சனி, 30 செப்டம்பர், 2023

இலங்கை பல்கலைக்கழகங்கள் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளன

2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் 
இணைந்துள்ளன.
குறித்த தரவரிசைப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள 108 நாடுகளைச் சேர்ந்த 1,904 பல்கலைக்கழகங்கள் 
இடம்பெறுகின்றன.
இதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பன குறித்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
 அத்துடன், இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் என்பனவும் 2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 
இணைக்கப்பட்டுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



வெள்ளி, 29 செப்டம்பர், 2023

நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது

நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு ஆகிய சட்டமூலங்கள் எதிர்வரும் 3ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது சபைக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. 
அது தொடர்பில் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் பிரசுரமாகி இருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வினால் எதிர்வரும் 3ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

 அதேநேரம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

 பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டபோது, அதில் உள்ள விடயங்கள் அரசியலமைப்புக்கு முரண் என தெரிவித்து சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் சென்றனர். 

 அதன் பிரகாரம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் சில விடயங்கள் அரசியலமைப்புக்கு முரண் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு வியாக்கியானம் செய்திருந்தது. 
இதன் பின்னணியிலேயே அனைத்து தரப்பினரதும் ஆலாேசனைகளை பெற்று குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். 

என்றாலும் தற்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 அதேநேரம் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் ஊடாக சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் கடும் எதிர்ப்பு 
தெரிவித்து வருகின்றனர். 
இந்த இரண்டு சட்டமூலங்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 28 செப்டம்பர், 2023

முல்லைத்தீவு நீதிபதி உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தால் பதவி விலகினார்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பதவிகளை 
இராஜினாமா செய்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் தெரிவித்துள்ளார்.
 அவரது ராஜினாமா கடிதம் செப்டம்பர் 23 அன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு 
அனுப்பப்பட்டது.
 மாவட்ட நீதிபதி பதவி, மாஜிஸ்திரேட் பதவி, குடும்பநல நீதிமன்ற நீதிபதி பதவி, முதன்மை நீதிமன்ற நீதிபதி பதவி, சிறுபான்மை நீதிமன்ற நீதிபதி பதவி, சிறார் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எவ்வாறாயினும், சர்ச்சைக்குரிய குருந்திமலை தொல்லியல் தள வழக்குகளில் அவர் ஈடுபட்டதால் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் முக்கியமாக உருவாகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 27 செப்டம்பர், 2023

ஒன்றாறியோ மாகாணத்தில் போலிக் காசோலை மோசடி எச்சரிக்கை

கனடாவில் போலி காசோலை பயன்பாட்டு மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 ஒன்றாறியோ மாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் போலிக்காசோலை மோசடியில் சிக்கி 38 ஆயிரம் டாலர்களை
 இழந்துள்ளார்.
 உரிய நேரத்தில் வங்கிக்கு இது குறித்து அறிவிக்காத காரணத்தினால் அவர் இவ்வாறு பணத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 குயான் மெஷின் ஒர்க்ஸ் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜோன் என்பவரே இவ்வாறு பணத்தை இழந்துள்ளார். தனது ஒரு 
காசோலையை பிரதி செய்து எட்டு போலி காசோலைகளை ஒருவர் உருவாக்கி மொபைல் பேங்கிங் செயலி ஊடாக அவற்றை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுமார் 60 ஆயிரத்து 800 டாலர்கள் பைபிளிடப்பட்டு காசு ஆக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் இதுகுறித்து அறிவிக்கப்பட்ட காரணத்தினால் இரண்டு காசோலைகளுக்கான கொடுப்பனவு மீள பெற்றுக் கொள்ள 
முடிந்தது எனவும் ஏனைய ஆறு காசோலைகளுக்கு அவ்வாறு பணத்தை மீள பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
 காலம் கடந்து அறிவித்த காரணத்தினால் தாம் 38,300 டாலர்களை இலக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். காசோலை ஒன்று தொடர்பில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் 48 மணித்தியாலங்களுக்குள் வங்கிக்கு அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
 வங்கி கூற்று அறிக்கையை பார்வையிட்டபோது காசோலைகள் மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டறிந்து கொண்டதாக ஜோன் தெரிவிக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜோனின் வங்கி தெரிவித்துள்ளது.
 காசோலைகளை மிக அவதானமாக பாவிக்குமாறும் பாதுகாப்பான இடத்தில் அவற்றை வைக்குமாறும் வங்கி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 26 செப்டம்பர், 2023

