புதன், 21 மார்ச், 2018

பொலிஸ் வீரர்கள் தினம் காங்கேசன்துறையில் நடைபெற்றது

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள் (21) காங்கேசந்துறை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஸ்ர
 பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நினைவு கூரப்பட்டது.இதன் போது கடந்த காலத்தில் உயிர்நீத்த பொலிஸ்
 அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோர்களின் உறவினர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு உட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் சிசிர 
குமார ஹேரத் மற்றும் பிரியந்த ஆகியோர் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ளடங்கும் பலாலி அச்சுவேலி
 இளவாலை தெல்லிப்ளை காங்கேசன்துறை நெல்லியடி பருத்தித்துறை வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து
 கொண்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.