சனி, 23 செப்டம்பர், 2017

கிட்டியும் புள்ளும் விளையாட்டும் அதன் பாடலும் இணைப்பு

கிட்டிப்புள் விளையாட்டு பற்றி  பின்வருமாறு குறிப்பு உள்ளது. கிட்டியும் புள்ளும் விளையாட்டே இன்றைய கிறிக்கற் விளையாட்டின் மூலவேர் என ஆய்வுகள் கூறுகின்றன.
”கிட்டிப்புள்” சிறுவர்கள் ஆடும் ஒரு விளையாட்டு.
கிட்டிப்புள், கிட்டிக்கோல் ஆகியவை இந்த விளையாட்டுக்குப் பயன்படும் கருவிகள். கிட்டிப்புள் சுமார் மூன்றுவிரல் பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. கீந்துகுழி ஆட்டத்துக்கு அதன் இரு முனைகளும் கூராக இருக்கும். அடிகோல் ஆட்டத்துக்கு முனைக்கூர் இருக்காது. கிட்டிக்கோல் ஒருவிரல் அல்லது இருவிரல் பருமனும் சுமார் 50 செனடிமீட்டர் நீளமும் கொண்டது.
ஆட்ட வகை
கிட்டிப்புள் விளையாட்டில் இரண்டு முறைகள் தமிழத்தில் இருந்து வந்தன.
கீந்து-குழி ஆட்டம் (இந்தியாவிலும், இலங்கையிலும்)
அடிகோல் ஆட்டம்
ஆடிவோர் வகை
குழு ஆட்டம்
அணி ஆட்டம்
குழு ஆட்டத்தில் ஒருவர் அடிக்க ஏனையோர் எதிராளி ஆவர். அணி ஆட்டத்தில் ஆடும்-அணி, எதிர்-அணி என இரு குழுக்கள் அமையும்.
கீந்துகுழி ஆட்டம்
ஆட்ட அரங்காகக் குதிக்காலால் திருகிய குழி, அல்லது சுமார் ஒருமுழம் நீளத்தில் செய்யப்பட்ட குழி அமைக்கப்படும். குழியில் ஒருமுனை இருக்கும்படி கிடைமட்டமாகக் கிட்டிப்புள் வைக்கப்படும். இந்தப் புள்ளைக் கிட்டிக்கோலால் தட்டிவிடுவர்.
 இதற்குத் தெண்டுதல் என்று பெயர்.
புள் பறக்கும்போது கிட்டிக்கோலால் அடிப்பர். புள் தொலைதூரம் செல்லும். எதிரில் உள்ளவர், அல்லது எதிர்-அணியினர் பறந்துவரும் புள்ளைப் பிடிக்கவேண்டும். இவ்வாறு தடியால்(கிட்டிக்கோலால்) குழியிலிருந்து தெண்டி(கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டாகும்.
புள் வீழ்ந்த இடத்திலிருந்து குழியை நோக்கிப் புள்ளு வீசப்படும். அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும்.
இந்த கிட்டிப் புள் தடியைத் தெண்டில், தாண்டில் என்றெல்லாம் சேலம் மாவட்டத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டம் வேறு வகையிலும் ஆடப்படும்.
வேறு வகையான விளக்கம்
அடிகோல் ஆட்டம்
அடிகோல் ஆட்டத்தில் கீந்துகுழி இல்லை. கிட்டிப்புள்ளின் முனை கூராக இருக்காது. ஒவ்வொருவரும் 4 முறையில் விளையாடவேண்டும்.
ஒன்றான் (வெற்றிப்புள்ளி 1)
ஒருகையால் புள்ளைத் தூக்கிப் போட்டு, மற்றொரு கையிலுள்ள கோலால் அடித்தல்
இரண்டான் (வெற்றிப்புள்ளி 2)
ஒரு கையிலுள்ள கோலின்மீது புள்ளை வைத்துத் தூக்கிப்போட்டு அதே கையிலுள்ள கோலால் அடித்தல்
மூன்றான் (வெற்றிப்புள்ளி 3)
ஒரு கையின் ஆள்காட்டி-விரல், சுண்டு-விரல் ஆகியவற்றில் புள்ளை நிறுத்தித் தூக்கிப் போட்டு மறுகையில் உள்ள கோலால் அடித்தல்
நாலான் (வெற்றிப்புள்ளி 4)
ஒரு காலின் மேல்-பாத்ததில் புள்ளை நிறுத்தி அக்காலால் தூக்கிப்போட்டுக் கையிலுள்ள கோலால் அடித்தல்
ஆடும் முறை
