சனி, 24 பிப்ரவரி, 2024

நாட்டில் மத்திய வங்கியால் உயர்த்தப்பட்ட சம்பளம் மீளப் பெறப்படுமாம்

மத்திய வங்கியினால் உயர்த்தப்பட்ட சம்பளம் தமது அரசாங்கத்தின் கீழ் மீளப் பெறப்படும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள 
அவர், மத்திய வங்கி விருப்பப்படி ஊதியத்தை 
உயர்த்த முடியாது. 
மத்திய வங்கி தொடர்பான சட்டம் உள்ளது. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் அகற்றப்படவில்லை. நாடாளுமன்ற விவகாரத்துக்கென தனி சட்டம் உள்ளது. ஆனால் பாராளுமன்ற ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பாராளுமன்றத்தின் அனுமதி தேவை.
சுதந்திரம் என்பது பாராளுமன்றத்தைத் தவிர்ப்பது அல்ல. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்துக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் 
அளிக்கிறது. பின்னர் அவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை கணக்கிட முடியும். அதற்கும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. இவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டார்கள். 
இந்த சம்பளம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், உயர்த்தப்பட்ட சம்பளத்தை எங்கள் அரசாங்கத்தின் கீழ் வசூலிப்போம்' எனத் தெரிவித்துள்ளார். நாட்டின் திவால்நிலை மூன்று ஆண்டுகளாக
 மறைக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் கூட சொல்லப்படவில்லை. அவர்கள் எப்படி மீட்பர்களாக இருக்க முடியும்? அது சரி என்றால், அவர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்'' என்றார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.