புதன், 4 நவம்பர், 2020

மூடப்பட்ட யாழ் நவீனசந்தை தொகுதியில் கடைகள் திறக்கப்பட்டன

யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்று அச்சத்தால் மூடப்பட்ட கடைகள் .04-11-20.இன்றைய தினம் 
திறக்கப்பட்டது.
கொரோனா தொற்று அச்சத்தால் நான்கு கடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது 
பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த கடைகளை திறப்பதற்கு சுகாதாரப் பகுதியினரால் அனுமதி 
அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று காலை குறித்த கடைகள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு 
திறந்துவைக்கப்பட்டது

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.