ஒன்றான், இரண்டான், மூன்றான், நாலான் முறைமையை ஒவ்வொருவரும் வரிசையாகப் பின்பற்ற வேண்டும். ஆட்டம் தவறாமல் ஆடினால் ஒருவர் தொடர்ந்தாற்போல் 4 படிநிலைகளையும் முடித்து 10 வெற்றிப் புள்ளிகளையும் ஈட்டலாம். ஒன்றில் ஒருவர் தவறினால் ஆட்டம் அடுத்தவர் கைக்கு மாறும். எல்லாரும் அடித்து முடிந்தபின் மறுமுறை ஆட்டம் வரும்போது ஒவ்வொருவரும் தான் தவறிய படிநிலையில் ஆடவேண்டும். ஒரு படிநிலை முடிந்தால்தான் அடுத்த படிநிலை.
பந்தைப் பிடித்தல்
ஒருவர் புள்ளை அடிக்கும்போது பிறர் பறந்துவரும் புள்ளைக் கையாலோ, துணியை விரித்தோ பிடிக்கலாம். புள் தரையில் விழாமல் பிடிக்கப்பட்டுவிட்டால் அடித்து-ஆடியவர் ஆட்டம் 
இழப்பார்.விழுந்த புள்ளை எறிதல்
பிடிபடாமல் புள் விழுந்துவிட்டால் அதனை எடுத்து அடித்த உத்திக் குழி அடையாளத்தை நோக்கி எறிவர். எறியும் பந்தை அடித்தவர் தடுத்து அடிக்கலாம். அடித்தாலும் அடிக்காவிட்டாலும் புள் விழுந்த இடத்திலிருந்து உத்திக் குழி வரையில் தான் அடித்த கோலால் அளந்து வரும் எண்ணிக்கையைத் தன் வெற்றிப்புள்ளி ஆக்கிக் கொள்ளலாம். புள் விழுந்த இடத்துக்கும், உத்திக்கும் இடையேயுள்ள இடைவெளி அவரது கோலின் அளவுக்குக் குறைந்தால், அடித்தவர் ஆட்டம் 
இழப்பர்.தண்டனை
ஆட்டத்தின் முடிவில் குறைந்த புள்ளிகள் பெற்றவருக்குத் தண்டனை உண்டு. அதிக புள்ளி பெற்றவர் தன் விருப்பம்போல் புள்ளைப் பிடித்துத் தொலைவுக்கு அடிப்பர். அங்கிருந்து பிறர் ஒவ்வொருவராக அவரவர் அடிக்குப் புள் சென்ற தொலைவிலிருந்து மூச்சுவிடாமல் பாடிக்கொண்டே கிட்டி அடித்த உத்தி-இடத்தைத் தொடவேண்டும்.”
கிட்டியும் புள்ளும் பாடல்
மாம்பட்டை மருதம்பட்டை
வௌவாலோடிய தென்னம்பட்டை
பூம்பட்டை புளியம்பட்டை
பட்டணம் பட்டணம் பட்டணம்….
பாக்குப் பழுத்தால் பதினாறோலை
மூங்கிலோலை முதிரப்பட்ட
வேட்ட வாளி பட்டணம் பட்டணம்….
ஆலையிலே சோலையிலே
ஆலம்பாடிய சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
கிறுகியடிக்கப் பாலாறு
பாலாறு பாலாறு பாலாறு
ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
அவிட்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கி இறுக்கிக் கட்டு
ஈச்சாலை தும்போலை
பாக்குப் படிச்ச வண்ணான் ஓலை
மூங்கிலோலை முதிரைக்குத்தி
வேட்ட வாளி பட்டணம் பட்டணம்….
கீழாறோலை மேலாறோலை
எண்ணிப் பார்த்தால் பதினாறோலை
கிட்டிப் புள்ளும் பம்பரம்
கிறுகியடிக்கப் பாலாறு பாலாறு….
ஆலஞ்சருகு மடமடன்ன
ஆங்கோர் வண்டி உருண்டுவர
சோலைக் கிளியார் கொத்தியடிக்க
நாய் குலைக்க நல்லாண்டம்மா
பையோடா பையோடா….
நத்தை சூரி புல்லுத்தின்ன
நறுவிலி சங்கிலி பாராயோ
காரா வென்கிற பசுவைக் கண்டால்
கடைக்கண்ணாலே பாராயோ
பாராயோ பாராயோ….
கண்ணாம் பொத்தி கடகட மார்
ஆலஞ்ச நகு மடமட வெனவே
அங்கொரு வண்டிலுருண்டு வரக்
காலடி வரப் பொழுதேறிவரத்
தொந்தட்ட தெரு தட்ட
தெருவெங்கும் பொறி தட்ட தட்ட
பூம்பட்டை புளியம்பட்டை
வௌவாலோடிய தென்னம்பட்டை
பட்டணம் பட்டணம் பட்டணம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 11 செப்டம்பர், 2017

