வெள்ளி, 19 ஜனவரி, 2018

மாப்பிள்ளைக்கு பெப்பே காட்டிவிட்டு கள்ளக் காதலனுடன் மணமகள் ஓட்டம்!!

வவு­னி­யா­வில் பெண்­ணொ­ரு­வர், வெளி­நாட்­டுக் கண­வனை வேண்­டாம் எனத் தெரி­வித்­து­விட்டு, திரு­ம­ணத்­துக்கு வந்த வாக­னச்­சா­ர­தி­யு­டன் காதல்­வ­யப்­பட்டு சென்ற சம்­ப­வம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.
வவு­னியா மகா­றம்­பைக்­கு­ளம் பகு­தி­யில் கடந்த 7 மாதங்­க­ளுக்கு முன்­னர் வெளி­நாடு ஒன்­றி­லி­ருந்து வந்த மண­ம­கன் அப்­ப­கு­தி­யில் பெண் ஒரு­வ­ரைத் திரு­ம­ணம் முடித்­தார்.மனை­வியை தாயா­ரு­டன்
 வீட்­டில் விட்­டு­விட்டு வெளி­நாட்­டுக்­குச் சென்று மணப்­பெண்னை எடுப்­ப­துக்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்.இந்­த­நி­லை­யில், இங்கு கடந்த 7மாதங்­க­ளாக வசித்து வந்த குறித்த மணப்­பெண் தனது 
திரு­ம­ணத்­துக்கு வாட­கைக்கு அமர்த்­தப்­பட்ட வாக­னச்­சா­ர­தி­டன் சென்­று­விட்­டார் என்று மணப்­பெண்­ணின் உற­வி­னர்­கள் வவு­னியா பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­த­னர்.இரு­வ­ரை­யும் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்த பொலி­ஸார் மணப்­பெண்­ணின் விருப்­பத்­தைக்
 கேட்­ட­னர்.
அப்­போது, மணப்­பெண் வெளி­நாட்டு மண­ம­கன் தேவை­யில்லை என்­றும், அவ­ரு­டன் நடை­பெற்ற திரு­ம­ணத்தை இரத்­துச் செய்­து­விட்டு, தனது காத­ல­னு­டன் வாழ விரும்­பு வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.இது­தொ­டர்­பில் ஆராய்­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வியாழன், 18 ஜனவரி, 2018

மண்ணில் இலங்கையின் ஒரு பகுதி புதைந்து போகும் பேராபத்து?

இலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத்தின் மூலம் 
தெரியவந்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 80 வீதமானவை இவ்வாறு புதைந்து போகும் அபாயத்தை எட்டியுள்ளது.
இவ்வாறான ஆபத்து நிறைந்த பகுதியில் 6000 குடும்பங்கள் உள்ளதாகவும், ஒரு இலட்சத்து 61 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
30 வருட யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட டைனமைட்டுகளை விடவும் அதிகமான டைனமைட்டுகள் பதுளை மாவட்டத்தில் ஒரு வருடத்திற்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஒருவரும் சிந்திக்கவில்லை எனவும், கற்பாறைகளை உடைத்து இலாபம் பெற்றுக் கொள்வதற்கு மாத்திரமே அனைவரும் சிந்தித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இந்த மாவட்டத்திற்கான வரைபடம் 
ஒன்றை தயாரித்து வழங்குமாறு கோரினோம் எனினும் வழங்கப்படவில்லை.
 அதிக மக்கள் வாழும் பகுதிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பதுளைக்கு ஆபத்து ஏற்பட்டால் முழுமையான இலங்கையின் விவசாயமும் 
பாதித்து விடும்.
சேனாநாயக்க சமுத்திரம், எலஹெர, பராக்கிரமபாகு சமுத்திரம், கிரிதலை, மின்னேரியா, கவுடுல்ல ஆகிய அனைத்திற்கும் பதுளை ஊடாகவே நீர் வழங்கப்படுகின்றது.
பதுளைக்கு பாதிப்பு ஏற்பட்டால் 9 மாவட்டங்களின் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 23 நவம்பர், 2017

நவற்கிரி நிலாவரைக்கிணறு பற்றிய உண்மைகள்?

