இலங்கை விமான நிலையத்தில் 11.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற இரண்டு நபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கிரீன் சேனல் வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கல்முனையைச் சேர்ந்த 37 வயதுடைய தொழிலதிபர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சந்தேக நபர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த
26 வயதுடையவராவார்.
சந்தேக நபர்கள் கொண்டு வந்த பொருட்களுக்குள் 378 அட்டைப் பெட்டிகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பதை சுங்க அதிகாரிகள்
கண்டுபிடித்தனர். சம்பவம் குறித்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.h
![]()


0 கருத்துகள்:
கருத்துரையிடுக