வியாழன், 29 செப்டம்பர், 2016

விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் அடித்து கொலை செய்யப்பட்டார்

இலங்கையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை மத்துகம பகுதியில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ‘வைட்’ பந்தாக வீசியதில் 14 வயது துடுப்பாட்ட வீரருக்கும், 15 வயது பந்துவீச்சாளருக்கும் இடையில் தகராறு 
ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த துடுப்பாட்ட வீரர் 15 வயது பந்துவீச்சாளரை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர்
 இறந்துவிட்டார்.
உயிரிழந்த சிறுவனுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை கைது செய்துள்ள பொலிசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 28 செப்டம்பர், 2016

இளைஞன் கனரக வாகனத்தில் நசியுண்டு பலி!

தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹிந்தகல எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று காலை கண்டி வீதியில் ஹிந்தகல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதினாலேயே இந்த விபத்து 
இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் கனரக வாகனத்தில் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர், இரத்தினபுரி புதிய நகர பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் எனவும், கனரகத்தின் சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 26 செப்டம்பர், 2016

சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் நீரின்றி வறட்சியால் வாடும் இலங்கை மக்கள்?

நாட்டின் பல மாவட்டங்களில் தற்போது நிலவிவரும் வறட்சிக் காலநிலை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொலநறுவை மாவட்டமே வறட்சிக் காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று யாழ்ப்பாணம், திருகோணமலை வவுனியா, அனுராதபுரம், அம்பாறை  உள்ளிட்ட பல மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் நீரின்றி பெரிதும் சிரமபப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கிணறுகள் மற்றும் நீர் மூலங்கள் வற்றியிருப்பதால் குடிநீர் பிரச்சினையையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். வடமத்திய மாகாணத்தில் மக்களுக்கு பௌசர்கள் மூலம் தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு 
வருகின்றது.
இதேவேளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் பொதுமக்களுக்கான நீர் விநியோகத்தில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சபை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும் மக்கள் வெயில் கொடுமை தாங்கமுடியாதும், நீரின்றியும் வாடிப்போயுள்ளனர் என பிரதேச வாசிகள் 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ஆசிரியர்மாணவியின் நண்பி மீது காதல்! மாணவியை கடுமையாக தாக்கினார்

கெக்கிராவ, கொடாகல, பிரேமரத்ன வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி மீது குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவியின் தலை மற்றும் முகத்தில் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நேற்றைய தினம் இந்த மாணவி சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மாணவி தம்புள்ளை, பெல்வெஹேர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான மாணவியின் நண்பியுடன் குறித்த ஆசிரியர் காதல் தொடர்பினை மேற்கொள்வதற்கு முயற்சித்துள்ளார். இந்த யோசனையை மாணவியின் நண்பி நிராகரித்துள்ளார்.
அவர் அவ்வாறு நிராகரிப்பதற்கு காரணம் தாக்குதலுக்குள்ளான மாணவி என சந்தேகித்த ஆசிரியர், வகுப்பறையில் இருந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே அழைத்து சென்று இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் இந்த மாணவி மயக்கமடைந்த நிலையில், வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டதும் பெற்றோர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த ஆசிரியர் கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த திருமணத்தில் தோல்வியடைந்த 33 வயதுடைய ஒருவராகும்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 24 செப்டம்பர், 2016

அம்பலவன் பொக்கணை பகுதியிலிருந்து கேரள கஞ்சா மீட்பு *

 முல்லைத்தீவு பகுதியில்  குறித்த கேரளா கஞ்சாவானது பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கேரள கஞ்சாவினை கொண்டுசெல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியொன்றையும்  பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கேரள கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






வியாழன், 22 செப்டம்பர், 2016

உதயதேவி ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் விபத்து!