நாட்டில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் அவசியம்

இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதிமன்றங்களுக்குள் 
நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை 
தீர்ப்பதற்கான 
மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
 கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (26) நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பிரச்சினைகளை 
தீர்ப்பதற்கான மத்தியஸ்தானத்தினால் (IADRC) இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் திறந்த பொருளாதார
 கொள்கையை அமுல்படுத்துவதற்கு பிரச்சினைகளை தீர்ப்பதில் காணப்படும் சாதக நிலைமை முக்கிய பங்கு வகிப்பதாகவும், கொழும்பு 
துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக 
மாற்றியமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 அந்த சட்டத்தின் ஊடாக முதலீட்டுச் சபையை, பிரச்சினைகளுக்கு செயல்திறனுடன் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய 
பொருளாதார ஆணைக்குழுவாக மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச சுதந்திர வர்த்தக 
ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் மற்றும் மாற்று பிரச்சினைகளை தீர்பதற்கான மத்தியஸ்தானமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான 
அவசியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் போட்டித்தன்மை மிக்க எதிர்காலத்தை
 பாதுகாப்பதற்காக
 இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் சென்று செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புளொக்செயின், பசுமை வலுசக்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் துறையில் சிறப்பம்சங்களை உருவாக்க ஒன்றுபடுமாறு சட்ட வல்லுநர்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.
 அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக உறுதிப்படுத்த வேண்டும். சிங்கப்பூரை போன்ற அபிவிருத்தியை இலங்கையில் 
ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். அதன்போது சிங்கப்பூருக்கு நிகராக எமது 
செலவீனங்கள் குறைவடைய வேண்டும். அதனால் 
சிங்கப்பூருடன் போட்டியிடும் இயலுமையும் எமக்கு கிட்டும். அந்த இடைவெளியை குறைத்துக்கொள்ள வேண்டுமெனில் 
எமது பயணத்தை துரிதப்படுத்த வேண்டும். அ
டுத்ததாக, நாட்டின் சட்டத்தரணிகளும் ஏனைய நீதித்துறை சார்ந்தவர்களும் மாற்றுச் செயற்பாடுகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.
 இலங்கை உங்களுக்கான சந்தையல்ல, இலங்கைக்கு
 வெளியிலேயே உங்களுக்கான மிகப்பெரிய சந்தை வாயப்பு உள்ளது. 
இந்த துறை மாத்திரமின்றி புதிய துறைகள் தொடர்பிலும் 
கவனம் செலுத்த வேண்டியுள்ளது. காலநிலை 
அனர்த்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது, நாம் பாரிய அர்பணிப்புக்களை
 செய்து வருகிறோம். பசுமை ஹைட்டிரிஜன், பச்சை அமோனியா மற்றும் காற்றின் மூலம் 60 கிகாவோட் மின் உற்பத்தியை மேற்கொள்ள 
முடியும். சிலர் 40 கிகாவோட்களை உற்பத்திச் செய்ய முடியும் என்றும் கூறுகின்றனர். அது தொடர்பிலான வர்த்த வாய்ப்புகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. 
அத்தோடு அனைத்து புதிய துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். மேற்படி துறைகளில் கல்வி,நிபுணத்துவ தெரிவுகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் மேம்படுத்தல்களுக்கு அவசியமான தேவைப்பாடுகளை பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளோம். இலங்கையை
 செயல்திறன் மிக்க தூரநோக்குடன் கூடிய சட்ட சூழலை கொண்ட நாடாக மாற்றியமைப்பதற்கான பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்.” என ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது அனைவருக்கும்
 அழைப்பு விடுத்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 25 செப்டம்பர், 2023

தர்மபுரம் பகுதியில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு பணிமனை திறப்பு விழா

