திங்கள், 31 ஜூலை, 2017

கவிஞர் தயாநிதிஎழுதிய கோயிலில் நடந்த ஆச்சாரம்?

இல்லாத ஒன்றுக்காய் ஊர் கூடிப் போராட்டம். ஆச்சாரம் ஆச்சாரமென ஆர்ப்பாட்டம். கோவிலில் சாதிக் கலவரம் தேர் வடம் இராணுவக் கரங்களில் இன்றைய நிலவரம். விடுதலைப் போர்
 காலங்களில் மௌனித்த பெரும் கூத்து மீண்டும் கட்டறுத்து சதிராடுதாம். ஊரிழந்தோம் உறவிழந்தோம் உடமைகளிழந்தோம் உயிரிழந்தோம் பயிரிழந்தோம் பண்பாடிழந்தோம் பள்ளியிழந்தோம்
 படிப்பிழந்தோம் தமிழன் என்ற துடிப்பிழந்தோம் கும்பிட்ட கோவிலும் இழந்தோம்.விரைவில் எல்லாமே இழப்போம் இதுவே தமிழன் நியதி. ஆக்கம் கவிஞர்தயாநிதிஇல்லாத ஒன்றுக்காய் ஊர் கூடிப் போராட்டம். ஆச்சாரம் ஆச்சாரமென ஆர்ப்பாட்டம். கோவிலில் 
சாதிக் கலவரம் தேர் வடம் இராணுவக் கரங்களில் இன்றைய நிலவரம். விடுதலைப் போர் காலங்களில் மௌனித்த பெரும் கூத்து மீண்டும் கட்டறுத்து சதிராடுதாம். ஊரிழந்தோம் உறவிழந்தோம் 
உடமைகளிழந்தோம் உயிரிழந்தோம் பயிரிழந்தோம் பண்பாடிழந்தோம் பள்ளியிழந்தோம் படிப்பிழந்தோம் தமிழன் என்ற துடிப்பிழந்தோம் கும்பிட்ட கோவிலும் இழந்தோம்.விரைவில் எல்லாமே இழப்போம் இதுவே தமிழன் நியதி. 
ஆக்கம் கவிஞர்தயாநிதி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 29 ஜூலை, 2017