இன்று அதிகாலை  மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ரயில் நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு புறப்படும் கொழும்பு, கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்து ஏற்பட காரணம் ரயில் இஞ்சின் மோதியமையே ஆகும் என மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தள்ளார்.
இதன் காரணமாக குறித்த இஞ்சின்; தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதுடன்,  ரயில் பெட்டி ஒன்றும் ரயில் கடவையும்  சேதமடைந்துள்ளன.
பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், முற்பகல் 10.25 மணிக்கு பொலன்னறுவை நோக்கிச் செல்லும் ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர்  மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 20 செப்டம்பர், 2016

வெள்ளை மாளிகையை அதிர வைத்த தமிழ்கவிதை!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்த உணர்ச்சிகரமான கவிதையால் ஒரு தமிழ்ப் பெண் பார்வையாளர்களை நெகிழ 
வைத்துள்ளார்.
அமெரிக்காவில் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக பள்ளி மாணவர்களில் இருந்து இளம் கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தேசத்தின் இலக்கிய தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மாயா ஈஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வெள்ளை மாளிகையில் 8.9.2016 வியாழக்கிழமை கவிதை வாசித்தனர்.
மாயா ஈஸ்வரன் தனது ஆங்கிலக் கவிதையில்:
’கடந்த 16 ஆண்டுகளாக நான் இழந்த பலவற்றைவிட மிக முக்கியமான ஒன்றை நான் தொலைத்து விட்டேன். தலைமுடி உதிர்வதைப்போல் எனது இனத்தின் அடையாளத்தை நான் உதிர்த்துக்
 கொண்டிருக்கிறேன்.
நான் எனது தாய்மொழியான தமிழைப்பேசி மூன்றாண்டுகள் ஆகின்றன. தாயே!, வெகுவிரைவில் நான் வழுக்கைத் தலையாகி விடுவேனோ? என்று அஞ்சுகிறேன்’ என்று வாசித்தார்.
தாய்மொழியான தமிழ்ப்பற்று தொடர்பான தனது கவிதையை மாயா வாசித்து முடிப்பதற்குள் அந்த கவியரங்கத்தில் இருந்த அனைவரும் உணர்ச்சிப்பெருக்கில் நெகிழ்ச்சியடைந்து, பலத்த கரவொலி எழுப்பி பாராட்டினர்.
அமெரிக்க அதிபரின் மனைவி மிஷேல் ஒபாமாவும், மேடையில் இருந்தபடியே மாயாவின் கவிதையைப் பாராட்டும் விதமாக உரத்தக் குரல் எழுப்பினார். பின்னர் அவர், ‘‘மாயா, எங்கே மாயா? சிறந்த கவிதை வாசித்துள்ளாய். மேடையில் உள்ள அத்தனைப் பேரையும் கவர்ந்து விட்டாய்’’ எனப் புகழாரம் சூட்டினார்.
நிகழ்ச்சிக்குப்பின் மாயா தனது பேட்டியில், ‘‘நான் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் பிறந்தது அமெரிக்காவில். எனது கலாச்சாரம், தொன்மை, பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதைகளை எழுதியிருக்கிறேன். எனது தாய்மொழியை எப்படி
 இழந்தேன் என்ற அனுபவத்தைத் தான் வெள்ளை மாளிகையில் கவிதையாக மொழிபெயர்த்துக் கூறினேன். தாய்மொழியை மறந்து விட்டு, பிறமொழியை மாற்றாக ஏற்றுக் கொள்வது என்பது மிகுந்த வலி 
நிறைந்தது’’ என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

                                                                                   மேற்கு மத்திய பகுதி (Midwest), தென்கிழக்கு (Southeast), தென்மேற்கு (Southwest), வட கிழக்கு (Northeast), மேற்கு (West) – என  அமெரிக்காவின் ஐந்து பகுதிகளின் பிரதிநிதிகளாக ஐந்து இளம் கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், மாயா ஈஸ்வரன் (தென்கிழக்கு),கோபால் ராமன் (தென்மேற்கு) ஆகிய இருவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்-.
மொழி: தமிழ்நாட்டில் மாபெரும் இனஅழிப்பு சதி
திராவிட ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுக்கு செய்த கேடுகளில் உச்சமானது, தமிழ் குழந்தைகள் மீது “ஆங்கில வழிக் கல்வியை” திணித்ததுதான். இதனை தொடங்கியவர் எம்ஜிஆர். தொடர்ந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்.

ஆங்கில மொழியை கற்பதற்கும் ஆங்கில வழியில் கற்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாதவாறு குழப்பி – தமிழ்நாட்டிலிருந்து தமிழை ஒழிக்கும் வேலையை திராவிட ஆட்சியாளர்கள் மிகத்திறமையாக செய்துவிட்டனர். மொழியறிவு குறித்த அடிப்படை புரிதல் இல்லாத தமிழக நடுத்தர வகுப்பு மக்கள் இக்குற்றத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர்.