யாழ்   நவற்கிரி  புத்தூர் நிலாவரையில் ஆழம் காணாத ( வற்றா உற்றுநீர் நிலையம்)   நிலாவரைக்கிணறு  பற்றி எமது மக்களிடையே பாரம்பரிய கதைகள் பல வழக்கிலுள்ளன. ‘ ஆழங்காண முடியாத கிணறு இது….’ ‘நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சம் பழம் 
ஒன்றை போட்டு  அது கீரிமலைக் கேணியில் வந்து மிதந்தது இப்படியாகப் பல கதைகள் மக்கள் வாய்மொழி மூலம் பரப்பப்பட்டு வருகின்றன. அக் கால மக்கள் தம் பட்டறிவால் பெற்ற சில உண்மைகள் அல்லது தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டு அல்லது திரிக்கப்பட்டு பலராலும் வழிவழியாகப் பேசப்பட்டு வருகின்றன. இன்று நாம் இதற்கு அறிவியல் ரீதியான விளக்கத்தை தேடுவது 
அவசியமாகும்.
யாழப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்ற – சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில்
 தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன. இதனாலேயே தான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும் போது சங்கு, சிப்பி,போன்ற கடல் வாழ் உயிரினங்களின் 
சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. 
இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன. சுண்ணப் பாறைகள் வன்னிப்பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில்
 குறிப்பாக பலாலி, தெல்லிப்பளை. காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. இப்பாறைப்படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஒரு அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிசிசரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர். ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதனைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது. இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும், வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும்இ நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.
புவிச்சரிதவியலாளராலும் புவி வெளியுருவவியலாளராலும் சுண்ணக்கற்பாறை பிரதேசங்களிற்குரிய பல நிலவுருவங்கள் அடையாளம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றே தரைக்கீழ் நீரோடும் குகைகளின் தோற்றமாகும். மழையால் பெறப்படும் நீர் நிலத்தினுள் ஊடுருவிச்சென்றுஇ கடினமான அடித்தள சுண்ணக்கற்பாறைப் படைகளில் தேக்கம் பெற்று தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத் தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து
 தேங்குகின்றது.
இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு பெரிய குகைகளாக உருமாறிவிடுகின்றன. இக் குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் 
வரை ஒரே தொடராக தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன. குகை மேலும் மேலும் அரிக்கப்பட அதன் பரிமாணம் அதிகமாவதால்; குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது. இவ்வாறு உருவான ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக்கிணறு ஆகும்.
மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததினால் உருவாகிய குகைப்பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன. குரும்பசிட்டி பேய்க் கிணறு,புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், கரவெட்டி குளக்கிணறுஇ ஊரணி வற்றாக்கிணறு. 
கீரிமலைக்கேணி, யமுனா ஏரி போன்றவையும் நிலாவரைக்கிணறு போல் உருவானவையாகும். கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில் ஆள் ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இன்றும் காணமுடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது.
இவ்வாறான கிணறுகளை நாம் நீர்ப்பாசனத்திற்காகவும். மழை நீரை தரைக்குக் கீழே சேமிப்பதற்கான மீள்நிரப்பியாகவும் பயன்படுத்தலாம். நிலாவரைக்கிணறு உள்ளிட்ட இவ்வாறான கிணறுகளிற் சில நீண்டகாலமாகப் பாசனத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 எழுபதுகளில் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர் இவ்வகைக் கிணறுகள் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி 10 மணித்தியாலங்களில்
 30.000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை வெளியிடப்பட்டது. மேலதிகமாக நீரை இறைப்போமாயின் உப்பு நீர் மேலோங்கிவரும் 
ஆபத்து உள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் பற்றிய சில ஆய்வுகள், இங்குள்ள தரைக்கீழ் நீர்ப்பீடம் கடினமான உப்பு நீரின் மேல் நன்னீர் வில்லை வடிவில் மிதப்பதை உறுதிசெய்துள்ளன. எனவே நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின் அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தரைக்குக் கீழாக அமைந்துள்ள சுண்ணக்கற் குகைகள் மூலம் தரைக்கீழ் நீரின் பெரும்பகுதி வீணாகக் கடலைச் சென்றடையும் நிலை பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான குகைகள் கண்டறியப்பட்டு அவற்றின் உள்ளே அணைகளைக் கட்டி அல்லது நன்னீர் தேக்கங்களை 
ஏற்படுத்தி நிலத்தடி நீர் கடலினுள் செல்வதை தடைசெய்தல் வேண்டும். பிரதேச அபிவிருத்திக்கு திட்டமிடுவோர் இது
 பற்றி அக்கறை கொள்ளுதல் வேண்டும். யாழ்ப்பாணக்குடாநாட்டின் வளமும் வாழ்வும் இத் தரைக்கீழ் நீர் வளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




செவ்வாய், 14 நவம்பர், 2017

மூவர் மீது நேற்று யாழில் நடந்த ரவுடிகளின் வாள்வெட்டு

, யாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிய மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன்,
ஈச்சமோட்டை வீதிப் பகுதியிலும் ஒருவர் மீது நேற்று வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதான வீதியில் உள்ள சலவைத் தொழிலகத்தின் உரிமையாளர் மற்றும் சலவைத் தொழில் நிலையத்தின்
நபர் மீதும் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, ஈச்சமோட்டை பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர் இளைஞர் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 6 நவம்பர், 2017

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் அலயத்தில் திருட்டு?

 எங்கள்  நவற்கிரி ஸ்ரீ  மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் கடந்த சில வருடங்களாக திருட்டுக்கள் இடம்பெற்று வரும் நிலையில்.05.11.2017.
 இன்று இரவும் ஆலய வாசற்கதவின் 
உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது " (குறிப்பு- பலநாள் 
கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் பிடிபடும்பொழுது நரசிங்க வைரவருக்கு நரபலிதான்)
தகவல் த. கண்ணன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மானவர்கள் புரமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

யாழ் ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இம்முறை 28 மாணவர்கள்.2017.ஆண்டின் . ஐந்தாம்தர புரமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ள நிலையில் 19 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் 13 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக்கொண்டனர். அவ்வகையில் 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளியான 155 மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சித்திடைந்த மாணவர்கள் :- 
நிர்மலன் றோகன் சன்சிகா - 177 புள்ளிகள்
நித்தியானந்தம் கிசாளினி - 161 புள்ளிகள்
சந்திரலிங்கம் பவிஸ்னன் - 160 புள்ளிகள்
பெற்றுள்ளனர் இவர்களை  
எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
.நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன 






பிறந்தநாள் வாழ்த்து திரு.தங்கவேலு கண்ணன் (05.10.17).

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2017. இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் 
 வெகு சிறப்பாக
 கொண்டாடுகின்றார்   .இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் வாழ்த்துகின்றனர் .இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்  செல்வச்சந்நிதி முருகன் 
இறை ஆசியுடன் 
  நோய் நொடி இன்றி துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது.. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







Blogger இயக்குவது.