தாயகத்தில் தமிழ் நாடகங்களும் நாமும்…5

இங்கு படத்தில் இருப்பவர்.மிகவும் புகழ் பெற்ற ஒரு பகுத்தறிவாளர்..இந்தியாவின் கேரள திருவனந்தபுரம் திருவெல்லா என்ற ஊரில் 10 – 04 -1898 இல் பிறந்து சிறந்த கல்விமான் ..Colombo Thurstan college Botanic teacher…Dr.Abraham Kovoor…18.9.1978 ஸ்ரீ லங்காவில் காலமானார்…இவர் காலத்தில் புட்டபத்தி சாய் பாபா.கையில் 
விபூதியும்..வாயில் லிங்கமும் எடுத்த காலம்….இவர் கூட பல இடங்களில் அதை செய்து காட்டியவர்..யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி மண்டபத்திலும் இதை செய்து காட்டியவர்…இவரது இந்த
 திறமை திரு.வேலணை வீரசிங்க்ததையும் கவர்ந்தது…அவரும் திராவிட கழக ஆதரவாளர்..எனக்கும் பழக்கமானார்…நான்..அமரர் .கணேசபிள்ளை அண்ணை..வீரசிங்கம் அன்னார சகிதம்.இவர் மனைவி இறந்ததை அறிந்து சென்றோம்…ஆச்சரியம்..அந்த மரண
 வீட்டில் யாரும் இல்லை ..ஒரு மகன் அவரும் வரவில்லை…இறந்த அவர் மனைவியின் உடல் எந்த அலங்காரமும் இன்றி வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது… அருகில் யாரும் 
இல்லை ..மேல்மாடியில் கோவூர்.. எமக்கு மனதை உறுத்தியது..என்ன சொல்ல..வருத்தம் சொல்லவா..வாய் திறக்கும்
 முன்னர் கை காட்டினார்…சொன்னார் 50 ஆண்டு காலம் என்னோடு வாழ்ந்தா..இன்னும் சிறிது நேரத்தில் போதனா வைத்தியசாலை நபர்கள் வந்து கொண்டு செல்வார்கள் என்று..இப்போ இவர் மீது சாதுவாக எனக்கு பயம் வந்து விட்டது என்றே சொல்லலாம்…
அது சரி ..இவருக்கும் எமது நாடகத்திற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா…இவர் ஒரு மனோ தத்துவ டாக்டரும் கூட….இவர் வாழ்வில் ஒரு நோயாளிக்கு நடந்த உண்மை கதை..நம்பிக்கை… என்ற பெயரில் நாடகமாக உருவானது
..மிக அருமையான கதை..
இந்த நாடகத்தில்…ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆபிரகாம் கோவூராக.. எதிர் மறை மந்திரவாதியாக நான்…கபட தபால் காரனாக கே.எஸ்.பாலச்சந்திரன்…வெளிநாடு சென்ற கணவனை எதிர்பார்த்து ஏங்கும் மனைவியாக மணிமேகலை ராமநாதன்…பெற்றோராக.
. எஸ்.எஸ்.கணேசபிள்ளை ..சந்திரபிரபா மாதவன்….இதில் பேய் பிடித்த மணிமேகலைக்கு பேய் விரட்டும் காட்சி..நானும் மணிமேகலையும் உடுக்கு வாத்தியத்துக்கு கற்ப்பூர சட்டியியுடன் ஆடும் ஆட்டம் மக்கள் ஆர்வத்துடன்..குழந்தைகள் அழுகுரல்
 பயத்தில்… கொழும்பை தொடர்ந்து யாழ்ப்பாணம் படி தொட்டி எங்கும்… இ.போ.ச.பஸ் தொடங்கி..டாக்ஸி வரை எனதும்..மணியின் படமும் தான்… ஒருமுறை தீச்சட்டி தடம் புரண்டு
 என் மேல் கொட்டியது..இந்த நாடகம் வடமாகாணத்தில் பல இடங்களில் நடந்தாலும்…கொடிகாமம் மகா வித்தியாலயத்தில் நாடகம்..முன்னர் தலைமை ஆசிரியர் இந்த நாடகத்தை 
பார்த்துள்ளார்..என்னிடம் வந்து சொன்னார் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்..இந்த மாமரதிலை காய்க்கிற காய் ஒண்டையும் பெடியள் விடுறாங்கள் இல்லை ..நீங்கள் பேயாடி 
ஒரு மரத்தில் பேயை ஆணி அறைந்து கட்டுவீர்களே..அதை இந்த மரத்தில் செய்யுங்க என்றார்.. அதன் படி நானும் 
செய்தேன்…இரண்டாண்டுகளுக்கு பின்னர் எதேச்சையாக அவரை கண்டேன்.. சொன்னார் பொடியள் அந்த மரத்தடி பக்கமே போவதில்லை என.இப்படி… படித்ததற்கு நன்றி....   /தொடரும் 



புதன், 26 ஜூலை, 2017

அச்சுவேலியில் கோயிலில் நடந்த சண்டையின் பின்பு சிங்கள இராணுவத்தினர் தேர்இழுப்பு

யாழ்ப்பாணத்தில், அச்சுவேலியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். 
இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று
 முடிவு செய்தனர். 
(ஆரியர் என்பது திராவிடரிலும் கீழானது ஆரியரில் கீழானவர்கள் சிங்களர் சிங்களரிலும் சிங்கள இராணுவத்தில் பல தீண்டத்தகாத சாதி என்ற 
ஒன்றும் உண்டு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



இலங்கையில் மறைந்துள்ள மர்மங்கள் இளஞ்செழியனின் கண்ணீர்!