இது ஒரு இன அழிப்பு சதி ஆகும். இந்த பேரழிவின் பாதிப்புகள் எதிர்காலத்தில்தான் தெரியவரும்!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





சனி, 17 செப்டம்பர், 2016

ஒரே நாளில் வைரக்கல் என பொய்சொல்லி 65,000 சம்பாதித்த இளைஞன்!

கடந்தவாரம் கொடிகாமம் முருகமூர்த்தி ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா நடைபெற்றது .இதன் கடைசி நாளான 10 ம் நாள் சுவாமி ஊர்வலம் வருவது வழக்கம் .
அப்போது அந்த ஆலய சூழலுக்கு வந்த இளைஞன் ஒருவன் தான் மட்டக்களப்பு காரைதீவு எனவும் பெயர் ரவி எனவும் கூறியுள்ளார் இந்த ஆலயத்திற்கு வைரக்கல் ஒன்றை கொடுக்கவிரும்புவதாக கூறியே ஆலயத்தினுள் இருந்தவர்களிடம் அறிமுகமாகியுள்ளர் .
வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட் டான் என நினைத்த மக்கள் அதை வாங்கி கோவிலில் வைத்தனர் .
தனது நண்பன் இந்தியவில் கொண்டு வந்ததாகவும் அதை எதாவது ஒரு ஆலயத்துக்கு கொடுக்க சொன்னதாகவும் கூறியுள்ளார் .
இதனால் அந்த பகுதி மக்கள் அவரை அதிக மரியாதையோடு 
நடத்தி வந்தனர் .
இறுதியாக அந்த இளைஞன் சுவாமி ஊர்வலத்தில் சேர்ந்த சுமார் 15,000 வரையிலான பணத்தையும் இருவரின் சுமார் 50.000 மதிக்கத்தக்க தொலைபேசியையும் நூதனமாக யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ஏமாற்றி எடுத்து சென்றுள்ளார் .
இதில் சிரிப்பு என்னவென்றால் அவர் களவெடுத்த பொருள்களோடு வந்த போது அதை அறியாத அந்தக்கிராமத்தில் ஆட்டோ ஓடும் ஒரு இளைஞன் அவர் ஊருக்கு செய்த நன்மைகளையும் அவரது பெருந்தன்மையையும் மதித்து அவரை தனது ஆட்டோவில் ஏற்றி சென்று குறிப்பிட்ட இடத்தில் இறங்கியிருக்கிறார் .
பின்னர் விசாரித்து பார்த்தபோது அந்த கல் அசல் வைரம் கிடையாது என்றும் அதன் பெறுமதி 400 ரூபாதான் என்றும் 
தெரிய வந்தது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 14 செப்டம்பர், 2016

ஜப்பான் நாட்டு மாணவிகள் மலையகத்தில் கொழுந்து பறிக்கின்றனர் !

ஜப்பான் நாட்டின் உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு அதிகமாக வருகை தருவதாக சுற்றுலா அமைச்சு அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளது. இ
ந்த நிலையில் ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவில் 5 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான தேயிலை கொழுந்து கொய்யுதல்
 தொடர்பான 
பாடத்திட்டத்திற்கென மலையகத்தில் பத்தனை கெலிவத்தை தோட்டத்தில் மேற்கொண்டனர். இலங்கைக்கான சர்வோதய அமைப்பின் ஊடாக இவர்கள் இப்பாட நெறிகளை ஆராய்ச்சியின் மூலம் மேற்கொண்டு
 வருகின்றனர்.
அதேவேளை இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய பல்கலைகழக பெண்கள் அமைப்பு 12.09.2016 அன்று இந்த கொழுந்து கொய்யும் பாடநெறிகளில் ஈடுப்பட்டமை கெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் வரவேற்க்கதக்க ஒன்றாக
 அமைந்திருந்தது
. இதன்போது மலையக தோட்ட தொழிலாளர்கள் இன்றைய நிலையில் கொழுந்து கொய்யும் தொழிலில் எவ்வாறு ஈடுபடுகின்றனர் மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கை நிலையையும் இவர்கள் ஆராய்ந்தமை 
குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 13 செப்டம்பர், 2016

வீதியில் ஒன்றாய் சென்ற தாய்க்கும் மகனிற்கு காத்திருந்த சோகம்!