கத்தோலிக்க திருச்சபையின் பங்கு பணிமனை திறப்பு விழா இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள
 தூய சவேரியார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட குறித்த பணிமனை கட்டடம் இன்றைய தினம் 25.09.2023 யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் அவர்களின் ஆசீர்வாதத்துடன் திறந்து 
வைக்கப்பட்டுள்ளது. 
 இந்நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை நிக்சன் கொலின் மற்றும் பங்குத்தந்தைகள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமச்சர் ரி. குருகுலராஜா, கிராம சேவையாளர், சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் கையளிக்கப்படும்

இலங்கையில்  2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 
அடுத்த வருடத்தின் முதலாம் பாடசாலை தவணை 
ஆரம்பிக்கும் முன்னர் 
மாணவர்களிடம் பாடசாலை பாடப்புத்தகங்கள் கையளிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 23 செப்டம்பர், 2023

நாட்டில் தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை

இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை  சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன 
தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு 
கூறியுள்ளார்.
இதன்படி பெருந்தோட்ட கைத்தொழில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் காணி ஆகிய அமைச்சுகளுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 250,000 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் 60,000 பேருக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய குடும்பங்களுக்கான காணி உரிமையை உறுதிப்படுத்த 5,000 ஹெக்டேயர் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவை விரைவாகக் கொண்டு வருவதற்கு கட்சி பேதமின்றி அனைத்து 
பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து 
ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மதா இணையம்.>>>

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

விரைவில் சமூக வலைதளங்களை கண்காணிக்க அமுலாகவுள்ள சட்டம்

 

சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டமொன்று சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் போது 
மேடா ( Meta) நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து அறிவுறுத்தியமையும் வரவேற்புக்குரியது என ஐக்கிய சமூக சங்கத்தின் தலைவர் புலஸ்தி வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
தினமும் இணையம் மூலமான குற்றங்கள் தொடர்பில் 14000 முறைபாடுகள் பதிவாகின்றன.அவற்றில் 9000 முறைபாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகின்றன.
எனவே இவ்வாறானதொரு சட்டம் மிகவும் அவசியமானது என அவர் மேலும் குறிப்பிடுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 21 செப்டம்பர், 2023

மாத்தறை கனங்கே பகுதியில்உருவாக்கப்பட்டுள்ள சோசலிச பஸ் தரிப்பிடம்

மாத்தறை கனங்கே பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு 
வருகின்றது.
 இந்த பஸ் தரிப்பிடம் உழைப்பு மற்றும் சோசலிசத்தின் சின்னங்களான அரிவாள் மற்றும் சுத்தியலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 உள்ளூர் இளைஞர்கள் குழுவால் கட்டப்பட்ட இந்த பஸ் 
தரிப்பிடம், பாடசாலை மாணவர் ஒருவரால் திறக்கப்பட்டது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



புதன், 20 செப்டம்பர், 2023

பெல்ஜியத்தில் புராதன சிலையை உடைத்த சுற்றுலா பயணிக்கு பதினாறு லட்சம் அபராதம்

பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த மையத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கு பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு, அந்த சிலைகளின் மீது ஏறி அமர்ந்துள்ளார். 
அப்போது அதில் ஒரு சிலை உடைந்து விழுந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த மையத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேதப்படுத்தப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சிலையை சேதப்படுத்திய சுற்றுலா பயணியை கைது செய்தனர். அவர் போதையில்
 இருந்துள்ளார். 
தான் சேதப்படுத்திய சிலையின் மதிப்பு தெரியாமல் செய்துவிட்டதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து சிலையை புதுப்பிக்க ஆகும் ரூ.16 லட்சத்தை அந்த சுற்றுலா பயணிக்கு அபராதமாக விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 19 செப்டம்பர், 2023

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்பெறுமதி வாய்ந்த சிகரட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் 45 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் 
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
  சுங்க திணைக்கள அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கைதானவர்களிடம் இருந்து 45 ஆயிரம் வெளிநாட்டு 
சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவை 45 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளது.  
கல்முனை பகுதியைச்சேர்ந்த ஆணொருவரும், யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