தனது பாதுகாப்பிற்காக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தமை குறித்து நீதிபதி இளஞ்செழியன் கண்ணீருடன் மன்னிப்பு கோரினார்.
இந்த சம்பவம் உள்நாடு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையின் பிரபல நீதிபதியும் எழுத்தாளரும் கவிஞரும் மனித உரிமை ஆர்வலருமான பசில் பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கட்டுரையில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 25 ஜூலை, 2017

யாழ் நீதிபதி மீதான கொலை முயற்சி தாக்குதல்! துப்பாக்கிதாரியின் இடம் கண்டு பிடிப்பு!!

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று 
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்காக பல பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சாவகச்சேரி பிரதேசத்தில் மறைந்திருப்பதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
சதீஷ் என்ற அடையாளப்படுத்தும் சந்தேகநபரே இவ்வாறு மறைந்திருப்பதாக கூறப்படுகின்றது. அவரை கைது செய்யும் நோக்கில் சாவகச்சேரியல் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சதீஷ் என்பவரின் மூத்த சகோதரர் மற்றும் மேலும் ஒரு உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 24 ஜூலை, 2017

யாழ். நீதிபதி மா.இளஞ்செழியன் இலக்கு வைக்கப்படவில்லை! – யாழ். பிராந்திய பொலிஸ் ?

யாழ். துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டவில்லை எனவும் யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு
 தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,“நல்லூர் சம்பவம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியினை இலக்கு வைத்து நடத்தப்படவில்லை. நீதிபதியின் மெய்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் மது போதையில் இருந்தவரை கண்டிப்பதற்காக எடுத்த நடவடிக்கை காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என தற்போது என்னால்
 சொல்ல முடியும்.
நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால், நிச்சயமாக அவரது வாகனத்திற்கு சூடு பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை. நீதிபதியும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி தனது மெய்ப்பாதுகாவலரும், மதுபோதையில் நின்ற நபரும் முரண்பட்டுகொண்டதை 
பார்த்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிதாரியின் இலக்கு நீதிபதியாக இருந்திருந்தால் நேராக சுட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் சுடவில்லை. எனவே இது நிச்சயமாக அந்த சந்தர்ப்ப சூழலில் நடந்த விடயமே என
 கூறுவேன்.
நீதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான மரண அச்சுறுத்தலும் இல்லை என விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம்” 
என தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 22 ஜூலை, 2017

யாழ் நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகத்திற்க்கு துப்பாக்கிச் சூடு!

யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை
 மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மற்றையவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நீதிபதி இளைஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்த இனந்தெரியாத நபர்கள், அவரை நோக்கி 10 தடவை துப்பாக்கி சூடு நடத்திய வேளையில், அவரின் மெய்ப்பாதுகாவலர்களின் அதீத முயற்சியினால் 
நீதிபதி பாதுகாக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேக நபர் அங்கிருந்த பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிளை பறித்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, அவரது துப்பாக்கி கீழே வீழ்ந்துள்ள நிலையில், சந்தேகநபர் சாதுர்யமாக பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் சந்தேக நபர் வைத்திருந்த துப்பாக்கி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவி வருவதுடன், விஷேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் 
தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையிலேயே நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வெள்ளி, 21 ஜூலை, 2017

