செவ்வாய், 9 ஏப்ரல், 2024

கிளிநொச்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி போராட்டம்

கிளிநொச்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி.09-04-2024.  இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று 
முன்னெடுக்கப்பட்டது. 
 வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 
கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக 
இப் போராட்டம்
 இடம்பெற்றது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி இடம்பெறும் இப் போராட்டமானது,
09-04-2024. இன்றைய தினம்(09) வடக்கு கிழக்கு எங்கும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 ஒரு கூலித் தொழிலாளியின் நாளாந்த வருமானம் 1500 ரூபா ரூபாவாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரிசியின் விலையை 100 ரூபாயிலும் குறைக்குமாறும் , அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைக்குமாறு கேட்டு நின்றனர். 
 மேலும் பல உயிர்களை காவு வாங்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து தருமாறும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.