திங்கள், 18 செப்டம்பர், 2023

இரத்தினபுரி பிரதேசத்தில் உணவு விஷமானதால் மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை 
ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நாடு திரும்பும் போது ஏற்பட்ட சுகவீனம் 
காரணமாக சிறுவர்கள் குழு வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 சுமார் 30 சிறுவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
எனினும் குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

யாழ் தாவடியில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் ஐவர்: வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் யுவதியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசிய குற்றச்சாட்டில், அந்த யுவதியை காதலித்ததாக 
கூறப்படும் இளைஞன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாவடியில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது16-09-2023 சனிக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு வீசியதுடன் , வீட்டின் மீதும் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி 
மீதும் தாக்குதல் மேற்கொண்டு சேதங்களை ஏற்படுத்தியதுடன் , வீட்டில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு 
தப்பி சென்று இருந்தது.
தாக்குதலில் வீட்டில் இருந்த யுவதி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஐவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , வீட்டில் வசிக்கும் யுவதி மீது உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் காதல் வயப்பட்டு இருந்ததார் என்றும், அந்த காதல் விவாகரமே தாக்குதலுக்கு காரணம் என கண்டறிந்தனர்.
அதனை அடுத்து யுவதியை காதலித்ததாக கூறப்படும் இளைஞன் உள்ளிட்ட மூவரை 16-09-2023.சனிக்கிழமை மாலை பொலிஸார் 
கைது செய்துள்ளனர். மேலும் இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 16 செப்டம்பர், 2023

நாட்டில் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் அகற்ற நடவடிக்கை

பொழுதுபோக்கு அம்சத்தின் கீழ் கொழும்புத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்கள் 2027ஆம் ஆண்டு 
மார்ச் மாதத்துடன் அகற்றப்படும் என கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பிரதிநிதிகள்
 தெரிவித்தனர்.
வெளிநாட்டைக் குறிப்பாக இலக்குவைத்து வடிவமைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தில் இதுபோன்ற உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் சட்ட ஏற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு வினவியமைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு
 தெரிவிக்கப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இதில் எதிர்வரும் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் 
குறித்து ஆராயப்பட்டன.
எந்த சட்ட அடிப்படையில் அவ்வாறான உணவுக் கூடங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள், எந்த அடிப்படையில் அவற்றை 2027ஆம் ஆண்டு அகற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளீர்கள் என அரசாங்க 
நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வினவியது.
இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பியது.
இது விடயம் தொடர்பான தகவல்களைக் கூடிய விரைவில் குழுவில் சமர்ப்பிக்குமாறு கொழும்புத் துறைமுக நகர பொருளாதார 
ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
துறைமுக நகரத்தில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளால் அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் வருமானம் தொடர்பிலும் குழு மேலும் கேள்வியெழுப்பியது.
எனவே, குறித்த ஒழுங்குவிதிக்கு அனுமதி வழங்க முன்னர் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட சகல தகவல்களையும் வழங்குமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.
ஸ்மார்ட் சிட்டி எண்ணக்கருவுக்கு அமைய தனியான 
நிலப்பரப்பில் துறைமுக நகரம் அமைக்கப்பட்டிருக்கும் 
நிலையில், ஸ்மார்ட் சிட்டியில் கழிவுநீர் முகாமைத்துவம், 
புதுப்பிக்கத்தக்க சக்தி, உரிய வடிகாலமைப்புக்கான 
பொறிமுறைகள் காணப்படுகின்றனவா என்றும் குழு, 
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் வினவியது.
கழிவுநீர் முகாமைத்துவம் மற்றும் வடிகாலமைப்புத் தொடர்பில் நாட்டின் ஏனைய பகுதிகளில் கிடைத்த அனுபவம் துறைமுக நகரத்தை அமைக்கும்போது தவிர்க்கப்பட வேண்டும் என்பது குழுவின் 
நிலைப்பாடாக இருந்தது.
அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, நீர்வழங்கல் சபை போன்ற அரசாங்க நிறுவனங்கள் துறைமுக நகரின் கட்டுமானம் மற்றும் அபிவிருத்தியில் பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டமையும் இங்கு தெரியவந்தது.
இவை அனைத்தும் வரி செலுத்தும் நாட்டு மக்களின் பணம் என்பதால் இதனால் நாட்டுக்குக் கிடைக்கும் நன்மைகள் யாவை என்றும் குழு 
கேள்வியெழுப்பியது.
இதற்கமைய துறைமுக நகரம் மற்றும் உட்கட்டமைப்புக்கு அரசாங்கம் மேற்கொண்ட செலவுகளின் வகைப்படுத்தல் மற்றும் வருமானம் கிடைக்கும் மார்க்கங்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