தாயகத்தில் தமிழ் நாடகங்களும் நாமும்…4

தொடர்ந்தும் ..புளுகர் பொன்னையாவே……நாடகங்களை மண்டபங்களில் நடத்தும் போது பிரச்சனைகள் குறைவு.நேரத்திற்கு தொடங்கி நேரத்திற்கு முடிந்து விடும்.. வெளியிடங்களுக்கு சென்று பரந்த வெளிகளில் நடாத்தும் போதும்.. வெளியூர்களில் நடாத்தும் போதும் பல புது அனுபவங்கள்…
திரு.வேலணை வீரசிங்கம் அண்ணனுக்கு இந்த நாடகத்தை தன சொந்த ஊரான வேலணையில் மேடையேற்ற வேண்டும் என்ற ஆவல்.செயலில் இறங்கி.. வேலணை மகா வித்தியாலயத்தில் நாடகம்..ஒப்பனை தொடங்கிவிட்டது..நேரம் 7.30 க்கு மேல்..திடீரென கே.எஸ்.பாலச்சந்திரன் மயங்கி விட்டார்..என்ன நடந்தது ,எல்லோரும் கலங்கி என்ன செய்வதென்றறியாத நிலையில் ,அவராலும் தன்னிலை சொல்லமுடியா நிலை..எல்லோரும் பதறியபடி..அவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.. கிட்டிய மருத்துவமனை..ஊர்காவற் துறை ..மகாவித்தியாலம் மைதானம் மக்கள் கூட்டம்.. செய்வதறியாது அவரை காரில் தூக்கி சென்று மருத்துவமனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்…வலி நெடுக மக்கள் நாடகம் பார்க்க வந்து கொண்டிருந்தனர்..இதற்குள் வைத்தியசால சென்று விட்டோம்.. பரிசோதனை செய்த வைத்தியர்,,கேர்னியா என்றார்.. அவருக்கு ஆபரேசன் செய்யவேண்டும் என்றார்..எங்களுக்கு செய்வதறியா நிலை..நாங்கள் மன்றாடினோம்..பின்னர் சொன்னார் ஒரு ஊசி ஒன்று போடுகிறேன் ..அது கூட ஒரு மூன்று மணித்தியாலம் தான்.வலி இல்லாமல் இருக்கும் ,ஆனால் நாடகம் நடிக்க முடியுமோ தெரியாதென்று…திரும்பவும் நாடகம் நடைபெறும் மைதானம் வந்து விட்டோம்..என்ன செய்வது..நாடகம் நடத்துவதா விடுவதா என்ற நிலை.. நிலைமையை மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவித்தோம்.. இதற்குள் பாலா.. அண்ணை நான் ரெடி.. சொல்லுங்கோ நாடகம் நடக்கும் என்று…மைதானம் விசில் சத்தத்தால் கும்மாளம் இட்டது..நாடகம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது கடைசி பத்து நிமிடம் இருக்கும் போது மீண்டும் அவருக்கு வருத்தம்.மீண்டும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஆயத்தம்…தவிர்க்க முடியாத நிலையில் ..பாலா இல்லாமல் கடைசி காட்சி..இதில் பாலச்சந்திரன் நடித்த கதாப்பாத்திரத்தின் பெயர்..தம்பையா… நான் பொன்னையா அண்ணை எங்கை தம்பையனை காணேல்ல ஒன்டாதானே திரிவீங்க என்று…. அதற்க்கு பொன்னையா .. டேய் அவனுக்கு சுகமில்லை ஆள் இப்ப ஆசஸ்ப்பதிரியைல போய் பாக்க வேணும் என்று..இதற்கும் புரிந்த ரசிகர்கள் சிரித்தனர்…உடனே வீரசிங்கம் அண்ணர் மிகுந்த வருத்தத்துடன் ஒரு அறிவித்தலை மக்களுக்கு அறிவித்தார்… மீண்டும் இந்த நாடகம் இங்கே போடுவோம்,,,நீங்கள் கையி வைத்திருக்கும் இந்த டிக்கட் காணும் என்று.. மக்கள் மிகவும் சந்தோசப்பட்டனர்…மூன்று வாரங்களுக்கு பின்னர் இதே மைதானத்தில் நாடகத்துடன்… எ.ஈ.மனோகரன்.. என்.இமானுவல்..மற்றும் பல பொப் இசைபாடகர்களுடன் மிக விமரிசையாக நடத்தி முடித்தார்.. நண்பர்.. அப்துல் ஹமீத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்..இந்த நாடகத்தை பார்க்க எனது மனைவியும் வந்திருந்தார்..நாடகம் முடிந்த பின்னர் தான் இசை நிகழ்ச்சி.. நான் மனைவியுடன் பேசுவதற்காக வந்தபோது தனக்கு தெரிந்தவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி ..சொன்னார் இப்பிடி இருங்கோ.. மேடையில ஆட போகவேண்டாம் என..ஆனால் எனது நண்பன்..இசையமைப்பாளர்..பாடகன்.என்.இமானுவேல்..என் சக உத்தியோகத்தன்,,என்னை அன்பாக அழைத்து இந்த பாடல் இங்கு நன்றாக வேண்டும்.. நான் பாடும்போது நீ ஆட வேண்டும் என
, நேரமும் வந்தது.. இமானுவேல் பாடதுடங்க
..நான் ஆடிக்கொண்டு மேடை வர.. நண்பர் அப்துல் ஹமீத் நாடகத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை.சொல்லி ஆஹா கந்தப்பர் மேடையில் துள்ளிசைக்கு நடனமாட என… 
மக்கள் ஆரவாரம். அவர் பாடிய அந்த பாடல்….சித்திர கன்னிகள் ஊர்வலம் போகும் சிங்காரம் பார் என தொடங்கும்….அப்போது
 மேடையில் துள்ளிசைக்கு ஆடுபவர் யாழில் குறைவு,,நிகழ்ச்சி நடைபெறுவதும் குறைவு… 
எல்லோருக்கும் மகிழ்ச்சி வீடு செல்லும் வரை என் மனைவியின் முகத்தில் எரிச்சல்… வீடு சென்றதும்.. நான் அவளவு சொல்லியும்.. எனக்கு தெரிஞ்ச ஆக்கள் இருந்தவை.. என்று..இன்றும் இந்த வயதிலும் துள்ளிசை என்றால் என்
 கால்கள் சும்மா இராது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 12 ஜூலை, 2017

