ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

சீன பொறியியலாளர்களை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு பணியமர்த்துவது குறித்து தகவல்

நாட்டில்  நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன
 பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் பரப்பப்படும் விடயங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 அது அந்த சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்னவின் கையொப்பத்துடன் அறிவிப்பு 
வெளியிட்டுள்ளது.
 அந்த அறிவிப்பின்படி, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களின் சேவையை பெற நொரொச்சோல் தயாராகி வருவதாக வெளியான செய்திகள் பொய்யானதும் அடிப்படையற்றதுமாகும்
இலங்கை மின்சார சபையின் தற்போதைய வெற்றிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான 
நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் இருந்து பொருத்தமான பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய 400க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் 19 பேர் தெரிவுசெய்யப்பட்டு ஆட்சேர்ப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை உரிய அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
 தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அத்துடன், வெளிநாட்டு பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சோ அல்லது மின்சார சபையோ எந்தவொரு கொள்கை முடிவுகளையும் அனுமதியையும் பெறவில்லை என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.