ஞாயிறு, 15 மே, 2022

நாட்டில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் பிரதமர் ரணிலின் அதிரடி

இலங்கை  அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தன்னெழுச்சியான போராட்டமும் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது.கோட்டா கோ கோம் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படாது என நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க 
அறிவித்தார்.
கோட்டா கோ கம போராட்டப் பகுதியை பராமரிப்பதற்கும் பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, சிறிலங்கா இராணுவம் மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று கோட்டா கோகம வளாகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளதாக 
அவர் கூறினார்.
இதற்கிடையில், போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், போராட்ட பகுதிகளில் இடைவிடாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் பிரதமர் ரணில் உறுதியளித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.