திங்கள், 24 ஜூலை, 2023

மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் வெள்ளிக்கிழமை ஹர்த்தால்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும்.28-07-2023. வெள்ளிக்கிழமைபூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24)இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஹர்த்தாலுக்கான அழைப்பு 
விடுக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் 
கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்கவேண்டும் என்பதுடன் அன்றையதினம் வெள்ளிக்கிழமை வர்த்தகர்கள், 
விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பதுடன் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் பங்கேற்கவேண்டும் என அழைப்பு 
விடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாண தலைவர்களே  கூட்டாக   அழைப்பு 
விடுத்துள்ளனர் .
அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில், மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பகுதிக்கு அண்மையில்   ஆரம்பிக்கும் கவனயீர்ப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு முன்பாக சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக  மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு  மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும்  மேற்கொள்ளப்படவுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.