வெள்ளி, 1 செப்டம்பர், 2023

அக்கராயன் ஆணைவிழுந்தான் பிரதேச த்தில் இராணுவ முகாமை அகற்ற மக்கள் மறுப்பு

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் சிலர் 01.09.2023.இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது பகுதியில் உள்ள 
இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயீர்ப்பு 
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், தமது பகுதியின் அனைத்து தேவைகளையும் இராணுவத்தினரே பெரும்பாலும் நிவர்த்தி செய்கின்றனர்.
குறிப்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினை இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தமது பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.