிறிய காலக்கெடுவுக்குள் கணிசமான அளவு மழைப்பொழிவால் வகைப்படுத்தப்படுகிறது, பொதுவாக மலைகள் வளிமண்டலத்தில் இருந்து ஈரப்பதத்தை
 உட்கொண்டு 
மேகங்களை உருவாக்கும் மலைப்பகுதிகளில் பரவுகிறது. இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடிக்கடி மேகவெடிப்பு 
ஏற்பட்டு கனமழை 
கொட்டி வருகிறது. இந்நிலையில் திடீரென அங்குள்ள சமோலி மாவட்டத்தின் நந்தபிரயாக் அருகே மேகவெடிப்பு ஏற்பட்டு 
கனமழை கொட்டியது.
அதன் தொடர்ச்சியாகவே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவுகளால் சாலைகள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேக வெடிப்பு காரணமாக, கனமழை பெய்ததால், பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முயன்ற இந்திய தம்பதியொருவர் கைது

போலி கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முற்பட்ட இந்திய தம்பதியொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 43 வயதுடைய இருவரும் திபெத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஆண் கர்நாடக மாநிலத்தில் வசிப்பவர் மற்றும் பெண் உத்தரகாண்ட் 
மாநிலத்தை சேர்ந்தவர்.
 இந்த ஜோடி நெதர்லாந்திற்கு செல்ல இரண்டு போலி சீன பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்த முயற்சித்ததாக அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
 கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி முதல் சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருந்த அவர்கள் குவைத் சென்று அங்கிருந்து நெதர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் 
தெரியவந்துள்ளது.
 அல் ஜசீரா ஏர்லைன் கவுண்டருக்கு அவர்கள் அழைத்தபோது, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் பரிந்துரைத்தனர், அவர்கள் அவர்களின் பயண ஆவணங்களை 
ஆய்வு செய்தனர், 
அவர்கள் போலி சீன கடவுச்சீட்டுகளை தயாரித்துள்ளனர் என்பதைக் கண்டறிந்தனர். அதிகாரிகள் தம்பதியரின் பைகள் மற்றும் சாமான்களை சோதனை செய்தனர் மற்றும் அவர்களின் உண்மையான இந்திய பாஸ்போர்ட்களை கண்டுபிடித்தனர்.
 விசாரணையில், இரண்டு போலி பாஸ்போர்ட்டுகளைப் பெறுவதற்காக ஒரு நபருக்கு 6,000 அமெரிக்க டாலர்களை வழங்கியதாக 
அவர்கள் தெரிவித்தனர்.
 மேலதிக விசாரணைகளுக்காக தம்பதியினர் விமான நிலையத்தில் உள்ள சிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 12 ஆகஸ்ட், 2023

இலங்கை யால காடுகளில் உள்ள விலங்குகள் வறட்சியினால் கடுமையாக பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக  தேசிய பூங்காவும்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாணிக்க கங்கை நீர் பயன்படுத்தப்படுவதாக யால தேசிய பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 அதன்படி, மாணிக்க கங்கையில் இருந்து பெறப்படும் தண்ணீர் பவுசர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது . 
இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் நீர் யால தேசிய பூங்காவில் வன விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 20 இடங்களுக்கு விடுவிக்கப்படவுள்ளதாக உயர் அதிகாரி மேலும்
 தெரிவித்தார். 
 இதேவேளை, இவ்வருடம் நாளாந்தம் வரும் சுற்றுலா பயணிகளின் மூலம் 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக யால தேசிய பூங்கா தெரிவித்துள்ளது
 நாளாந்தம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மூலம் சராசரியாக 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக பூங்காவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 ஏனைய வருடங்களில், இக்காலப்பகுதியில் வருகை குறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு யால தேசிய பூங்காவிற்கு வருகை அதிகரித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

யாழ் இளைஞனிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பாரிய பண மோசடி செய்த நபர்

வெளிநாடொன்றிற்கு யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை அனுப்புவதாக கூறி நபர் ஒருவர் சுமார் 25 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு 
செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,இத்தாலியில் வசிக்கும் யாழ்ப்பாணம் வலிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தரகர் மூலம் குறித்த இளைஞனை அணுகியுள்ளார்.
இளைஞனுடன் சகல விபரங்களையும் பெற்றுக்கொண்ட தரகர் போலி விசாவினை இத்தாலியில் வசிக்கும் நபர் மூலம் பெற்றுக்கொண்டு இளைஞனுக்கு வழங்கியுள்ளனர்.
வீசாவினை தூதரகத்திடம் காண்பித்த போது குறித்த வேலை வாய்ப்புக்கான வீசா போலியானது என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞன், 
இத்தாலியில் வாசிக்கும் யாழைச் சேர்ந்த நபரே 
பிரதான சூத்திரதாரி.
குறித்த நபர் என்னைப் போன்ற பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 10 ஆகஸ்ட், 2023

இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வெளிநாட்டு போர் கப்பல் ஒன்று

இலங்கையில்  சீனாவின் போர்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
சீனாவின் HAI YANG 24 HAO என்ற கப்பலே இன்றைய கப்பல் (10-08-2023) காலை சம்பிரதாய பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளது.
129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பணியாளர்கள் 
பணிபுரிகின்றனர்.
மேலும் குறித்த கப்பலை கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.இதற்கிடையில், இந்த கப்பல் ஒகஸ்ட் 12 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 9 ஆகஸ்ட், 2023

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கு யாழில் அதிரடி சீல்

யாழில் உள்ள முக்கிய நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் 
தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால்  08-08-2023.    அன்று யாழ்ப்பாண நகர் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த யாழ். பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும், யாழ். பண்ணை பகுதியில் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கின.
இரண்டு உணவக உரிமையாளர்களிற்கும் எதிராக இன்றைய தினம் (09-08-2023) யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் 
செய்யப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு கட்டளை வழங்கிய நிலையில் வழக்கினை 18.10.2023ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதைத்தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகங்கள் இரண்டும் இன்று சீல் வைத்து மூடப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



Blogger இயக்குவது.