ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

நாட்டில் .O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட சலுகை

நாட்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே 
தெரிவித்துள்ளார்.
 நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளன.
 மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், போக்குவரத்து வசதிகள் குன்றிய பகுதிகளிலுள்ள மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் 
அறிவித்துள்ளார். 
 டிட்வா சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட கட்டாய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்காக விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும்  பரீட்சை ஆணையாளர் நாயகம்  தெரிவித்துள்ளார். 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வாடகைக்கு நீர்கொழும்பில் பெற்ற காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த நபர்

நாட்டில்.நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை காவற்துறையினர் தேடி வருகின்றனர்.
யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை
 முன்னெடுத்து வந்தனர்.
அதேவேளை நீர்கொழும்பு காவற்துறையினர் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் 
தெரியவருவதாவது,
நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்ற நபர் , சில நாட்கள் காரினை செலுத்திய பின்னர் , அதன் தடம் அறி (GPS) கருவியை செயலிழக்க வைத்துள்ளார்.
அதனை அடுத்து , வாகனம் வாடகைக்கு கொடுத்தவர் நீர்கொழும்பு காவற்துறையினரிடம் முறைப்பாடு 
அளித்துள்ளார். அதன் பிரகாரம் நீர்கொழும்பு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
அதே நேரம் , காரினை வாடகைக்கு பெற்றவர், யாழ்ப்பாணத்தில் ஒரு நபரிடம் காரினை அடமானமாக வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை 
பெற்று சென்றுள்ளார்.
இந்நிலையில், அடமானம் வைத்த கார் , நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் எனவும் , கார் தொடர்பில் நீர்கொழும்பு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதனையும் அறிந்த , காரினை
 அடமானமாக வைத்து பணம் கொடுத்த நபர் , காவற்துறை விசாரணைகளுக்கு பயந்து காரினை வீதியில் அநாதரவாக 
விட்டு தப்பி சென்றுள்ளார்.
காரினை அடமானம் வைத்து பணத்தினை பெற்று சென்ற நபரை கைது செய்வதற்கு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 14 பிப்ரவரி, 2026

அமெரிக்காவின் போர் கப்பல் மத்தியக் கிழக்கு கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது

. உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் ( USS Gerald R Ford) மத்திய கிழக்கில்
 நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  
. இந்த போர்க்கப்பல், துணை கப்பல்களுடன், வரும் நாட்களில் கரீபியன் தீவுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் உறுதி செய்யப்படாவிட்டால், இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப்  முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் ஒருவர், நாட்டின் ஏவுகணை திறன்கள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல என்று உறுதிப்படுத்தினார்.   
 இதற்கிடையே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து கலந்துரையாடலில் 
ஈடுபட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த கப்பல் மத்திய கிழக்கு கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இலங்கை மத்திய வங்கி இவ்வாண்டிற்கான முதல் நாணயக் கொள்கையை வெளியிட்டது

.இலங்கை மத்திய வங்கி (CBSL), 2026 ஆம் ஆண்டிற்கான தனது முதல் நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
இது பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கான சாத்தியமான அபாயங்கள் குறித்த எதிர்கால நுண்ணறிவுகளை வழங்குகிறது.
ஆகஸ்ட் 2025 இல் முடிவடைந்த 11 மாதத்திற்கு பிறகு பணவீக்கம் நேர்மறையான பகுதிக்குத் திரும்பியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உள்நாட்டு தேவையில் படிப்படியான மீட்சி, எரிசக்தி மற்றும் போக்குவரத்து செலவுகளின் இயல்பாக்கம் மற்றும் ஒப்பீட்டளவில் உயர்ந்த
 உணவு விலை ஏற்ற இறக்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டு பணவீக்கம் 05 சதவீதம் என்ற இலக்கை நோக்கி நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

சுமார் 10 மில்லியன் யூரோ பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் மோசடி 9 பேர் கைது

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 9 பேர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 மில்லியன் யூரோ வரையில் மோசடி செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2024ம் ஆண்டு முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், வழக்கு விசாரணைகளுக்கு அமைய கடந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு லூவ்ரே ஊழியர்கள், பல சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் அடங்குவதாக வழக்கறிஞர் அலுவலகம்
 தெரிவித்துள்ளது.
டிக்கெட் சோதனைகளை தவிர்ப்பதற்காக சுற்றுலா வழிகாட்டிகள் அருங்காட்சியக ஊழியர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பிரான்ஸ் மற்றும் துபாயில் உள்ள ரியல் எஸ்டேட்டில் சில பணத்தை முதலீடு செய்ததாக நம்பப்படுகிறது. 
அதிகாரிகள் 957,000 யூரோக்களுக்கு மேல் ($1.13 மில்லியன்) பறிமுதல் செய்துள்ளனர். இதில் 67,000 யூரோக்கள் ($79,459) வெளிநாட்டு நாணயமும், வங்கிக் கணக்குகளில் இருந்து 486,000 யூரோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