வாகன சார­தி­க­ளுக்­கான அப­ராத திருத்த அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிப்பு

வாகன சார­தி­க­ளுக்­கான அப­ராத திருத்தம் தொடர்­பாக ஆராய நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­ன­விடம்
 கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 
ஜனா­தி­பதி செய­லக அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை இந்த அறிக் கையை ஜனா­தி­ப­தி­யிடம் போக்­கு­வ­ரத்து அமைச்சின் செய­லாளர் நிஹால் சோம­வீர  கைய­ளித்தார்.
வாகன சார­தி­களின் தவ­று­க­ளுக்­காக விதிக்­கப்­படும் அப­ரா­தத்தை அதி­க­ரிக்க கடந்த வரவு–செலவுத் திட்­டத்தில் யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.  இத­னை­ய­டுத்து போக்­கு­வ­ரத்துத்துறையைச் சார்ந்­த­ சிலர் இதற்கு பலத்த எதிர்ப்பு வெளியி­ட்­ட­மையால் அது குறித்து ஆராய்ந்து, புதிய அப­ராதப்பத்­தி­ரத்தை தயா­ரிக்க ஜனா­தி­ப­தியால் குழு­வொன்று
 நிய­மிக்­கப்­பட்­டது.
நிதி மற்றும் போக்­கு­வ­ரத்து ஆகிய அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள் மோட்டார் வாகன ஆணை­யாளர் நாயகம், வாகனப் பிரி­வுக்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்­ளிட்டோர் இக் குழுவில் 
உள்­ள­டங்­கு­கின்­றனர். 
இத­னடிப்­ப­டையில் குறித்த குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கையளிக்கப்பட்டது. இவ் அறிக்கை யினை அமைச்சரவையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிஹால் சோமவீர
 மேலும் தெரிவித்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மோட்டார் சைக்கிளில் வந்தோர் ஜீப் வண்டி மீது துப்பாக்கிச்சூடு!

