வியாழன், 28 மார்ச், 2024

சீனா இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாண பணிகளை ஆரம்பிக்க விரும்பம்

இந்த நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.  
இது தொடர்பில் சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தமக்கு அறிவித்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.  
குறித்த கலந்துரையாடல்   27-03-2024.அன்று கொழும்பில் 
இடம்பெற்றது. 
புதிய சுத்திகரிப்பு நிலையம் ஹம்பாந்தோட்டையில் நிறுவப்படவுள்ளதுடன், அது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுவதற்கு சினோபெக் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.  
திட்டத்திற்கான முதலீட்டை அதிகரிக்கவும், 
சுத்திகரிப்பு 
நிலையத்தின் திறனை அதிகரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டு, ஜூன் மாதம் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.