பாராளுமன்றத்தின் இலங்கை தூதரகப் பணிகளுக்கான நியமனங்கள்

நாட்டில் பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழு நான்கு தூதரகத் தலைவர்களின் பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. 
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பெப்ரவரி 06 பாராளுமன்றத்தில் குழு கூடிய போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதராக ஹொரண மஹாவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசிற்கான
 இலங்கை உயர் ஸ்தானிகராக வர்ணகுலசூரிய பீட்டர் ரோஹன் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசிற்கான
 இலங்கைத் தூதராக அனுர விதானகே மற்றும் பாலஸ்தீன மாநிலத்திற்கான இலங்கைப் பிரதிநிதியாக முகமது பாரூக் முகமது ஃபௌசர் ஆகியோரின் பரிந்துரைகளை குழு அங்கீகரித்தது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வியாழன், 12 பிப்ரவரி, 2026

நாட்டில் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான புதிய முயற்சியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, க.பொ. த உயர்தரப் பரீட்சையில் அதிக இசட்- புள்ளிகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கே இவ்வாறு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் குறித்த மாணவர்கள் மதிப்புமிக்க சர்வதேச பல்கலைக்கழகங்களில் தங்கள் விருப்பப்படி பட்டப்படிப்புகளைப் தொடர முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்காக மொத்தம் 200 புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
அந்தவகையில், புலமைப்பரிசில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 32 மாணவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.


விமானம் மொகடிஷுவில் உடைந்து வீழ்ந்தது: 55 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் (Mogadishu) உள்ள ஆதன் ஆடே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்டார்ஸ்கை ஏர்லைன்ஸ் (StarSky Airline) விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
📍 இந்த விமானம் ஆதன் ஆடே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தைச் சந்தித்துள்ளது.
விமானம் போதிய உயரத்தை எட்ட முடியாமல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தடுமாறியதாகக் கூறப்படுகிறது. ஜசீரா கடற்கரை (Jasiira Beach) ஓரமாக விமானம் வழக்கத்திற்கு மாறாகத் தாழ்வாகப் பறந்ததை அங்கிருந்த மக்கள் நேரில் பார்த்துள்ளனர்.
📸 விமானம் கடற்கரையோர ஆழமற்ற நீர்ப்பகுதியில் விழுந்ததும், அதிலிருந்த பயணிகள் அவசரமாக வெளியே குதித்துத் தப்பித்துள்ளனர். நேரில் பார்த்தவர்கள் எடுத்த வீடியோவில், விமானத்தின் ஒரு சிறகு (Wing) முற்றிலும் உடைந்து தனியாக நீரில் மிதப்பது போன்ற காட்சிகள்
 பதிவாகியுள்ளன.
🆘 விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கினர். விமானத்தில் பயணித்த 55 பயணிகளும் 
பாதுகாப்பாக 
மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளைச் சோமாலிய விமானப் போக்குவரத்துத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.



புதன், 11 பிப்ரவரி, 2026

நாட்டில் .க.பொ.த சாதாரண தர பரீட்சை - நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தடை

நாட்டில் 2025 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர (சாதாரண தர) பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவது.11-02-2026. இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள  பரீட்சைகள் திணைக்களம், சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 
 இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது கட்சியும் அருகிலுள்ள காவல் நிலையம், காவல் தலைமையகம் அல்லது பரீட்சைத் துறைக்கு முறைப்பாடு அளிக்கலாம் என 
அறிவித்துள்ளது. 
இதற்கிடையில், பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 26 வரை நாடு முழுவதும் உள்ள 3,545  மையங்களில் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.




 

நாடில் கொழும்புக்கும் அகமதாபாத்திற்கும் இடையே நேரடி விமான சேவை


கொழும்புக்கும் இந்தியாவின் அகமதாபாத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று
 வருகின்றன. 
 இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் அகமதாபாத்திற்கு நேரடி விமான சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக  சுற்றுலாத் துறை துணை அமைச்சர் ருவான் ரணசிங்க
 தெரிவித்தார். 
 “இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழியாக கொழும்புக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க நாங்கள் நம்புகிறோம். 
இதன் மூலம், இலங்கையில் உள்ள பக்தர்கள் குஜராத்துக்குச் சென்று மத யாத்திரை நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்” என்று துணை அமைச்சர் ருவான் ரணசிங்க மேலும் கூறினார்.
..என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.


செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

நாட்டில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டம்

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி
 வேலைத்திட்டம் தொடர்பில், உலக வங்கி குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும், அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை
 மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி
 எமது நாட்டுக்கு 
வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 
குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
பிரதேசங்களில் வலய ரீதியான உற்பத்தி ஆற்றல்
 வளங்களை (சுற்றுலா, 
மீன்பிடி போன்ற) அதிகரித்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், 
தனியார் மூதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும்
 நிறுவன ரீதியான வலுப்படுத்தல்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்ற கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு 
எதிர்பார்க்கப்படுகின்றது. 
இதனடிப்படையில், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை
 மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கும் வகையில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.







 

இலங்கை முழுவதும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பலர் கைது

இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
வெளியிடப்பட்ட தினசரி அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது 791 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான 588 சுற்றிவளைப்புகளே அதிகூடிய எண்ணிக்கையில்
 முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 11 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.




 

நாட்டில் பெண் நடத்துனர்கள் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) நியமிக்கப்பட்ட முதல் பெண் நடத்துனர்கள்.10-02-2026. இன்று (கடமைகளைப் 
பொறுப்பேற்றனர். 
கொட்டாவையில் உள்ள மகும்புர மல்டி-மோடல் மையத்தில் (MMC) இருந்து பெண்கள் அரசுப் பேருந்துகளில் நடத்துனர்களாக  தங்கள் கடமைகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளனர். 
 சமீபத்தில் மொத்தம் 19 பெண்கள் SLTB நடத்துனர்களாக நியமிக்கப்பட்டனர், இது மாநிலப் பேருந்து சேவை வரலாற்றில் முதல் பெண் நடத்துனர்களாக மாறியது.என்பதும்  குறிப்பிடத்தக்கது
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

திங்கள், 9 பிப்ரவரி, 2026

உயிர்காக்கும் மருத்துவ உலகில் ஒரு புரட்சி: ஒரே வினாடியில் இரத்தப்போக்கை நிறுத்தும் மேஜிக் ஸ்ப்ரே

தென்கொரிய விஞ்ஞானிகள், உயிர்காக்கும் ஒரு புதிய வகை “ஹீமோஸ்டேடிக் ஸ்ப்ரே” (Hemostatic Spray)-ஐ உருவாக்கியுள்ளனர். இது உடலில் ஏற்படும் கடுமையான வெட்டு காயங்கள் மற்றும் இரத்தப்போக்கை வெறும் ஒரே வினாடியில் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது 
 காயத்தின் மீது தெளித்தவுடன், இந்தத் திரவம் உடனடியாக ஒரு ஜெல்லாக (Gel) மாறி, அதிவேக செயல்பாட்டின் மூலம் இரத்தக் கசிவை முழுமையாக மூடிவிடுகிறது. இது கடல் பாசிகளில் இருந்து எடுக்கப்படும் அல்கினேட் (Alginate) மற்றும் பிற இயற்கை உயிரிப் பொருட்களைக் கொண்டு 
தயாரிக்கப்பட்டுள்ளது.
போர்களங்களில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி முதலுதவி வழங்க, அம்புலன்ஸ் & அவசர சிகிச்சை: மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழப்புகளைத் தடுக்க. சாதாரண விபத்துகளின் போது எவரும் எளிதாகப் பயன்படுத்தலாம்.
🔬 தென்கொரியாவின் KAIST (Korea Advanced Institute of Science and Technology) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ராணுவ மருத்துவர்கள் இணைந்து இதை உருவாக்கியுள்ளனர். இது ஈரமான காயங்களிலும் கச்சிதமாக ஒட்டிக்கொண்டு, திசுக்களை விரைவாக இணைக்க உதவுகிறது.
தற்போது இந்தத் தொழில்நுட்பம் இறுதி கட்டச் சோதனைகளில் உள்ளது. விரைவில் இது முதலுதவிப் பெட்டிகளில் (First Aid Kits) இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு

நாட்டில் அண்மைக்காலமாக மது மற்றும் போதைப்பொருட்களை பாவித்தப் பின்னர் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் அதிகளவில்இனங்காணப்பட்டு வருகின்றனர். 
இந்நிலையில் அவ்வாறு மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்ய பொலிஸாரை ஊக்குவிக்கும் முகமாக விசேட வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இதற்கமைய குறித்த சாரதிகளை கைது செய்யும் பொலிஸாருக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக 8000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



