வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

சாரதி அனுமதிப்பத்திரங்களில்உடல் உறுப்பு தானம் உள்ளடக்கம்

தமது உடல் உறுப்புகளை தானம் செய்யும் விரும்புவோரது விருப்பங்களையும் சாரதி அனுமதிப் பத்திரங்களில் உள்ளடக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணைக்குழுவால் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரணியல் சாரதி அனுமதிஅட்டையிலேயே இவை உள்ளடக்கபடவுள்ளதாக
 குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனையானது எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில்சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறந்த நபர்களது உடல் உறுப்புகள் பெறமுடியாத நிலையில் திடீர் விபத்துகளில்உயிரிழக்கும் சாரதிகளின் உடல் உறுப்புகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள்அதிகம் காண்படுவதானால் அதற்கான அனுமதியை சாரதிகளிடம் பெற்று அதனை சாரதிஅனுமதிப்பத்திரத்தில் உள்ளடக்குவதற்க எதிர்பார்த்துள்ளதாகவும்
 அரசகுறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் தேகாரோக்கியத்துடன் காணப்படும் நபர்கள் திடீர் விபத்தினால்இறக்கும் போது அவர்களது உடல் அவயங்கள் மற்றவர்களுக்கு பிரயோசனம் படும் எனவும்சுகாதார அமைச்சர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.