வியாழன், 30 நவம்பர், 2023

கொரியாவில் நாய் இறைச்சி தடைக்கு எதிராக பண்ணையாளர்கள் போராட்டம்

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு
 வருகின்றனர்.
தென் கொரியாவில் நாய் இறைச்சியை அந்நாட்டு மக்கள் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். 
இந்நிலையில் நாய்க்கறி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதை பரிசீலித்த அந்நாட்டு அரசு கடந்த
 செப்டம்பரில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம் 
இயற்ற பரிசீலித்தது. 
பின்னர் நாய் இறைச்சிக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுதும் நாய் பண்ணையாளர்கள், நாய் இறைச்சி பிரியர்கள் அரசுக்கெதிராக போராட்டத்தில் இறங்கி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக 
அந்த நாட்டில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 29 நவம்பர், 2023

யாழ் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி அபகரிக்கப்படும் அபாயம்

யாழ் மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்ட அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக
 ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் 
தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார்.
“அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி தொடர்பில் அண்மையில் பொது அமைப்புகளுடன் சங்கானை பிரதேச செயலாளர் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினார்.
அதன் போது, குறித்த பகுதி மக்கள் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு 
திணைக்களத்தின் 
வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.
கரையோர பகுதி மக்களின் வாழ்வாதரம் கடற்கரையை நம்பியே காணப்படுகின்றது. மாட்டுவண்டி சவாரித்திடல், சுடுகாடுகள், விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. 
கவே, வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் முன்மொழிவை முற்றிலும் எதிர்க்கிறேன். இதேவேளை, குறித்த பகுதியை வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கினால் விகாரைகள், சிங்கள 
குடியேற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் 
சந்தேகிக்கின்றனர்.
எனவே,யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் குறித்த முன்மொழிவை நிராகரித்து வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இல்லையேல் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 28 நவம்பர், 2023

தென் கொரியாவில் கவிதை எழுதியதற்காக சிறைத் தண்டனை விதிப்பு

வடகொரியாவைப் புகழ்ந்து கவிதை எழுதியதற்காக தென் கொரியாவில் 68 வயது நபர் ஒருவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் அந்த நபருக்கு சிறைத்தண்டனை விதித்தது, 
இது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில்வழங்கப்பட்டது. “ஒருமைப்பாட்டின் வழிமுறகள்” 
என்ற தலைப்பில் கவிதை 2016 இல் வடக்கின் மாநில 
ஊடகங்களில் 
மேலும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களில் ஒருவர். பெயர் குறிப்பிடுவது போல, கவிதை இரண்டு கொரியாக்களை ஒன்றிணைக்க வாதிடுகிறது. வடகொரிய பாணி சோசலிச அமைப்பில் 
இரு கொரியாக்களும் ஒன்றிணைந்தால் இலவச வீடு, 
இலவச மருத்துவம், இலவசக் கல்வி கிடைக்கும் என்று அந்தக் கவிதையில் நாயகன் கூறியுள்ளார்.
அந்த நபர் முன்னர் ஒரு தனி சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு 10 மாதங்கள் சிறையில் இருந்தார். 2013 ஆம் ஆண்டில், அவர் வட கொரியாவின் இராணுவத்தைப் புகழ்ந்து ஆன்லைன் கருத்துகளையும் வெளியிட்டார்,
 மேலும் அடுத்த ஆண்டுகளில் தென் கொரிய வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான உள்ளடக்கத்தை தொடர்ந்து வெளியிட்டார்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 27 நவம்பர், 2023

நாட்டில் வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் மக்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தை 
குறிப்பிட்டுள்ளார். 
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எங்களுடைய வரைபடத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகள் 
இருந்தால் அதனை அடையாளப்படுத்த நடவடிக்கை 
எடுத்துள்ளோம்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் படி நான் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய அந்த படங்களை மக்களுக்கே மீள 
வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கமைய, 
எனது அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவசாரிகள் திணைக்களத்தின் செயலாளர் நாயகம் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.
மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள இவர்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடங்கள் எவை என்பது குறித்து முழுமையான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர். அந்த தகவல்களுக்கு அமைய இறுதி அறிக்கையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலாளரின் தலையிலான குழுவிடம் சமர்ப்பித்து, அதனூடாக காணி ஆணையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பின்னர் அந்த காணிகளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
இதனைத் தொடர்ந்து உரிய காணியை, காணி உறுதி பத்திரத்துடன் மக்களிடம் வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 26 நவம்பர், 2023

நாட்டில் மருந்துகள் உள்ளிட்ட ஆய்வக பொருட்கள் பாவனையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நாட்டில் 2022ஆம் ஆண்டு அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பொருட்களில் 349 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வுக்கூடப் பொருட்கள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின் பிரகாரம், இந்த விடயங்கள்
 தெரியவந்துள்ளன. 
இதன்படி  உரிய மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வகப் பொருட்கள் செயலிழந்ததன் காரணமாக பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மேலும், கடந்த வருடத்தில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான
 மருந்துகளின் பாவனை தோல்வியின் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வழங்குவதற்கு முன், அவற்றின் நிலையைப் பரிசோதிக்கும் திறன் மருத்துவ வழங்கல் 
துறைக்கு இல்லை என்றும், அதனால் மருந்துகள் பழுதடைந்ததாகத் தெரிவிக்கப்படும் நேரத்தில் நோயாளிகள் பெரும்பாலான 
மருந்துகளை ஏற்கனவே பயன்படுத்தியிருப்பதும் தணிக்கையில் தெரியவந்துள்ளது. . 
இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், சுகாதாரத் துறையை நடத்துவதில் அத்தியாவசிய பதவிகளில் 1,331 மருத்துவ அதிகாரிகளின் வெற்றிடங்கள் இருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
மேலும், 77 பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், 1,759 செவிலியர்கள், 275 செவிலியர்கள், 136 மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், 68 தொழில் சிகிச்சையாளர்கள், 126 மருந்தாளுனர்கள் மற்றும் 270 ஆடிட்டர்கள் காலியாக இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 25 நவம்பர், 2023

கொழும்பு நோக்கி மாத்தறையில் இருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியது

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இரத்மலானை கொலுமடம சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 
சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்தின் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது. 
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 24 நவம்பர், 2023

நாட்டில் கடத்தப்படும் குழந்தைகள் தீவிர விசாரணையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்

இலங்கையில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிரப்படுத்தியுள்ளது.
 இந்த குற்றங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் 23-11-2023.அன்று  தெரிவித்துள்ளனர்.
 அதிகளவிலான குழந்தைகள் கண்டி பிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
 இந்த கடத்தல் தொடர்பாக நோர்வேயில் இருக்கும்
 இலங்கை பிரஜை ஒருவரிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இது தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.