நாட்டில் அஞ்சல் கட்டணங்களில் திருத்தம் - விலை விபரம் வருமாறு

உள்நாட்டு அஞ்சல் கட்டணங்களை09.02.2026. இன்று .முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது..
இதற்கமைய ஒரு நிலையான கடிதத்திற்கான கட்டணம்   50 ரூபாயிலிருந்து  70 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பதிவு கட்டணம்   60 ரூபாயாக ஆக மாறாமல் உள்ளது.
சாதாரண மற்றும் வணிக கடிதங்களுக்கான ஆரம்ப எடை வகை 20 கிராமிலிருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளது, மேலும் ஒரு துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பின் அதிகபட்ச எடை 100 கிராமிலிருந்து 120 கிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொண்டு, சமூக சேவை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கான தபால் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
அமைச்சுகள் மற்றும் அரசு துறைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு பதிவு சேவைக்கான கட்டணம்  110 இல் இருந்து   130 ரூபாய் ஆகவும், அஞ்சல் அட்டையின் விலை  20  ரூபாயில் இருந்து  40 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளது. 
இருப்பினும், நிலையான பார்சல்கள் மற்றும் இலங்கை தபால் கூரியர் சேவைக்கான கட்டணங்கள் மாறாமல் இருக்கும் என்று தபால் துறை மேலும் தெரிவித்துள்ளது. 
 கூடுதலாக, விளம்பர அஞ்சல் சேவைகள், டெலிமெயில், முத்திரையிடப்பட்ட உறைகள், தபால் பை சேவைகள் மற்றும் செலுத்தப்படாத அல்லது குறைவாக செலுத்தப்படும் அஞ்சல் பொருட்களுக்கான குறைந்தபட்ச கூடுதல் கட்டணம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

இலங்கையில் அஞ்சல் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

இலங்கையில் அஞ்சல் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன. 

அதன்படி, குறைந்தபட்ச அஞ்சல் கட்டணத்தை  70 ஆக உயர்த்தி, திருத்தப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்படும் மலையக மக்கள்

.நாட்டில்  வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள் மீதான தனது வரலாற்று மற்றும் தார்மீகப் பொறுப்பை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்து செயல்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், பிரித்தானிய காலனித்துவ தோட்டக்கலை காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து 
கொண்டுவரப்பட்ட இந்திய தமிழ் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சந்ததியினர் எதிர்கொள்ளும் வரலாற்று மற்றும் தொடர்ச்சியான அநீதிகளை அவர் எடுத்துரைத்துள்ளார். 
வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் இலங்கைக்கான பிரிட்டஷ் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் உடனான சந்திப்பைத் தொடர்ந்து அவர் இந்த 
கருத்துக்களை முன்வைத்தார். 
மலையகத் தமிழர்கள் தொடர்ந்து கட்டமைப்பு ரீதியாக விலக்கு அளிக்கப்படுவதாகவும், குறிப்பாக தித்வாஹாவுக்குப் பிந்தைய அரசாங்கத்தின் வீட்டுவசதி மற்றும் நில ஒதுக்கீட்டுத் திட்டங்களில் கட்டமைப்பு ரீதியாக விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். 
கண்டி, பதுளை, நுவரெலியா, மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள தோட்ட சமூகங்கள் தேசிய 5  மில்லியன் மறுசீரமைப்பு வீட்டுவசதித் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளன, அதற்கு பதிலாக இந்திய உதவியுடன் கூடிய வீட்டுவசதித் திட்டத்திற்கு திருப்பி 
விடப்படுகின்றன. 
 "நாங்கள் இந்திய குடிமக்களா? நாங்கள் இரண்டாம் தர இலங்கை குடிமக்களாக நடத்தப்பட வேண்டுமா? இது நிறவெறி பாணி அநீதியை நினைவூட்டும் ஒரு வகையான கட்டமைப்பு பிரிவினைக்கு சமம்," என்று
 தெரிவித்துள்ளார். 
 மலைநாட்டில் பல மாடி வீட்டுத் திட்டங்களை அரசாங்கம் ஊக்குவிப்பதாகத் தெரிகிறது, அதே நேரத்தில் தோட்டப்புற சமூகங்களுக்கு நில உரிமையை மறுக்கிறது, இந்த நடவடிக்கையை TPA கடுமையாக எதிர்க்கிறது என்று அவர் எச்சரித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 7 பிப்ரவரி, 2026

ஓவியம் ஒன்று அமெரிக்காவில் 27.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது

அமெரிக்காவில் புகழ்பெற்ற கலைஞர் மைக்கலேஞ்சலோவின் ஓவியம் ஒன்று 27.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. 
இது அவரின் படைப்புகளுக்குக் கிடைத்திருக்கும் அதிக 
தொகை ஆகும். இந்த சிறிய பாத ஓவியம் சுமார் 5 அங்குலமே ஆனது.
மைக்கலேஞ்சலோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு அரிய வரைபடத்திற்கு கிடைத்த மிக உயர்ந்த விலை என்கின்றனர். 
சிஸ்டீன் தேவாலயத்திற்கு மைக்கலேஞ்சலோ தீட்டிய சுமார் 50 படைப்புகளில் அதுவும் ஒன்று. 
நியூயார்க்கில் இந்த ஓவியத்தை வாங்க நேரில் மட்டுமல்லாமல் தொலைபேசியிலும் இணையத்திலும் ஓவிய 
ஆர்வலர்கள் திரண்டனர். 
45 நிமிட விறுவிறுப்பான ஏலத்திற்குப் பிறகு இந்த ஓவியம் விற்பனை ஆனது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய சட்டமூலத்தை நிறைவேற்ற நாள் குறிப்பு

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கானஓய்வூதிய (ரத்து செய்தல்) சட்டமூலத்தை இம்மாதம் 17 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அதே நாளில் நிறைவேற்ற நாடாளுமன்ற அலுவல் குழு முடிவு  செய்துள்ளது. 
குறித்த அறிவிப்பை  அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார். 
 சட்டமூலத்தில் உள்ள எந்த விதியும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்றும், அதை நாடாளுமன்றத்தால் எளிய பெரும்பான்மையுடன் இயற்ற முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக அவைத் தலைவர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன நேற்று நாடாளுமன்றத்தில்
 தெரிவித்தார். 
அத்துடன் சட்டமூலம்  அரசியலமைப்பின் 121(1) வது பிரிவின்படி மறுஆய்வு செய்யப்பட்டு அரசியலமைப்பு விதிகளுடன் முழுமையாக ஒத்துப்போவது  கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


துப்பாக்கிச் சூடு நடத்தி சுவிற்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட இருவர்

சுவிஸ் பெர்னில் உள்ள நியூஃபெல்ட் அருகே நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.பெர்ன் பொலிசார் பெர்ன் நோக்கிச் செல்லும் A1 மோட்டார் பாதையில் ஒரு காரை 
நிறுத்த முயன்றனர்.
அந்த வாகனம், ஜூக் மாகாணத்தில் நடந்த ஒரு கொள்ளை தொடர்பாக தேடப்படும் உரிமத் தகடுகளைக் கொண்டிருந்தது. அந்த
 கார் நிறுத்தாமல் தப்பிச் சென்ற போது, காரின் டயர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதையடுத்து அதன் ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் பிரெம்கார்டன் காட்டை நோக்கி கால்நடையாக தப்பிச் சென்றனர்.
ட்ரோன் மற்றும் ஒரு பொலிஸ் நாயின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதலின் போது, ​​தப்பியோடிய இரண்டு நபர்களும் கைது 
செய்யப்பட்டனர். 
அவர்களில் ஒருவர் நாய் கடித்ததால் காயம் அடைந்தார். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






 

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

இலங்கையில் ரஷ்யாவில் படித்த மாணவனுக்கு வைத்திய பீட அனுமதி மறுப்பு.

இலங்கையில் ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து  மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகுவதற்கான தகுதியைப் பெற்றிருந்த 
இலங்கை மாணவன் ஒருவரை, உள்நாட்டு மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்வதை மறுத்ததன் ஊடாக அவரது
 அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
அத்துடன், குறித்த மாணவனை உடனடியாக இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றின் மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பொரளையைச் சேர்ந்த இசுல தம்சித் ஜயரத்ன என்ற மாணவரே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 
மனுவை விசாரணை செய்த பின்னர், நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர இத்தீர்ப்பை அறிவித்துள்ளார். தான்
 கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில்
 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். 
தனது தந்தை இலங்கை விமானப்படையின் குரூப் கெப்டனாக கடமையாற்றிய போது, ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி கிடைத்ததை அடுத்து தான் ரஷ்யாவிற்குச் சென்றதாக
 அவர் தெரிவித்தார். அங்கு இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் 
'சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் பரீட்சையில்' சித்தியடைந்ததாகவும், அது இலங்கையின் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குச் சமமானது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டினார். 
அதன் பின்னர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடத்தில் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்த போதிலும், அதற்கான நிபந்தனைகளுக்குத் தான் பொருந்தவில்லை எனக் கூறி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக அவர் குற்றம் 
சுமத்தியிருந்தார். 
இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர், அரச பல்கலைக்கழகமொன்றின் வைத்திய பீடத்தில் அனுமதி பெறுவதற்கான உரிய நிபந்தனைகளின் கீழ் மனுதாரர் தகுதி பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