மரணஅறிவித்தல் அமரர் சுப்பிரமணியம். இராமச்சந்திரன்.11.09.17.

யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட   (குட்டி கடை உரிமையாளர்) அமரர் சுப்பிரமணியம்   இராமச்சந்திரன்  (குட்டி)   அவர்கள் 11-09-2017. திங்கட்க்கிழமை  அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம். தங்கரத்தினம் (செல்லம்மா)    தம்பதிகளின் அன்பு மகனும் ,  
    அமிர்தகௌரி அவர்களின் அன்பு கணவரும் 
    தினேஸ்ராஜ்  திலக்சன்  சதுசா  ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  கருணாநிதி .  சரஸ்வதி  (செல்வராணி) புஸ்பராயா  சௌந்ராஜா  ரவிச்சந்திரன்   
 ஆகியோரின்  அன்புச்சகோதரனும் ஆவார்.
நிகழ்வுகள்
  அன்னாரின் இறுதிக்கிரியை திகதி-  12/09/2017, 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி  வரை   செவ்வக்கிழமை. அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று
   
 அன்னாரின்  நல்லடக்கம்
திகதி:  12/09/2017  செவ்வக்கிழமை- பி.ப 2:00. மணிக்கு ;.முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வியாழன், 7 செப்டம்பர், 2017

கோர விபத்தில் இளம் குடும்ப பெண் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.


 நிந்தவூரில் பைக் மீது பாரவூர்தியொன்றும் மோதுண்டதில் பெண்ணொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.
குறித்த விபத்தில் அட்டப்பழம் பகுதியை சேர்ந்த இளம் குடும்ப பெண் ஒருவரே பலியாகியுள்ளதோடு, கணவன் மற்றும் பிள்ளை உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.(நிழல் படங்கள் இணைப்பு) 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 4 செப்டம்பர், 2017

யாழ் நெடுந்தீவில் 40 அடி மனிதனின் காலடியொன்றுகண்டுபிடிப்பு!

