புதன், 17 ஜனவரி, 2024

நாட்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு மற்றுமொரு புத்தம் புதிய விமானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமானப் பிரிவினருக்காக மற்றுமொரு புத்தம் புதிய A-330 -243 எயார்பஸ் ரக 
விமானத்தை குத்தகை அடிப்படையில் பெற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால்
 பெரேரா தெரிவித்தார்.
 பிரான்சில் தயாரிக்கப்பட்ட குறித்த புதிய விமானம் செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
 இந்த விமானத்தில் 22 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 240 எகானமி வகுப்பு இருக்கைகள் உள்ளதாகவும், இரண்டு என்ஜின்கள் மூலம் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இந்த புதிய விமானத்தின் வருகையானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எதிர்நோக்கும் விமான தாமதங்கள் மற்றும் இரத்துச் சம்பவங்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.