வியாழன், 29 பிப்ரவரி, 2024

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு தனியார் பேருந்து சாரதிகள் போராட்டம்

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து உாிமையாளர்கள் இலங்கை போக்குவரத்து 
சபை பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்
 ஈடுபட்டுள்ளனர்.
 குறித்த போராட்டம் இன்று (29.02.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்ட துார தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள்
 யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் தனியார் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனா்.
 பொலிஸார் தலையிட்டு சில இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை முற்றுகையிலிருந்து விடுவித்த போதும் சுமுகமான சேவை இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 மேலும், சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனியார் பேருந்து உாிமையாளர்களின் கோரிக்கை தொடர்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநர் மற்றும் அரச அதிபரை சந்திக்க அழைத்துச் சென்றுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 28 பிப்ரவரி, 2024

நாட்டில் புலிச்சகுளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒன்றுக்கூடிய மக்களால் பதற்றம்

புலிச்சகுளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒன்றுத்திரண்ட மக்கள் புகையிரத்தத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் 
ஈடுபட்டுள்ளனர். 
இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 
புகையிரதத்தை மறித்த கிராம மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்த இடத்தில் தற்போது கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.  
ஹலவத்தையில் இருந்து புத்தளம் நோக்கி இன்று பிற்பகல் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மோதி உயிரிழந்துள்ளார். 
பின்னர் புத்தளத்தில் இருந்து ஹலவத்தை நோக்கி புகையிரதம் சென்று கொண்டிருந்த போது புலிச்சகுளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தை மறித்து கிராம மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

நாட்டின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க நடவடிக்கை

நாட்டின் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்கட்டமைப்புக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தீவிரமாக பயன்படுத்த
 வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.  
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கிழக்கு சீனாவில் உள்ள சோங்கிங் துறைமுகம் மற்றும் ஆபிரிக்கா வரை மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேற்கு, கிழக்கு மற்றும் ஹம்பாந்தோட்டை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். 
மொனராகலை பிரதேசத்தில் மேலதிகமாக உள்ள 
ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைப் பயன்படுத்தி புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கும் திட்டத்தையும் ஜனாதிபதி 
வெளிப்படுத்தினார்.
மேலும், நகர நெரிசலைக் குறைப்பதற்காக அவிசாவளை மற்றும் அஹெலியகொட மற்றும் ஏனைய பிரதேசங்களின் மூலோபாய திறன்களைப் பயன்படுத்தி புதிய நகரங்களை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 26 பிப்ரவரி, 2024

நாட்டில் அதிக வெப்பமான காலநிலையால் பாடசாலை மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ள்ளது.
அதன்படி, குறித்த அறிக்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடும் நோய் நிலைமைகளும் அதற்கான முதலுதவிகள் குறித்தும் கல்வி அமைச்சு
 குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, அதிக வேர்வை, மயக்கம் மற்றும் உடல் சோர்வு, உடல் வெப்பம் அதிகரிப்பு, வலிப்பு, தலைவலி, நினைவிழப்பு, நாடித் துடிப்பு அதிகரிப்பு ஆகிய ​நோய்
 நிலைமைகள் ஏற்படும் கூடும் என அந்த அறிக்கையில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் விலகி நிழலான இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீரினை அருந்துதல் ( 15 நிமிடத்திற்கு ஒரு தடவை அரை கோப்பை நீர்) போன்ற முதலுதவிகளை 
வழங்குமாறும் வலிப்பு, நினைவிழப்பு போன்ற நோய் நிலைமைகளின் போது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலை செயற்பாடுகளில் ஈடுபடும் போது,
அதிக வெப்பமான வானிலை நிலவும் போது திறந்தவௌியில்/ மைதானங்களில் செயற்பாடுகளில் ஈடுபடுவதை
 தவிர்த்தல்.
மாணவர்கள் ஓய்வு பெறும் போது சூரிய ஔியில் விளையாடுவதை 
தவிர்க்க வேண்டும்.
அதிகளவில் நீரினை பருக செய்ய வேண்டும் மற்றும் களைப்பினை தவிர்ப்பதற்காக இரண்டு குறுகிய ஓய்வு காலத்தினை 
வழங்குவது சிறந்தது.
மதியம் அதிக வெப்பம் நிலவும் வானிலையின் போது தேவையில்லாமல் வௌியில் அழைத்துச் செல்வதை தவிர்த்தல். ( பாடசாலைகளை 
போன்று வீடுகளிலும்)
அதிக வெப்பமான தினங்களில் வீடுட்டின் அருகில் உள்ள மைதானங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபடுவதை 
தவிர்க்க வேண்டும். எனக்கூறியுள்ளனர் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு மத்திய வங்கி விளக்கம்