கடுவெல நீதவான் மீது லேசர் பேனாக் கற்றையை பயன்படுத்திய ஆசிரியர் கைது

நாட்டில் டியூஷன் வகுப்புகளில் விளக்கமளிக்கப் பயன்படுத்தப்பட்ட லேசர் பேனாவை நீதிமன்றத்தில் தவறாகப் பயன்படுத்ய ஆசிரியர் ஒருவர்
 மீது கடுவெல நீதிமன்றில் 15-09-2023.இன்று முறைப்பாடு 
செய்யப்பட்டுள்ளது.
 கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார வழக்கு ஒன்றை நடத்தியபோது லேசர் பேனாக் கற்றையை நீதவான் மீது காட்டி கடமைக்கு குறுக்கிட்டதால் நீதிமன்றப் பதிவாளர் திருமதி திலுபா பிரியதர்ஷனி 
கடுவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு 
செய்துள்ளார்.
இதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தை சோதனையிட்டு சந்தேக நபரைக் கைது செய்தனர். சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
 அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார.15-09-2023 இன்று உத்தரவிட்டார்.
சந்தேக நபர் தேசிய மனநல நிறுவனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மனநல மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட பின் உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், சந்தேக நபரின் தொலைபேசி தரவு பதிவுகளை சரிபார்த்து அந்த அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அவர் 
உத்தரவிட்டார்.
 கோட்டே கொட்டுவெம்மா வீதியில் வசிக்கும் சதுஷ்க ஜனித் டயஸ் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 14 செப்டம்பர், 2023

சாம்பல்தீவில் வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரையும் வியக்க வைத்துள்ளது

நாட்டில்  திருகோணமலையில் இடம்பெற்ற வெளிநாட்டு ஜோடியொன்றின் திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இத் திருமணம் 07-09-2023.வியாழக்கிழமை அன்று திருகோணமலை சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்தேறியுள்ளது.
உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த உறுதி
இத் திருமண பந்தத்தில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு தம்பதியினர் இணைந்து கொண்டனர்.
திருமண நிகழ்வில் சிவ பணியில் உள்ள இரெத்தினம்பிள்ளை கலியுகவரதனை சிவநெறி முறையில் குருவாக ஏற்று திருமணம் 
நடைபெற்றுள்ளது. இதன்போது சட்ட ரீதியான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன.
அதேவேளை புதுமணத் தம்பதியினருக்கு பரிசாக சிவலிங்கம் ஒன்று வழங்கப்படுவதோடு, மணமகனால் மணமகளுக்கும், மணமகளால் மணமகனுக்கும் உருத்திராட்சத்தை அணிவித்து திருமண பந்த
 உறுதி செய்தனர்.
அதேவேளை இதுபோல எட்டு திருமணங்கள் இதுவரை நடத்தி வைக்கப்பட்டதாகவும் சிவ பணியில் உள்ள கலியுகவரதன் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 13 செப்டம்பர், 2023

போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை

யாழ் போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள் , சுகாதார உதவியாளர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் போன் பாவிக்க 
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் "கானுலா"
 பொறுத்தப்பட்டமையால் , சிறுமியின் இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , தாதியர்கள் கவன குறைவினாலையே 
சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் ,குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பணிப்பாளர் ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






செவ்வாய், 12 செப்டம்பர், 2023

நாட்டில் ரயில் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 12-09-2023.அன்று மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 இதற்கமைய பயணிகள் ரயில் சேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் ரயில்வே திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத்துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 11 செப்டம்பர், 2023

