செவ்வாய், 19 செப்டம்பர், 2023

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்பெறுமதி வாய்ந்த சிகரட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் 45 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் 
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
  சுங்க திணைக்கள அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கைதானவர்களிடம் இருந்து 45 ஆயிரம் வெளிநாட்டு 
சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவை 45 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளது.  
கல்முனை பகுதியைச்சேர்ந்த ஆணொருவரும், யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.