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் அங்கீகாரத்துடன் தொழிற்சங்கங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
 குறிப்பிடப்படுகின்றது.  
எழுத்துமூலம் அவகாசம் கோருமாறு ஆளுநர் சபையினால் விடுக்கப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த 22ஆம் திகதி நிதியமைச்சராக கடமையாற்றும் ஜனாதிபதிக்கு 
கடிதம் ஒன்றை அனுப்பியதாக அது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இது தொடர்பான உண்மைகளை விளக்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தின் பின்னர் உரிய பாராளுமன்றக் குழுவின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 24 பிப்ரவரி, 2024

நாட்டில் மத்திய வங்கியால் உயர்த்தப்பட்ட சம்பளம் மீளப் பெறப்படுமாம்

மத்திய வங்கியினால் உயர்த்தப்பட்ட சம்பளம் தமது அரசாங்கத்தின் கீழ் மீளப் பெறப்படும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள 
அவர், மத்திய வங்கி விருப்பப்படி ஊதியத்தை 
உயர்த்த முடியாது. 
மத்திய வங்கி தொடர்பான சட்டம் உள்ளது. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் அகற்றப்படவில்லை. நாடாளுமன்ற விவகாரத்துக்கென தனி சட்டம் உள்ளது. ஆனால் பாராளுமன்ற ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பாராளுமன்றத்தின் அனுமதி தேவை.
சுதந்திரம் என்பது பாராளுமன்றத்தைத் தவிர்ப்பது அல்ல. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்துக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் 
அளிக்கிறது. பின்னர் அவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை கணக்கிட முடியும். அதற்கும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. இவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டார்கள். 
இந்த சம்பளம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், உயர்த்தப்பட்ட சம்பளத்தை எங்கள் அரசாங்கத்தின் கீழ் வசூலிப்போம்' எனத் தெரிவித்துள்ளார். நாட்டின் திவால்நிலை மூன்று ஆண்டுகளாக
 மறைக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் கூட சொல்லப்படவில்லை. அவர்கள் எப்படி மீட்பர்களாக இருக்க முடியும்? அது சரி என்றால், அவர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்'' என்றார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.  
ஹபரணை – தம்புள்ளை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணி ஒருவரை வைத்து புகைப்படம் எடுப்பதற்காக காட்டு யானைக்கு அருகில் சென்றுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  நிலையில் மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இது ஆபத்தான செயற்பாடாகும் எனவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் காட்டு யானைகள் வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் 
சுட்டிக்காட்டியுள்ளனர்.  
வீதியின் அருகே வரும் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் பழக்கம் உள்ளதால், அந்த விலங்குகள் தினமும் இந்த வீதியில் சுற்றித்திரிகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பயணிகள் 
இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
. என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 22 பிப்ரவரி, 2024

நாட்டில் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக அமுல்படுத்த நடவடிக்கை

நாட்டில் ஒன்லைன் முறைமைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக சட்டமூலம் அமுல்படுத்தப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.   
ஸநிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இந்த சட்டத்தின் பிரகாரம் சிவில் வழக்குகளை தாக்கல் செய்ய முடியும் எனவும், தடை செய்யப்பட்ட அறிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்படுவதை தடுப்பதே இந்தச் செயலின் நோக்கமாகும் எனக் கூறிய அவர்.  இந்தச் சட்டத்தின் நோக்கம் தவறு செய்யும் ஆன்லைன் கணக்குகளைக் கண்டறிவதும், தடை செய்யப்பட்ட அறிக்கைகளை மீண்டும் மீண்டும் தொடர்புகொள்வதைத் தடுப்பதும் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
இந்தச் சட்டத்தின்படி சமூக ஊடகங்களில் ஏதாவது வெளியிடப்பட்டால், அதை வெளியிடுபவரே பொறுப்பேற்க வேண்டும் என்று டிஐஜி இறுதியாக வலியுறுத்தினார்.  என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 21 பிப்ரவரி, 2024

