வியாழன், 24 ஜூன், 2021

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில், புத்தளம் மற்றும் மன்னார் வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதோடு நாட்டில் உள்ள ஏனைய கடற்பகுதிகளும் சிறிதளவாக கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.