மடு சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் விநியோகம் துண்டிப்பு க்கு வெளியான தகவல்

நாட்டில்  மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன் சின்ன பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலைக்கான மின் வினியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்ட நிலையில்,முழுமையான நிலுவை தொகையை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை என பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
 பாடசாலையின் மின் கட்டணம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் காணப்பட்ட நிலையில் அதனை செலுத்தாத காரணத்தினால் மடு மற்றும் வவுனியா மின்சார சபையினால் கடந்த ஜூன் மாதம் மின்சார சபை 
அதிகாரிகள் வருகை தந்து பாடசாலைக்கான மின் 
இணைப்பை துண்டித்து உள்ளனர். இந்த நிலையில் பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் மற்றும் சிலரின் உதவியுடன் பணம் சேகரிக்கப்பட்டு பாடசாலைக்கான மின் பட்டியலில் நிலுவைத் தொகை 
செலுத்தப்பட்டது.
நிலுவைத் தொகை செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை துண்டிக்கப்பட்ட இணைப்பு மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் பாடசாலையில் காணப்படும் திறன் பலகைகள் செயலற்று இருப்பதுடன் 
நிகழ்நிலை ஊடாக செயற்படுத்தும் விடயங்கள் பூர்த்தியற்று இருப்பதுடன் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் தடங்கல் 
ஏற்பட்டுள்ளது.
 தொடர்ச்சியாக வவுனியா மின்சார சபையுடன் பாடசாலையின் அதிபர் தொடர்பை ஏற்படுத்திய போது உடனடியாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்குகின்றோம் எனக் கூறியும் இதுவரை இணைப்பை வழங்காது வவுனியா மின்சார சபை அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயல்படுவதாக பாடசாலை நிர்வாகத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

சீன பொறியியலாளர்களை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு பணியமர்த்துவது குறித்து தகவல்

நாட்டில்  நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன
 பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் பரப்பப்படும் விடயங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 அது அந்த சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்னவின் கையொப்பத்துடன் அறிவிப்பு 
வெளியிட்டுள்ளது.
 அந்த அறிவிப்பின்படி, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களின் சேவையை பெற நொரொச்சோல் தயாராகி வருவதாக வெளியான செய்திகள் பொய்யானதும் அடிப்படையற்றதுமாகும்
இலங்கை மின்சார சபையின் தற்போதைய வெற்றிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான 
நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் இருந்து பொருத்தமான பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய 400க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் 19 பேர் தெரிவுசெய்யப்பட்டு ஆட்சேர்ப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை உரிய அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
 தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அத்துடன், வெளிநாட்டு பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சோ அல்லது மின்சார சபையோ எந்தவொரு கொள்கை முடிவுகளையும் அனுமதியையும் பெறவில்லை என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 9 செப்டம்பர், 2023

போலியாக விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்காவில் கைது



போலியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் 08-09-2023.அன்று  மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
 நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  08-09-2023.அன்று மாலை 06.40 மணிக்கு கத்தாரின் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-217 இல் பயணிப்பதற்காக குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
 அங்கு குறித்த இளைஞன் தனது அனுமதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு, குடியகல்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனையில், குறித்த இளைஞன் தம்வசம் வைத்திருந்த போலாந்து குடியுரிமை விசா போலியாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதியானது.
 பின்னர் குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி விசா 40 இலட்சம் ரூபாய்க்கு ஒரு தரகரிடமிருத்து தான் பெற்றுக்கொண்டதாக அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
 இதனையடுத்து குறித்த இளைஞன் பயணத்திற்காக எடுத்துவந்த , பயணப் பை மற்றும் கைப்பையை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
 இதன்போது, குறித்த இளைஞனிடம் இருந்த 
கைப் பையில் 
மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட சில ஆவணங்களும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து,குறித்த இளைஞனைக் 
கைது செய்த, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு அதிகாரிகள், அந்த இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
என்பதும் கறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 8 செப்டம்பர், 2023