நடுவானில் கனடாவிலிருந்து புறப்பட்ட விமானமொன்றிற்கு மிரட்டல்

கனடாவிலிருந்து அமெரிக்கா சென்ற விமானத்தினை நடுவானில் வைத்து அதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஏர் கனடா விமானமானது திங்கட்கிழமை, கனடாவின் ஹாலிஃபாக்ஸிலிருந்து நியூஜெர்ஸியிலுள்ள Newark
 என்னுமிடம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை மதியம் 12 மணியளவில், அந்த விமானம் மிரட்டலிற்கு உள்ளானதாக  அமெரிக்க பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
 விமானிகள் அந்த விமானத்தை பாதுகாப்பாக Newark லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்கள். பயணிகள் 
அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும். யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள்
 தெரிவித்துள்ளார்கள். 
பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் விமானத்தினை சோதனை செய்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக எதுவும் கண்டுபிடிக்கப்படாமையால் விமான நிலையம் மீண்டும் அதன் பணிகளை தொடங்கியது.
 என்றாலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீட மாணவர்கள் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதித்தனர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் 
 20-02-2024.இன்று செவ்வாய்க்கிழமை வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில்
 ஈடுபட்டனர்.
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய தாம், 3ஆம் வருட 2ஆம் 
அரையாண்டில் கற்கிறோம்.
 எனவே தமது விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






திங்கள், 19 பிப்ரவரி, 2024

யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரதினால் : வெடித்த போராட்டம்

யாழ்மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து.19-02-2024. இன்றுகாலை ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 குறித்த போராட்டமானது, கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட்டது. 208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் 
பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை 
நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
 அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
 குறித்த பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

இளம் வயதினர் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் ஜப்பான்

கிழக்காசிய நாடான ஜப்பானில், மக்கள் தொகை வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல துறைகளில் பணியாற்றுவதற்கு போதிய இளைஞர்கள் இல்லாமல் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைந்து, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையிலிருந்து 4-வது நிலைக்கு ஜப்பான் தள்ளப்பட்டது.
மேலும், ராணுவத்தில் சேர்வதற்கும் போதுமான அளவு இளைஞர்கள் பல்வேறு காரணங்களால் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்நிலையில், ராணுவத்தில் இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை நீக்க ஜப்பான்
 முடிவு செய்துள்ளது.
அதில் ஒன்றாக, வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து, இனி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் சற்று நீளமான முடி வைத்துக் கொள்ள 
அனுமதிக்கப்படுவார்கள். இனி புதிய வீரர்கள், தலையின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் குறைவாகவும், மத்தியில் நீளமாகவும் வைத்து 
கொள்ளலாம்.
பெண்கள், சீருடையில் உள்ள போது தோள்களில் விழாத அளவிற்கும், ஹெல்மெட் அணியும் போது தடையாக இல்லாதவாறும், நீளமாக வைத்து கொள்ளலாம்.
 சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை சமாளிக்க அனைத்து வழிமுறைகளையும் 
ஜப்பான் எடுத்து
"அனைத்து துறைகளிலும் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் தனியார் துறையுடன் போட்டியிட்டு இளைஞர்களை ஈர்க்கும் நிலையில் உள்ளோம்" என பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா (மினொரு Kihara) தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 17 பிப்ரவரி, 2024

பெற்றோர்கள் குழந்தைகளின் ஸ்மாட் தொலைபேசிகள் பாவனையை பிரித்தானியாவில் எதிர்க்கின்றனரா

ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் மனநலத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதால், 4,000 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இளம் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பதைத் தடுக்கும் குழுவில் இணைந்துள்ளனர்.
 குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு மற்றும் குழந்தைகள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும்போது ஸ்மார்ட் சாதனங்களை
 வழங்குவதற்கான "விதிமுறை" பற்றிய அவர்களின் அச்சத்திற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் பள்ளி நண்பர்களான 
கிளேர் ஃபெர்னிஹோ மற்றும் டெய்சி கிரீன்வெல் ஆகியோரால் வாட்ஸ்அப் குழு ஸ்மார்ட்போன் இலவச குழந்தை பருவம்
 உருவாக்கப்பட்டது.
 "எனக்கு ஏழு மற்றும் ஒன்பது வயது குழந்தை உள்ளது. டெய்சிக்கு ஒரே வயதுடைய குழந்தைகள் உள்ளனர், நாங்கள் இருவரும் மிகவும் திகிலுடனும் கவலையுடனும் இருந்தோம், அவர்கள் 11 வயதில் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்க விரும்பவில்லை, இது இப்போது வழக்கமாக உள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