இலங்கையின் வடபகுதித் தீவுகள் அனைத்தும் இந்துமகாசமுத்திரம் வங்காளக் குடாக்கடல் அரபிக் கடல் எனும் முப்பெரும் பாரிய நீர்ப்பரப்புகளின் இடையே நிலைகொண்டவை வட தென் பருவக்காற்றுக்கள் ஓயாது நீண்ட தூரம் தள்ளிவரும் வேகமான அலைகளுக்கு முகம் கொடுத்தும் தொடர்ந்து வாழும் கரைக் கட்டுமானமுடையவை.
இவை தமது இருப்பை இதுவரை பேணுவது என்பது கற்களின் வலிமையால் மட்டுமே! அதிலும் கற்களின் வலிமையின் விசேடத் தன்மை அகமும் புறமும் நெடுந்தீவுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.
நெடுந்தீவின் அடித்தளப் பாறையும் மற்றத் தீவுகளை விட அகலமானதும் விரிந்து கிடப்பதுமாகும். நாற்புறமும் இறவட்டம் எனப்படும் கரைப்பகுதியே 500 மீற்றருக்குக் குறையாத தூரத்தைக் கொண்டது. கடல்நீர் வற்றும் போது இதைப் பார்க்கலாம். இறவட்டத்தில் பாரிய இயற்கை கற்கள் நாற்புறக் கடலிலும் நட்டுக் கொண்டும், பரவலாகவும் நிறைந்து அலைகளை எதிர்கொள்கின்றன.
தரைப் பரப்பிலும் மண்பரப்பைவிடவும் கற்பரப்பு மிகமிக அதிகமானது. அங்கு வாழ் மக்களின் உடலுரம் எதற்கும் முகம் கொடுக்கும் நெஞ்சுரம் எனும் பண்புகளின் அடித்தளமே இப் பாறைகளோ என்ற கேள்வி எழுமளவுக்கு இந்தக் கற்பரப்போடு மூதாதையர் போராடியிருக்கிறார்கள்.
நிலமட்டக் கற்பரப்பின் கற்களைக் கிளப்பியெடுத்து விவசாயத்துக்கு நிலமமைத்தார்கள். கிளப்பியெடுத்த அதே கற்களைக்கொண்டு பயிர்ப்பாதுகாப்புக்கு வேலிகள் அமைத்தார்கள்.
சரைப் பகிர் எனப்படும் சிறுகற்களின் அத்திவாரம் 20-30 சென்ரிமீட்டர் உயரமாக அழகாக அடுக்கப்பட்டு அதன்மேல் பெருங்கற்களின் உறுதியான அடுக்குகள் அடுக்கப்பட்டு அழகிய மதில் போல் காட்சிதரும் கற்களின் கட்டுமானம் கற்பகிர்கள் என்றழைக்கப்படுகின்றன.
பகிர்(வேலி) கட்டும் பயன் பாட்டுக்குரிய கற்கள் முருகைக் கற்கள். இவை நடுத்தரப் பாரமானவை. கல்வேலி இரட்டைப் பயனுடன்பலநூறு ஆண்டுகளுக்கு அழியாதிருக்கும் எல்லைபேணும் சொத்து. இதைப் பார்க்கவும் நெடுந்தீவுக்குப் உல்லாசப் பயணிகள் 
வருவதுண்டு.
மென் முருகை எனச் சற்றுப் பாரம் குறைந்த சுண்ணக்கற்கள்(காபனேற்கற்கள்) இவற்றின் பயன்பாடு ஒரு காலத்தில் நெடுந்தீவின் ஏற்றுமதிப் பொருளாதாரமாகவும் இருந்தது.
சுண்ணக்கற்களைச் சிறு சிராய்களாக உடைத்து பூவரசு மஞ்சவண்ணா வேம்பு கட்டை விறகுகளை அடுக்கி அந்த அடுக்குகளின் மேல் கற் சிராய்கள் அடுக்கி மாறி மாறிப் பல அடுக்குகள் குவியமிட்ட ஒரு பிரமிட் போன்ற வடிவத்தில் 40-50 அடி உயரத்தில் குவித்து எரியூட்டுவார்கள்.
சுண்ணாம்புச் சூளை எனப்படும் இது எரிந்து ஆறிச் சுண்ணாம்பாக எடுக்கும் காலம் ஒரு வாரத்தையும் தாண்டும். சீமேந்து தொழிற்சாலை வருவதற்கு முன் வட பிரதேசம் பூராவும் கட்டுமானப் பணிகளுக்கு இந்த சுண்ணாம்பே உதவியது ஏற்றுமதியானது.