லண்டன் லிவர்பூல் ரயில் நிலையம் ஐந்து நாட்களுக்கு மூடப்படும்

 

 மிகவும் பரபரப்பான லண்டன் லிவர்பூல் ரயில் நிலையம் மார்ச் மாதத்தில் 5 நாட்களுக்கு மூடப்படும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பணிகளுக்காக குறித்த ரயில் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின்படி, மார்ச் மாதம் 15, 21, 22, 28 மற்றும் 29ம் திகதிகளில் ரயில் நிலையம் மூடப்படும் என்றும் வார இறுதி நாட்களில் பயணிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வழித்தடங்களுக்கு மாற்று பேருந்துகள் வழங்கப்படும் என்றும் பயணிகள் பயணம் செய்வதற்கு முன் தேசிய ரயில் அல்லது ரயில் ஆபரேட்டர் வலைத்தளங்களை பார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



இலங்கை போக்குவரத்து சபையில் வரலாற்றில் முதல் முறையாக பெண் நடத்துனர்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றில் முதல் தடவையாக 19 பெண் நடத்துனர்கள் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொழும்பு, மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, போக்குவரத்துத் துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று 
குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவியேற்றது முதல், போக்குவரத்துத் துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் துன்புறுத்தல்களைக் குறைக்கவும், பெண்களுக்கான சம வாய்ப்புகளை வழங்கவும் முன்னெடுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த நியமனங்கள் அமைந்துள்ளதாக அவர் 
மேலும் தெரிவித்தார்.
இந்த வரலாற்று நிகழ்வின் போது, புதிதாக நியமிக்கப்பட்ட பெண் நடத்துனர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட புதிய சீருடைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நியமனங்கள் மூலம், இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பு ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 5 பிப்ரவரி, 2026

யாழ் நவக்கிரி ‘நிலாவரை’ கிணற்றின் புதிர் முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை

யாழ் நவக்கிரி நிலாவரை புத்தூர் குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் நவக்கிரி புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள
 பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை.  
அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது.
ஆம்! அன்றுதான் பல புதிர்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நி​லாவரைக் கிணற்றின் ஆழம் அறியப்பட்டது.
இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், சகல நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள்
 இறங்கினார்கள்.
கிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி)​ சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும். அப்படிப் பார்த்தால், சராசியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.
கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டுசென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது. ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும்  காணப்படுகிறது. இந்த 
மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், 
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என
 அனுமானிக்க முடிகிறது.
ரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும்
 தெரிய வந்துள்ளது.
நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணிநேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு. அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் 
செல்லும் சுரங்கப்பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் பார்க்கமுடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல
 தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத்தொடர்பு இருப்பதை உய்ந்தறிய முடிகிறது.
நிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நிலத்தடி நீர் தொடர்பு இருப்பதனால் வரட்சின்போதும் மழைக்காலத்தின்போதும் நீர் மட்டம் குறைவதோ 
கூடுவதோ கிடையாது.
இலங்கையின் வடபகுதியின் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்ற அமைப்பே நிலத்தடியில் காணப்படும் குகைகளுக்கான காரணமாகும். இதுகுறித்து பேராசிரியர் சிவச்சந்திரனின் ‘ நிலாவரைக் கிணறு ஜீவநதியா’ என்கிற தனது கட்டுரையில் பின்வருமாறு 
பதிவு செய்துள்ளார்.
‘யாழ் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டுக்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்றது. சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில் இவை தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து
 மேலுயர்த்தப்பட்டன. இதனாலேயேதான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும்போது, சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.
இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன. சுண்ணப் பாறைகள் வன்னிப்பிரதேசத்தில்
 மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, தெல்லிப்பழை,  கீரிமலை காங்கேசன்துறைப் 
பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. இப்பாறைப்படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஓர் அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிச்சரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.
ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது. இங்கு ஆதிகாலம் 
முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும் வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும் நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.
புவிச்சரிதவியலாளரால் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை தரையின் கீழ் நீரோடும் குகைகள் அடையானம் காணப்பட்டுள்ளன. மழையால் பெறப்படும் நீர், நிலத்துக்குள் ஊடுருவிச்சென்று,
 கடினமான அடித்தள 
சுண்ணக்கற்பாறைப் படைகளில் தங்கி நின்று, தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத்தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து தேங்குகின்றது.
இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு, பெரிய குகைகளாக உருமாறி 
விடுகின்றன. இக்குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடராகத் தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன.
குகை மேலும்மேலும் அரிக்கப்பட, அதன் பரிமாணம் அதிகமாவதால் குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது. இவ்வாறு உருவான ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக்கிணறு. இவ்வாறு, மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததால் உருவாகிய குகைப்பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன.
குரும்பசிட்டி பேய்க் கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊரணி வற்றாக்கிணறு, கீரிமலைக்கேணி, நல்லூர் யமுனா ஏரி, மானிப்பாய் இடிகுண்டு, ஊரெழுவில் பொக்கணை போன்றவையாகும்.’
நிலாவரைக் கிணற்றுக்குள் 18.3 மீற்றர் (60 அடி) வரையிலுமே நல்ல தண்ணீர் காணப்படுகின்றது. ஆழம் செல்லச்செல்ல நீரில் உப்புத்தன்மையின் செறிவு அதிகரித்துச் செல்வதாக ஏற்கெனவே நடத்திய பல ஆய்வுகளில்
 அறியவந்தது.
1965 இல் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர், நிலாவரைக் கிணற்றில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, 10 மணித்தியாலங்களில் 30, 000 – 40, 000 கலன் நீர் அக்கிணற்றில் இருந்து இறைக்கப்பட்டது. இதற்கு மேலும், நீர் இறைக்கப்படின் உப்பு நீர் மேலோங்கி வருவது 
அவதானிக்கப்பட்டு அம்முயற்சி நிறுத்தப்பட்டது. இதற்காக, மட்டக்களப்பிலிருந்து நீராவி இயந்திரம்  தருவிக்கப்பட்டே, அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் உப்பு நீரின் மேல் மிதப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. எனவே, நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின்
 அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும் ஆபத்துக் காணப்படுகிறது. இன்று குடாநாட்டின் பலபகுதிகளில் இந்தநிலைமை 
உருவாகிவருகிறது.
பெரும்பாலும் மழைக்காலங்களில், குடாநாட்டில் தரைக்குக் கீழாக அமைந்துள்ள சுண்ணக்கற் குகைகள் மூலம், தரைக்கீழ் நீரின் பெரும்பகுதி வீணாகக் கடலைச் சென்றடையும் நிலை பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக, கெருடாவில், கீரிமலை போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். எனவே இவ்வாறான குகைகளின் உள்ளே அணைகளைக் கட்டி, அல்லது நன்னீர் தேக்கங்களை ஏற்படுத்தி, நிலத்தடி நீர் கடலினுள் செல்வதைத் தடைசெய்தல் வேண்டும். யாழ்ப்பாணக்குடாநாட்டின் வளமும் வாழ்வும் இத்தரைக்கீழ் நீர் வளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதிலேயே 
பெரிதும் தங்கியுள்ளது.
கி. பி 1824 இல், சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி, யாழ்ப்பாண உதவிக ஆளுநராக சேர் டைக் என்பவர் 
நியமிக்கப்பட்டார்.
 யாழ்பாணத்தின் அபிவிருத்திக்காக தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து, பல வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இவரை, மக்கள் ‘யாழ்பாண ராசா’  என செல்லமாக அழைத்தார்களாம்.  
டைக், பதவியேற்ற 1824 இல் அந்த வருடமே 
நிலாவரைக் கிணற்றை மையப்படுத்திய நீர்பாசனத் திட்டம் பற்றி அவர் திட்டம் வகுத்ததாக ஆங்கிலேயரின் யாழ்ப்பாண நிர்வாகக் குறிப்புகளில்
 காணக் கிடைக்கிறது.
இன்றும் நிலாவரைக் கிணற்றுக்கு மேற்குப்புறமாக உள்ள சிறுப்பிட்டி, மேற்குப்புறமாக உள்ள அச்செழு, ஈவினை  கிராமங்கள் உட்பட அருகிலுள்ள நவகிரி, புத்தூர்,  ஆகிய கிராமங்களுக்கான விவசாய முயற்சிகளுக்கான நீர், நிலாவரைக் கிணற்றிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
  1890 இல் நிலாவரையிலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பின்னர் இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் அது
 கைவிடப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஜே/ 275 கிராமசேவகர் பிரிவுக்குள் நிலாவரைக்கிணறு அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராசா வீதி, புத்தூர் பருத்தித்துறை நெடுஞ்சாலை சந்திக்கும் சந்தியில் நிலாவரைக்கிணறு அமைந்துள்ளது.
கிணறு அமைந்துள்ள பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்குச் சொந்தமானதாகும். இதன் பராமரிப்பு பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது.  இருந்தபோதிலும், நிலாவரைக் கிணற்றின் நீர் வழங்கும் பணிகள், வாராவத்தை குடிநீர் விநியோகத்திட்டம் என்ற பெயரில் தேசிய வடிகாலமைப்பு, குடிநீர் அதிகார சபையால்
 மேற்கொள்ளப்படுகிறது.
மருது, வேம்பு, வாகை போன்ற விருட்சங்கள் உயர்ந்து, வளர்ந்து சோலையாக நிழல் பரப்பி நிற்பதும் மனதுக்கு இனிமையான அமைதியான சூழலும் நிலாவரைக் கிணற்றின் அதிசயத்துக்கு அப்பால் மக்களை இந்த இடம் தன்பால் இழுக்கின்றது.
2009 ஆம் ஆண்டு போர் ஓய்வுக்கு முன்னர், இந்தக் கிணற்றை பாடசாலை மாணவ மாணவியர் உட்பட, ஒருசில உள்ளூர் வாசிகள் வந்து பார்த்துச் செல்வார்கள். இவர்களை விட, வழிப்போக்கர்களும் விவசாயிகளும் இந்தச் சோலையில் இளைப்பாறிச் செல்வார்கள்.
போர் முடிவுற்ற பின்னர், தென்பகுதி சுற்றுலாப்பயணிகளும் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் குடாநாட்டுக்கு வரும்போது, சென்று பார்க்கும், இளைப்பாறும் முக்கிய சுற்றுலா இடமாக    இப்போது  நிலாவரை கிணற்றை அண்டிய சுற்றாடல் மாறிவிட்டது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில்  குடாநாட்டு பனை உட்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் குளிர்பானக் கடைகளும் இங்கு வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.
நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் சிவன் கோவில் ஒன்றும் காணப்படுகின்றது. இது மிகவும் புராதனமான சிவாலயமாகும். யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் இலக்கிய நூலான தட்சண கைலாய புராணத்தில், இந்த 
சிவாலயம் குறித்த விவரங்கள் காணப்படுகின்றன. தட்சண கைலாய புராணத்தில் ‘நவசைலேஸ்வரம்’ எனக் குறிப்பிடப்படும் ஆலயம் நிலாவரையில் அமைந்துள்ள சிவன் ஆலயமாகத்தான் இருக்க வேண்டும் என்ற தற்துணிபு பல சமய, வரலாற்று அறிஞர்களிடம் 
காணப்படுகின்றது.
நிலாவரை தொடர்பான கர்ணபரம்பரைக் கதையும் 
இராமாயணத்துடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகிறது. இராமன், சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிவதற்கு, வானரப் படைகளுடன் இலங்கை வந்தபோது, வானரப்படைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது அம்பை ஊன்றி, நீர் எடுத்த இடமே இது என்று  அந்த கர்ண 
பரம்பரைக்கதை கூறுகிறது.
எது எவ்வாறாயினும், நிலாவரைக் கிணறு, குடாநாட்டில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட  வேண்டிய தொட்டுணரக் கூடிய
 மரபுரிமைச் சொத்தாகும்.
அது, இன்று பெற்றிருக்கும் பிரபல்யம், சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய தனித்துவம் போன்றவை காரணமாக இந்தப் பகுதி சுற்றுலாவுக்குரிய  வசதிவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இங்கு வரும் மக்கள் சந்தோஷமாகத் தமது பொழுதைப்போக்கிச் செல்ல வசதிகள் செய்து 
கொடுக்கப்பட வேண்டும்.
தரமான உணவுவிடுதிகள், சிறுவர் பூங்கா, தங்கும் விடுதிகள் அத்துடன் பாதுகாப்பு போன்ற உல்லாசப் பயணிகள் எதிர்பார்க்கும் வசதிவாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு திட்டங்கள் வகுத்துச் செயற்படுத்தப்படுமானால் இப்பகுதில் வேலைவாய்ப்பற்று இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிைடப்பதுடன் பொருளாதார
 முன்னேற்றத்துக்கான அடிப்படைகளும் உருவாக்கப்படுவதாக அமையும். இருக்கும் வளத்தை நிறைவாகவும் திறமையாகவும் பயன்படுத்தினால் முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமே..
( இரண்டாம்  பதிவு )என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



Blogger இயக்குவது.