ஒன்ராறியோவில் இந்து கோயில் உண்டியல்களை உடைத்து கொள்ளை

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள இந்து கோவில்களை குறிவைத்து தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவது குறித்து இந்தோ-கனடிய சமூகம் வருத்தம் 
தெரிவித்துள்ளது. 
 இதுபோன்ற சமீபத்திய சம்பவம் இந்த வார தொடக்கத்தில் ஓக்வில்லி நகரில் உள்ள வைஷ்ணோ தேவி ஆலயத்தில் 
பதிவாகியுள்ளது. 
நள்ளிரவில் அல்லது அதிகாலையில், அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலில் உள்ள சிலைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த
 காணிக்கை பெட்டிகளில் இருந்து கணிசமான தொகையை கொள்ளையடித்துள்ளனர். 
 அதேபோல் பாதுகாப்பு கமராக்களும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு இந்தோ – கனேடிய சமூகம் கண்டனம் வெளியிட்டுள்ளமை    என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 15 பிப்ரவரி, 2024

நாடுதிரும்ப சாந்தனுக்கு இலங்கை அனுமதி! வழங்கப்பட்டது கடவுச்சீட்டு

இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளில் ஒருவரான சாந்தன் என்கிற சுதந்திரராஜா 32 வருட சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையாகி நாடு திரும்ப இலங்கை 
அனுமதித்துள்ளது இதன்படி சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகரகம் சாந்தனுக்கு இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மட்டும் தற்காலிக கடவுச்சீட்டை வழங்கியுள்ளது.
 எனினும், சாந்தன் என்கிற சுதந்திர ராஜா 32 ஆண்டுகள் சிறைக்கு பின்னர் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இந்தநிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை
 பெற்ற சாந்தனுக்கு
 சென்னையில் உள்ள இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகரகம் தற்காலிக பயண ஆவணத்தை வழங்கியுள்ளதாக சென்னை மேல் நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
 இருப்பினும், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து
 தன்னை விடுவித்து இலங்கைக்கு அனுப்பக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது மாநில அரசு நீதிமன்றத்தில் இதனை
 அறிவித்தது.
 இதேவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளாக தண்டனைப்பெற்ற நளினி மற்றும் ஸ்ரீஹரன் என்கிற முருகன் ஆகியோர் தங்களை லண்டனில் உள்ள மகளிடம் செல்ல அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
 எனினும், 2022 ஆம் ஆண்டு நவம்பரில், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் 
உத்தரவிட்டது.
 இருப்பினும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழக அரசு, குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பின்னரே 
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தண்டனைக்கு உள்ளான பேரறிவாளனை உயர் நீதிமன்றம் ஏற்கனவே விடுதலை
 செய்தமை என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 14 பிப்ரவரி, 2024

நாட்டில் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என எச்சரிக்கை

நாட்டில் தமது பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சர் எழுத்துமூல அறிவிப்பை வெளியிடும் வரையில் பணிப்புறக்கணிப்பு தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே 
இவ்வாறு தெரிவித்தார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள்  13-02-2024.நேற்று காலை 6.30 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

சிறைக்கு செல்வோரின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துள்ளன

இலங்கையில் நாளாந்தம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை 
ஊடகப் பேச்சாளர்
 காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளாந்தம் சுமார் 400 பேர் சிறைகளுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
 தற்போதைய சூழ்நிலையில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிர்வகித்து கைதிகளை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 இதுவரையில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





திங்கள், 12 பிப்ரவரி, 2024

இலங்கையர் ஒருவர் இஸ்ரேலில் பரபரப்பை ஏற்படுத்தியதால் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய ஒருவர் மீது இஸ்ரேலின் அரச வழக்கு தொடுநர் குற்றப்பத்திரிகையை 
தாக்கல் செய்துள்ளார்.
 இளம் பெண்ணை கடத்திச் சென்று கப்பம் கேட்டமைக்காகவே அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பல வருடங்களாக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமான முறையில் வேலை 
பார்த்த இலங்கை பிரஜை என்று குற்றப்பத்திரிகை
 கூறுகிறது. அவர் இஸ்ரேலில் தங்கியிருந்த காலத்தில், பெண் ஒருவரும் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களுக்கு இடையில் 
நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
 ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் மீண்டும் ஜோர்தான் எல்லையின் ஊடாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்துள்ளார். இதனையடுத்து அவர் குறித்த பெண்ணின் மகளை கடத்திச்சென்றதுடன், இலங்கையில்
 உள்ள தமது தந்தைக்கு குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை வைப்பிலிட்டால் மாத்திரமே அவரை விடுவிக்கமுடியும் என்று 
அச்சுறுத்தியுள்ளார்.
 எனினும் குறித்த பெண் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, வீடொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டதுடன் இலங்கையரையும் கைது செய்தனர். இந்தநிலையில்
 பிரதிவாதி நாடு கடத்தப்பட்ட பிறகு சட்டவிரோதமாக 
நாடு திரும்பியமை, மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்திற்காக கடத்தல் செய்தமை, திருட்டு மற்றும் தேவையற்ற தாக்குதல் போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
 இதனையடுத்து அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று இஸ்ரேலிய அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