 துணுக்காய் வீதியில் மாங்குளம் மூன்றுமுறிப்புச் சந்திப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது 15 வயது மகன் படுகாயமடைந்தார்.
மகனை பாடசாலைக்கு ஏற்றிச்சென்ற வேளையில் வீதியோரமாக தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பாடசாலை மாணவனின் நிலை
 கவலைக்கிடமாக உள்ளது.
மேற்படி இவ் வீதியில் கடந்த இரண்டு வாரகாலத்துள் வீதிவிபத்தினால் 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 10 செப்டம்பர், 2016

கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் கைது?

பிரபல பாடசாலையான யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர்  கைது? அதிபர் திரு ஞானகாந்தன் அவர்கள் உயர்தர மாணவன் ஒருவரை இன்று காலை பாடசாலையில் வைத்து தாக்கிய 
காரணத்திற்காக கைது செய்ததாகவும் தற்பொழுது அதிபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

கதலி வாழப்பழம் யாழில் 300 ரூபாய்க்கு விற்க்கப்படுகின்றது !

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கதலி வாழைப்பழம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
நல்லூர் ஆலய உற்சவம் நடைபெற்ற காலத்தில் 200 ரூபாயை எட்டிய கதலி வாழைப்பழம், விநாயகர் சதுர்த்திக் காலப்பகுதியில் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
கதலிக்கான கேள்வி அதிகரித்து இருக்கின்ற நிலையில், சந்தைக்கு குறைந்தளவு கதலி வாழைப்பழங்கள் கொண்டு வரப்படுவதால் இந்த விலையேற்றம் அதிகரித்துள்ளது.

விலையேற்றத்தால் பல கடகளிலும் கதலி வாழைப்பழத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதேவேளை, விலையேற்றத்தால் பிஞ்சு வாழைக்குலைகளை மருந்தடித்து விற்பனை செய்யும் செயற்பாட்டிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, திருமண சீசன் ஆரம்பித்துள்ளமையால், வீடுகளில் வாசல்களில் கட்டப்படும், குலையுடன் கூடிய கதலி வாழைகளின் விலையும் அதிகரித்துள்ளது. முன்னர் ஒரு சோடி வாழை 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது, 8,000 ரூபாய் தொடக்கம் 12,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதனைவிட இதரை வாழைப்பழம் கிலோ 100 ரூபாய்க்கும், கப்பல் வாழைப்பழம் 200 ரூபாய் தொடக்கம் 240 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. வாழை உற்பத்தியில் ஏற்பட்ட சரிவே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என வாழைச் செய்கையாளர்கள் கூறுகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 6 செப்டம்பர், 2016

யாழ் நிலாவரை சிவன் கோவிலின் புனிதத்தையே கெடுக்கிறது!

ஊர் மக்களே   விழித்தெளுங்கள்   இங்கு  நிலாவரை அண்டியுள்ள சிவன் கோவிலும் மிகவும் புனிதமானவை.... இன்று யாத்திரிகள் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.. இங்கு இருக்கும் சுடுகாடு 
இந்த இடத்தின் புனிதத்தையே கெடுக்கிறது..இந்த இடத்தில இருந்து ஐநூறு மீட்டர் தூரத்தில் இன்னொரு சுடு காடு... இது 
தேவை தானா...புத்தூர் கிராம சபையோ அல்லது வடமாகாண சபையும் என்ன செய்து கொண்டிருக்கிறது .... மக்களுக்கு குடியிருக்க நிலம் இல்லை.. பல சுடுகாடுகள் வேண்டுமா-தகவல் .க .கந்தசாமி ----
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 5 செப்டம்பர், 2016

இதுதான் சினிமாவில்முதன்முறை : விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஒருவழியாக விஜய்யின் 60வது படத்தின் பெயர் பைரவா என்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது.
இந்த சந்தோஷ தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பஸ்ட் லுக் போஸ்டரை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் இன்று இரவு 9 மணியளவில் பெரிய திரையில் விஜய்யின் ஸ்பெஷல் வீடியோவை ஒளிபரப்பி இந்த போஸ்டரை 
திரையிட உள்ளனர்.
ஒரு போஸ்டர் பெரிய திரையில் திரையிடப்படுவது இதுவே முதல்முறை. இதனால் விஜய் ரசிகர்கள் டபுள் டமாக்கா கொண்டாட்டத்தில்
 உள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.