வத்தளை - மஹபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுல் பொக்குண தேவாலயம் அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார்.
 ஜீப் வண்டியில் பயணித்துக்கொன்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7.20 மணியளவில் இந்த 
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போது அந்த ஜீப் வண்டியை செலுத்திச் சென்ற சாரதியே படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த சாரதி  மஹபாகே மகுல் பொக்குண பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கும் பொலிஸார் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம், துப்பாக்கிதாரிகளின் இலக்கு குறித்து விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு வரை சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் மேல் மாகாணத்தின் வட பிராந்தியத்துக்கு பொறுப்பான  பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய மஹபாகே பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர்

இராமாயண வரலாற்றில் புகழ் பெற்ற இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் அமைந்திருப்பதாகச்  சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச மக்களின் உதவி இல்லாமல் அங்கே செல்ல முடியாது. 
இருள் படர்ந்த அதைப் பார்த்தவுடன் மிகுந்த பயம் ஏற்படும்.நில்திய பொக்குன என்று சொல்லப்படும் இராவணின் மாளிகை நிலத்திற்கு கீழேயே அமைந்துள்ளது.
எல்ல வெல்லவாய பாதையில்  கரதகொல்ல பாடசாலைக்கு பக்கத்தில் செல்லும் வீதியிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் உள்ளே செல்லும் போது இந்த சுரங்கப் பாதைக்கு செல்ல முடியும்.
முதலில் கயிற்றின் உதவியுடனேயே
 இங்கு செல்ல முடியும். கயிற்றைப் பிடித்து சுமார் 40 அடி தூரம் இறங்க வேண்டும். பின்னர் சிறிய அறை ஒன்று அங்கே காணப்படும். பின்னர் அங்கிருந்து மேலும் 30 அடி கயிற்றின் உதவியுடன் கீழே இறங்க வேண்டும். அதன்பின்னர் 500 மீற்றர் தூரம் வரையான சாய்வுப் பகுதியில் நடந்து சென்றால் நல்ல விசாலமான மண்டபம்
 ஒன்றினைக் காண முடியும்.
அந்த மண்டப சுவரின் அடுத்தபக்கத்துக்குச் சென்று பின்னர் அங்கிருந்து 700 - 800 அடிவரை கீழே இறங்கும் போது பேச்சு அரங்கு போன்ற ஒன்றை காணலாம்.அங்கே நீர் வீழ்ச்சி ஒன்றின் சத்தம் கேட்டு கொண்டிருக்கின்றது. அதில் இருந்து மேலும் 1500 அடி தூரம் செல்லும் போது நீல நிறக் குளம் 
ஒன்று காணப்பட்டது.
சூரிய ஒளியைக் கண்டிராத இந்த இடத்தில் மிகவும் சுத்தமான நீர் எங்கிருந்து வந்தது என்பதனை கண்டுபிடிக்க முடியவில்லை
அந்த குளத்திற்கு அருகில் மிகவும் அலங்காரமிக்க மாளிகை ஒன்று அமைந்துள்ளதாக என்னோடு  வந்த கிராமவாசி
 தெரிவித்தார்.ஆனாலும் அது ஆபத்தான பகுதி என்று நினைத்து திரும்பிவிட்டோம் என்று குறித்த தேரர் தனது பதிவில் 
குறிப்பிட்டுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