நாட்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

நாட்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 05 பேர் உட்பட 07 பேருக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் 
செய்துள்ளது. 
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில், அனுமதி வழங்கப்படாத சுமார் 400 கார்களை திணைக்களம் பதிவு செய்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆணைக்குழுவின் அதிகாரிகள் 156 வாகனங்கள் குறித்த குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை சொகுசு வாகனங்கள் வகையைச் சேர்ந்தவை என அறிவிப்பில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், பல ஆண்டுகளாக இந்த வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து துறையில் தாமதமாக பதிவு செய்யப்படுவதால், அரசுக்கு ஏராளமான வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. 07 வாகனங்களை தற்போதைய
 உரிமையாளர்களிடம் இருந்து பெற்று இலங்கை சுங்கத்தில் ஒப்படைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
 இதன்படி 06 வாகனங்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 05 வாகனங்கள் இலங்கை சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன..என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 10 பிப்ரவரி, 2024

அதிகம் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளம் பற்றி பிரான்ஸில் சுவாரஸ்யமான ஆய்வு

பிரான்சில் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளம் எது என்பது தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பிரெஞ்சு இளைஞர்கள் தவிர்த்து ஏனையவர்களிடம் அதிகளவு
 பிரபலமாக இருப்பது பேஸ்புக் சமூக வலைத்தளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 15 தொடக்கம் 24 வயது வரையுள்ள இளைஞர்களிடம் SnapChat சமூகவலைத்தளம் (81% சதவீதமானவர்கள் பயன்படுத்துகின்றார்கள்) பிரபலமாக உள்ளது. அதற்கு அடுத்ததாக Instagram, TikTok போன்ற
 செயலிகள் உள்ளன.
அதேவேளை, 25 தொடக்கம் 49 வயது வரையுள்ளவர்களிடம் பேஸ்புக் சமூகவலைத்தளமும், 50 மற்றும் அதற்கு மேலுள்ளவர்களிடம் பேஸ்புக்கே பிரபலமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது  குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக சாந்தனுக்கு கடவுச்சீட்டு வழங்கியது

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக சாந்தனின் கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளது
இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வருநாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படவுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 8 பிப்ரவரி, 2024

அனைத்து சத்திரசிகிச்சைகளும்தெனியாய வைத்தியசாலையில் முடங்கி உள்ளன

தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் 
ஒரேயொரு விஷேட மயக்கவியல் வைத்தியர் வெளிநாடு சென்றுள்ளமையினால் அனைத்து சிசேரியன் 
சத்திரசிகிச்சைகள் மற்றும் ஏனைய சத்திரசிகிச்சைகளும் முடங்கியுள்ளதாக பதில் வைத்திய அத்தியட்சகர் ரந்தீவ் அபேவிக்ரம 
தெரிவித்துள்ளார். 
இந்த வருடம் கொட்டபொல பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுவில் அவர் இதனை 
தெரிவித்துள்ளார். 
வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் மற்றும் விசேட சத்திரசிகிச்சை நிபுணர்  இருந்தும் விசேட மயக்கவியல் நிபுணர் இல்லாத நிலையில் அந்த வைத்தியர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றதாக மேலும் தெரிவித்துள்ளார். என்பது  குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 


புதன், 7 பிப்ரவரி, 2024

தனியாருக்கு நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வது குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு

வரலாற்றுப் பெறுமதி மிக்க நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் .07-02-2024.இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கட்டிடத்தை தனியாருக்கு மாற்றுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரிய மனு 07-02-2024.இன்று தாக்கல் செய்யப்பட்ட போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகம் டி ஆப்ரூ இந்த அறிவித்தலை விடுத்ததாக 
தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தபால் நிலைய கட்டிடத்தை தனியாருக்கு மாற்றுவது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில்
 தெரிவித்தார்.
எனவே இந்த தபால் நிலையம் எந்த நேரத்திலும் தனியாரிடம் கையளிக்கப்படும் அபாயம் உள்ளதாக சட்டத்தரணி எச்சரித்துள்ளார்.
அட்டர்னி ஜெனரல் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தபால் அலுவலகத்தை தனியாருக்கு மாற்றுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Blogger இயக்குவது.