இதைவிட ஒரு வகைப் பாறைகளாகக் கோளான்கள் அகழப்பட்டன. கிறனைற் எனப்படும் கருங்கற் தீப்பாறைகள்(மலைப்பாறைகள்) வகையைச் சார்ந்தவைகள் என்றாலும் இவற்றின் நிறம் வெண்மையை அண்டிப் போகும் மரநிறத்தைக் கொண்டவை.
இவை தூக்கிக் கையாளமுடியா அளவுக்குப் பாரமானதும் கடினமானதுமான கற்கள் என்பதால் அகழும் இடங்களில் வைத்து சிறுக உடைத்து ஏற்றிச் சென்று சல்லிகளாக உடைத்து சீமென்ற் கற்கள் அரிவதற்குப் விற்பார்கள். கல்லுடைப்பதை வாழ்நாள் தொழிலாகக் கொண்டு வாழ்ந்த பல குடும்பங்கள் அன்று ஊரில் இருந்தன. இன்று ஒருவர் கூட அந்தத் 
தொழிலோடு இல்லை.
இதே கோளான் கற்கள் தனித் தனிப் பாறைகளாக இல்லாமற் பெரிய பரப்புகளில் படர்ந்த பாறைகளாகவுமுள்ளன. இந்தப் பாறைப் படர்வுகள் சீமெந்தால் மெழுகியதுபோல அழுத்தமான மேற்பரப்பை 
அண்டிய தோற்முடையவை.
இந்தப் பாறைப் படர்வுகளில் ஒரு புல் நுனியைக் கூடக் காணமுடியாது. கடப்பாறையோ அலவாங்கோ போட்டால் நெருப்புப் பொறி பறக்கும் அளவுக்கு கெட்டியானவை இலகுவில் உடைவுக்குட்படாதவை.
நெடுந்தீவில் இப் படர்வு பெரிதாகவுள்ள இடங்கள் சாறாப்பிட்டியும், தொட்டாரமும். யாழ் குடாநாட்டிலும் திருநெல்வேலி புத்தூர் காங்கேசன்துறை வசாவிளான், கைதடி இன்னும் சில சில
 இடங்களில் இது போன்ற பாறைப்படர்வுகள் காணப்படுகின்றன. இப்படியான தோற்றமுள்ள நிலப் பகுதியைப் பொதுவாகக் கலட்டி என்றபெயரில் அழைப்பார்கள். நெடுந்தீவில் பகுதிப் பெயரல்லாமல் பரவைக் கற்கள் என்றே 
அழைக்கப்படுகின்றன.
தொட்டாரத்தில் இடைவிட்டு இடைவிட்டு அதிக பரப்பிலிருந்தாலும். சாறாப்பிட்டியில் இந்தப் படர்வின் பரப்பு 10 அல்லது 12 ஏக்கர் அளவைத் தாண்டும் தொடர்பரப்பாகவுள்ளது. படர் பாறைகளின் சராசரி ஆழமும் 10-12 அடிகளுக்குக் குறையாதிருக்கும்.
இப்போ உங்கள் கற்பனையைப் பறக்கவிடுங்கள் பத்து ஏக்கர் பரப்புள்ள, பத்தடி ஆழமான, இரும்பு போலக் கெட்டியான ஒரு பாறையில் 40 முழ மனிதன் மிதித்தாலோ 400 கோடி தொன் எடையை வைத்தாலோ சேற்றில் பதிவது போல ஒரு பதிவையோ தடயத்தையோ ஏற்படுத்த முடியவே முடியாது. அப்படியிருக்க இந்த ஐதீக மனிதப் பாதம் எப்படி?
அங்கு அகன்ற மனிதப் பாத வடிவமொன்று காணப்படுகிறது உண்மை தான்! பாதமோ மேல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ மூன்று அங்குல ஆழமாகப் பதிந்திருக்கிறது. இது மனிதன் மிதிப்பதால் சாத்தியமாகுமா?
நம்பகத் தன்மையை முழுமையும் மறுதலிக்கின்றதான கீழுள்ள நான்கு அனுமானங்களையும் பார்ப்போம்.?
1. நாற்பது முழத்தில் எப்போ மனிதனிருந்தான்? நான்கு முழ மனிதனையே காற் பாதத்தின் அளவை வைத்து உயரத்தைத் துல்லியமாச் சொல்லிவிட முடியாது. ஒரே உயரமான எல்லோருக்கும் ஒரே அளவான சப்பாத்துக்கள் பொருந்துவதில்லை.