கிரேட்டர் டொராண்டோ பகுதியில் மிரட்டிய தமிழர்கள் அதிரடிக் கைது

கனடாவின், கிரேட்டர் டொராண்டோ பகுதியில் இயங்கிய வாகனத் திருட்டு குற்ற வலையமைப்பை அந்த நாட்டு பொலிசார் 
கைது செய்துள்ளனர்.
இந்த குற்றக்கும்பலில் இலங்கைத் தமிழர்களும் உள்ளடங்குகிறார்கள். “புராஜெக்ட் வின்னி” என பெயரிடப்பட்ட நடவடிக்கையை கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக பீல் பொலிசார் மேற்கொண்டு, இந்த குற்றவலையமைப்பை கைது செய்துள்ளனர்.
2 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 2 மில்லியன் டொலர் மதிப்புள்ள கிட்டத்தட்ட இரண்டு டஜன் திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பீல் பிராந்திய துணை பொலிஸ் தலைவர் மார்க் ஆண்ட்ரூஸ் கூறுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிராம்ப்டனில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவால் ரேஞ்ச் ரோவர் திருடப்பட்டபோது விசாரணை
 தொடங்கியது என்றார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள், வாகனத் திருட்டு விசாரணையில் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். (பீல் போலீஸ்) “பீல் மற்றும் யோர்க் பிராந்தியத்தில் இதே குழுவால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் இதேபோன்ற பிற வாகன திருட்டுகளை புலனாய்வாளர்கள் இணைக்க
 முடிந்தது,” என்று ஆண்ட்ரூஸ் வழக்கு பற்றிய செய்தி வெளியீட்டு வீடியோவில் கூறினார்.
திருடப்பட்ட சில வாகனங்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவதற்கு முன்னர் ஒன்டாரியோவில் மோசடியான முறையில் மீண்டும் வின்னிங் செய்யப்பட்டு மீண்டும் பதிவு செய்யப்பட்டதால் விசாரணைக்கு “புராஜெக்ட் வின்னி” என்று பெயரிடப்பட்டது என்று ஆண்ட்ரூஸ் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையில், 13 லாண்ட் ரோவர்ஸ், 5 டாட்ஜ் ராம்கள், 2 போர்ஷ்கள், ஒரு ஹோண்டா சிஆர்வி மற்றும் ஒரு காடிலாக் எஸ்ஆர்எக்ஸ் ஆகியவற்றை பொலிசார் மீட்டனர். அவை 1,950,000 டொலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 
“புராஜெக்ட் வின்னி” தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலர் போலி ஆவணங்களை வெளியிட்டதாக பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர், மற்றவர்கள் குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கில் விசாரணையாளர்கள் மொத்தம் 42 குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கிடையில், விசாரணையில் தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் தொடர்ந்து தேடுகின்றனர் – 39 வயதான கால்வின் பீகொக் மற்றும் அடையாளம் தெரியாத நபர்.
பீல் பிராந்தியம் மற்றும் அண்டை பகுதியில் இயங்கும் கால்வின் பீகொக், குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை உடைமையாக்குதல், மோட்டார் வாகனம் திருடுதல் மற்றும் மோட்டார் வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்குதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக 
தேடப்படுகிறார்.
வாகன உரிமையாளருக்கு சந்தேகம் வராத விதமாக பழகி, வாகனத்தை வாங்குவதாக நடிப்பதே கால்வின் பீகொக்கின் வேலை.
பின்னர், வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதாக கூறுவார். வாகன உரிமையாளரையும் ஏற்றிக் கொண்டு, வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதாக புறப்பட்டு, வழியில் உரிமையாளரை தாக்கி கீழே தள்ளிவிழுத்தி விட்டோ அல்லது 
வேறு வழிகளை பயன்படுத்தியோ வாகனத்துடன் தப்பிச்
 சென்று விடுவார்.
கடந்த மாதம், பீல் பொலிசார் கலிடனில் ஒரு வன்முறை கார் திருட்டின் வீடியோவை வெளியிட்டனர், கால்வின் பீகொக் காருடன் தப்பிச் செல்வதற்கு முன்பு சோதனை ஓட்டத்தின் போது இருவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



Blogger இயக்குவது.