புதன், 16 ஆகஸ்ட், 2017

மரண அறிவித்தல் திருமதிகதிரவேல் சந்திராதேவி-15.08.17.

யாழ்அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருமதிகதிரவேல் சந்திராதேவி -15.08.17.அன்று சிவபதம்
 அடைந்தார்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல் 
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பாரவூர்தி வவுனியாவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது!

அம்பாறையிலிருந்து, கிளிநொச்சி நோக்கி செங்கற்களை ஏற்றிச் சென்ற ஹன்ரர் ரக பாரவூர்தியொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று அதிகாலை வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரவூர்தி வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அதன் வில்லுத்தகடு உடைந்தமையாலேயே, விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், வாகன சாரதி மற்றும் பாரவூர்தியில் பயணித்த உதவியாளருக்கு எந்தவித காயமும் இன்றி தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு
 வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 31 ஜூலை, 2017

கவிஞர் தயாநிதிஎழுதிய கோயிலில் நடந்த ஆச்சாரம்?

இல்லாத ஒன்றுக்காய் ஊர் கூடிப் போராட்டம். ஆச்சாரம் ஆச்சாரமென ஆர்ப்பாட்டம். கோவிலில் சாதிக் கலவரம் தேர் வடம் இராணுவக் கரங்களில் இன்றைய நிலவரம். விடுதலைப் போர்
 காலங்களில் மௌனித்த பெரும் கூத்து மீண்டும் கட்டறுத்து சதிராடுதாம். ஊரிழந்தோம் உறவிழந்தோம் உடமைகளிழந்தோம் உயிரிழந்தோம் பயிரிழந்தோம் பண்பாடிழந்தோம் பள்ளியிழந்தோம்
 படிப்பிழந்தோம் தமிழன் என்ற துடிப்பிழந்தோம் கும்பிட்ட கோவிலும் இழந்தோம்.விரைவில் எல்லாமே இழப்போம் இதுவே தமிழன் நியதி. ஆக்கம் கவிஞர்தயாநிதிஇல்லாத ஒன்றுக்காய் ஊர் கூடிப் போராட்டம். ஆச்சாரம் ஆச்சாரமென ஆர்ப்பாட்டம். கோவிலில் 
சாதிக் கலவரம் தேர் வடம் இராணுவக் கரங்களில் இன்றைய நிலவரம். விடுதலைப் போர் காலங்களில் மௌனித்த பெரும் கூத்து மீண்டும் கட்டறுத்து சதிராடுதாம். ஊரிழந்தோம் உறவிழந்தோம் 
உடமைகளிழந்தோம் உயிரிழந்தோம் பயிரிழந்தோம் பண்பாடிழந்தோம் பள்ளியிழந்தோம் படிப்பிழந்தோம் தமிழன் என்ற துடிப்பிழந்தோம் கும்பிட்ட கோவிலும் இழந்தோம்.விரைவில் எல்லாமே இழப்போம் இதுவே தமிழன் நியதி. 
ஆக்கம் கவிஞர்தயாநிதி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 29 ஜூலை, 2017