புதன், 5 ஜூலை, 2017

இலங்கையில் தமிழ் நாடகம் என்றால் மறக்க முடியாத வரணியூரான் மானிப்பாய் யூரான்

இலங்கையில் தமிழ் நாடகம் என்றால் மறக்க முடியாத பெயர்கள்.
.மானிப்பாய்யூரான் மற்றும் நவக்கிரியூரான்  வாடைக்காற்று  புகழ்   திரு.கந்தசாமி  மற்றும்  வரணியூரான்.. எஸ்.எஸ்.கணேசபிள்ளை ..60 பதுகளில் இருந்து 83 வரை .. பின்னரும் சிறிது காலம்…95 வரை…
நாடகமே அவர் உயிருக்கு உலை வைத்தது…ஒரு நடிகன் தன குரலால் உயிர் இழந்தான்.முதல தடவை ,, அதுவும் எமது நாட்டில் தான்…சரி வருவோம் அவர் பற்றி தெரியாத கலைஞர்களுக்காக ….
இந்த மாபெரும் கலைஞனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பன்.. திரு..கே,கே,மதிவதனன்…கவிஞன் ..நடிகன் நாடக எழுத்தாளன்….திரு.கணேசபிள்ளை அவர்கள் கொழும்பில் யாழ்.கலை.அரங்கம் என்ற பெயரில் ஒரு 
மன்றத்தை நடத்தி .. மிக சிறந்த நாடகங்களை எழுதி இயக்கி.. வானொலி நாடகங்கள் எழுதி இயக்கி யாழ் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருந்தார்.. அப்போது அவருக்கு ஒரு நடிகர் தேவை.
. இதை மதிவதனிடம் சொல்லி இருக்கிறார்..சில மாதங்களுக்கு முன்னர் தான் நான் திருகோணமலையில் இருந்து மாற்றலாகி கொழும்பு வந்த நேரம்… மதிவதனன் என்னை நன்கு அறிவார்.. நான் சொந்தமாக ஒரு மன்றம் அமைத்து நாடகங்கள் மேடையேற்றி.
.மற்றவர்கள் கேட்க்கும்போதும் மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் நடித்தும் கொண்டிருந்தவன்,, பின்னர் எனது மன்றத்தை குலைத்து விட்டு மதிவதனனின் நாமகள் நாடக மன்றத்தில் சிறிது காலம்…அப்போது தான் என்னை பற்றி சொல்லி இருக்கிறார்.
.திரு கணேசபிள்ளை அவர்கள் என்னை போக்குவரத்தில் கண்டும் உள்ளார்..இது 1969 ம் ஆண்டு..எனது அப்போதைய தோற்றம் ஒரு திமிர் பிடித்தவன் அவர் கண்ணில் பட்டுள்ளது….அதேநேரம் நான் ஒரு சினிமா நடிகனும் கூட..என்னிடம் சிறு திமிரும் 
இருக்கத்தான் செய்தது…எனது வீட்டுக்கு வந்தனர்..நன்றாக பேசினார்..சிறுது காலத்துக்கு முன்னர் தான் எனது நண்பன் ராஜகோபால் அவரிடம் இருந்து பிரிந்தார்…வந்தவர் சும்மா இருக்காமல் ஒரு நடிகன் வேணும் அது ராஜகோபால் மாதிரி பெரிய நடிகர் தேவை
 இல்லை என…வந்தது வில்லங்கம்.. தேநீர் போட சென்ற எனது மனைவி என்னை அடுக்களைக்கு அழைத்தார்…. கேட்டார் அது சரி நீங்க அவர் நாடகத்தில் நடிக்க போகிறீரா.. அவர் பெரிய நடிகர் வேண்டாம் என்கிறார் என..நான் சொன்னேன் எனக்கு இங்கு 
அறிமுகம் வேண்டும் நான் நடிக்கிறேன் என,,, உடனே சொன்னா போறது சரி அவர் சொல்வது மாதிரி எண்டால் நான் இனி சாப்பாடு போட மாட்டேன் என…ஒத்திகைக்கு சென்றேன்… நாடகம்… கே.கே.மதிவதனன். எழுதிய ..பித்தலாட்டம்.. எனக்கு ஜோடியாக 
..பிரியா ஜெயந்தி ..நான் வரும் ஒவொரு காட்சியும் ரசிகர்கள் ஆரவாரம்…முன் ஆசனத்தில் இருந்த எனது மனைவியும் ரசித்தாள்,,, அன்று தொடங்கிய எமது நடப்பு..சகோதர மனப்பான்மை 
அவர் இறக்கும் வரை மாறவில்லை எம்மிடம்…அவர் எழுதும் போதும் மிக முக்கிய கதாபாத்திரங்களையே எனக்காக எழுதுவார்.. கைராசியாக முதல் காட்சியில் நான் இப்படி..சதுரங்கம்..கருப்பும்
 சிவப்பும்.. ஸ்புட்னிக் சுருட்டு ..புளுகர் பொன்னையா..சண்டியன் சின்னதம்பி ..நம்பிக்கை..ஆசை மச்சான்.அசட்டு மாப்பிள்ளை என…மிகுதி தொட ரும்
நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.