திங்கள், 10 ஜூலை, 2023

மருதானை பகுதியில் அதிவேகத்தில் வாகனத்தை செலுத்திய யுவதிகள் பொலிஸார் அதிரடி

டிபெண்டர் ரக வாகனத்தை கவனமின்றி ஆபத்தான முறையில் செலுத்திய 19 வயதுடைய யுவதிகள் மூவரை பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
கொழும்பு - மருதானை பகுதியில் அதிக வேகத்துடன் வாகனத்தில் பயணித்தவர்களை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.

இருப்பினும், அதனை செலுத்திய யுவதி, பொலிஸாரின் சமிக்ஞையை பொருட்படுத்தாது சென்றுள்ளார்.
பின்னர் பொலிஸார் ஏனைய அவசர சேவைகளுக்கு அறிவித்தமையை தொடர்ந்து பிரிதொரு இடத்தில் வாகனம் 
சுற்றிவளைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குறித்த டிபெண்டர் ரக வாகனத்தை செலுத்திய யுவதி பொலிஸாரிடம் சொல்லாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வாகனத்தை செலுத்தியவர் மற்றும் அவரோடு பயணித்த இருவர் ஆகிய மூவரும் பொலிஸாரினால் கைது
 செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகள் கொழும்பில் வசிப்பவர்கள் என்பதோடு, பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.