அது போகட்டும் காலுள்ள இடம் நெடுந்தீவின் தென் மேற்குத் தொங்கல் வடகிழக்குத் தொங்கலுக்கு குறைந்தது 7 கிலோமீட்டர் தூரமிருக்கும்! 40 முழ உயர மனிதனாக இருந்தாலும் 20 அடிக்கு மேல் கவடு எட்டி வைக்க முடியுமா? கவுண்டன்-செந்தில் வாழைப்பழப் பகிடிமாதிரி ஒரு காலிங்க இருக்கு மற்றக்காலெங்க? சரி மண்ணில தான் வைபட்டாலும் இந்தக் கல்லில இந்த அழுத்தமெண்டால் மண்ணில ஒரு நிலாவரைக்கிணறு
 காணணுமே.
2. கற்பனைக் கதையின் கற்பனைப் பாத்திரங்களை நிஜமாக நம்பிக் கடவுளாக்கி, மலையைத் தூக்கியது கடலுக்கடியில் பாலமிருக்கிறது என்று கடைஞ்செடுத்த ராமாயண-பாரத முட்டாள் தனத்தில் அலையும் மக்கள் தானே இதையும் சில வேளை நம்புவார்கள்.
3. மனித பாதச் சுவட்டினைப் போன்ற கற்பாறைகள் அத் தீவெங்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. என்றுமொரு செய்தியும் பிரசுரமாகியிருந்தது.
இது முழுமையும் தவறான செய்தி நிலத்தில் கண்டெடுக்கும் கற்களை அண்ணளவாக ஒரு தோற்றத்தில் உருவகப்படுத்திப் பார்க்கலாமே தவிர. மனித வேலைப்பாடுகளாலானவையா துல்லியமாகவோ புதைபாட்டுச் சிதைவுகளோடோ காணமுடிந்த உருவப் பாறைகளா என்ற விபரங்கள் எதுவும் செய்தியில் கிடையாது.
4. பௌதீகக் காரணங்களான வெப்பமும், நீரும் சிதைக்கலாம். கரிய நிறப் பாறைகளில் வெப்பம் உறிஞ்சப்படும் போது மேற்பரப்பு மட்டும் அதிக வெப்படையும் காரணத்தால் கற்கள் சிதைவதும், நீரால் கரைக்க முடியாத பொருளில்லை என்பதால் நீரரிமானத்தாலும் சிதைவுகள் ஏற்பட்டிருக்கலாம் அந்த வகை வாய்புகளும் மிகக் குறைவு.
இப்பாறைகளின் அழுத்தமான பரப்பும் வெள்ளை சார் நிறமும் ஒளித் தெறிப்புக்கு வாய்ப்பே தவிர அதிகம் உறிஞ்சாது.
இத் தீவில் மழை நீரின் பொழி குறைவு அப்படி பொழிந்து மாரி வெள்ளம் வந்தாலும் ஒரிரு நாளுக்கு மேல் சாறாப்பிட்டி வெளியில் தங்குவதில்லை. ஓடி வடிந்துவிடும். இந்த இரு காரணிகளும் கூடச் சிதைவை ஏற்படுத்த வாய்ப்பற்ற போது விரல்களே துல்லியமாத் தெரியும் ஆழமான பாங்கான பாதத்தின் பதிவு எப்படி?
இந்த கிறனைற் பாறைகளின் 10 – 12 அடி ஆழத்தின் கீழ் கோறல்லைம்ஸ்ரோன் என்ற கொத்தைக் கல்சியப் பாறைகளின் படிவுகள் காணப்படுகின்றன.
காற்றுப் புகும் இடைவெளிகொண்ட இவையுள்ள இடமெல்லாமே அருமையான நன்னீர் ஊற்றுக்கள் வருகின்றன. இதையறிந்துகொண்டு சாறாப்பிட்டியில் முதலில் நான்கு நன்னீர்க் கிணறுகள் தோண்டப்பட்டிருந்தன.

இது தாச்சாயின் மலைக் குகைகளைப் பொழிந்து பாதையமைத்தது போல் கல்லுளிகள் கொண்டு பொழியப்பட்ட கிணறுகள். இக்காலம் நெடுந்தீவினை ஒல்லாந்தர் வைத்திருந்த காலங்களாக இருக்கலாம்
 என்ற கணிப்பு.
இந்தப் பொழிதலுக்காக வரவழைக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக அமைத்திருந்த கூடாரமருகே இவர்கள் பொழுதுபோக்காகப் பொழிந்தெடுத்த ஒரு காலடிச் சித்திரம் தான் கதைமாறி நாற்பது முழ மனிதனின் பாதமாக இன்று சொல்லப்படுகிறது
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

Blogger இயக்குவது.