தாயகத்தில் தமிழ் நாடகங்களும் நாமும்…5

இங்கு படத்தில் இருப்பவர்.மிகவும் புகழ் பெற்ற ஒரு பகுத்தறிவாளர்..இந்தியாவின் கேரள திருவனந்தபுரம் திருவெல்லா என்ற ஊரில் 10 – 04 -1898 இல் பிறந்து சிறந்த கல்விமான் ..Colombo Thurstan college Botanic teacher…Dr.Abraham Kovoor…18.9.1978 ஸ்ரீ லங்காவில் காலமானார்…இவர் காலத்தில் புட்டபத்தி சாய் பாபா.கையில் 
விபூதியும்..வாயில் லிங்கமும் எடுத்த காலம்….இவர் கூட பல இடங்களில் அதை செய்து காட்டியவர்..யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி மண்டபத்திலும் இதை செய்து காட்டியவர்…இவரது இந்த
 திறமை திரு.வேலணை வீரசிங்க்ததையும் கவர்ந்தது…அவரும் திராவிட கழக ஆதரவாளர்..எனக்கும் பழக்கமானார்…நான்..அமரர் .கணேசபிள்ளை அண்ணை..வீரசிங்கம் அன்னார சகிதம்.இவர் மனைவி இறந்ததை அறிந்து சென்றோம்…ஆச்சரியம்..அந்த மரண
 வீட்டில் யாரும் இல்லை ..ஒரு மகன் அவரும் வரவில்லை…இறந்த அவர் மனைவியின் உடல் எந்த அலங்காரமும் இன்றி வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது… அருகில் யாரும் 
இல்லை ..மேல்மாடியில் கோவூர்.. எமக்கு மனதை உறுத்தியது..என்ன சொல்ல..வருத்தம் சொல்லவா..வாய் திறக்கும்
 முன்னர் கை காட்டினார்…சொன்னார் 50 ஆண்டு காலம் என்னோடு வாழ்ந்தா..இன்னும் சிறிது நேரத்தில் போதனா வைத்தியசாலை நபர்கள் வந்து கொண்டு செல்வார்கள் என்று..இப்போ இவர் மீது சாதுவாக எனக்கு பயம் வந்து விட்டது என்றே சொல்லலாம்…
அது சரி ..இவருக்கும் எமது நாடகத்திற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா…இவர் ஒரு மனோ தத்துவ டாக்டரும் கூட….இவர் வாழ்வில் ஒரு நோயாளிக்கு நடந்த உண்மை கதை..நம்பிக்கை… என்ற பெயரில் நாடகமாக உருவானது
..மிக அருமையான கதை..
இந்த நாடகத்தில்…ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆபிரகாம் கோவூராக.. எதிர் மறை மந்திரவாதியாக நான்…கபட தபால் காரனாக கே.எஸ்.பாலச்சந்திரன்…வெளிநாடு சென்ற கணவனை எதிர்பார்த்து ஏங்கும் மனைவியாக மணிமேகலை ராமநாதன்…பெற்றோராக.
. எஸ்.எஸ்.கணேசபிள்ளை ..சந்திரபிரபா மாதவன்….இதில் பேய் பிடித்த மணிமேகலைக்கு பேய் விரட்டும் காட்சி..நானும் மணிமேகலையும் உடுக்கு வாத்தியத்துக்கு கற்ப்பூர சட்டியியுடன் ஆடும் ஆட்டம் மக்கள் ஆர்வத்துடன்..குழந்தைகள் அழுகுரல்
 பயத்தில்… கொழும்பை தொடர்ந்து யாழ்ப்பாணம் படி தொட்டி எங்கும்… இ.போ.ச.பஸ் தொடங்கி..டாக்ஸி வரை எனதும்..மணியின் படமும் தான்… ஒருமுறை தீச்சட்டி தடம் புரண்டு
 என் மேல் கொட்டியது..இந்த நாடகம் வடமாகாணத்தில் பல இடங்களில் நடந்தாலும்…கொடிகாமம் மகா வித்தியாலயத்தில் நாடகம்..முன்னர் தலைமை ஆசிரியர் இந்த நாடகத்தை 
பார்த்துள்ளார்..என்னிடம் வந்து சொன்னார் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்..இந்த மாமரதிலை காய்க்கிற காய் ஒண்டையும் பெடியள் விடுறாங்கள் இல்லை ..நீங்கள் பேயாடி 
ஒரு மரத்தில் பேயை ஆணி அறைந்து கட்டுவீர்களே..அதை இந்த மரத்தில் செய்யுங்க என்றார்.. அதன் படி நானும் 
செய்தேன்…இரண்டாண்டுகளுக்கு பின்னர் எதேச்சையாக அவரை கண்டேன்.. சொன்னார் பொடியள் அந்த மரத்தடி பக்கமே போவதில்லை என.இப்படி… படித்ததற்கு நன்றி....   /தொடரும் 



புதன், 26 ஜூலை, 2017

அச்சுவேலியில் கோயிலில் நடந்த சண்டையின் பின்பு சிங்கள இராணுவத்தினர் தேர்இழுப்பு

யாழ்ப்பாணத்தில், அச்சுவேலியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். 
இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று
 முடிவு செய்தனர். 
(ஆரியர் என்பது திராவிடரிலும் கீழானது ஆரியரில் கீழானவர்கள் சிங்களர் சிங்களரிலும் சிங்கள இராணுவத்தில் பல தீண்டத்தகாத சாதி என்ற 
ஒன்றும் உண்டு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



இலங்கையில் மறைந்துள்ள மர்மங்கள் இளஞ்செழியனின் கண்ணீர்!

தனது பாதுகாப்பிற்காக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தமை குறித்து நீதிபதி இளஞ்செழியன் கண்ணீருடன் மன்னிப்பு கோரினார்.
இந்த சம்பவம் உள்நாடு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையின் பிரபல நீதிபதியும் எழுத்தாளரும் கவிஞரும் மனித உரிமை ஆர்வலருமான பசில் பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கட்டுரையில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 25 ஜூலை, 2017

யாழ் நீதிபதி மீதான கொலை முயற்சி தாக்குதல்! துப்பாக்கிதாரியின் இடம் கண்டு பிடிப்பு!!

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று 
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்காக பல பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சாவகச்சேரி பிரதேசத்தில் மறைந்திருப்பதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
சதீஷ் என்ற அடையாளப்படுத்தும் சந்தேகநபரே இவ்வாறு மறைந்திருப்பதாக கூறப்படுகின்றது. அவரை கைது செய்யும் நோக்கில் சாவகச்சேரியல் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சதீஷ் என்பவரின் மூத்த சகோதரர் மற்றும் மேலும் ஒரு உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




Blogger இயக்குவது.