புதன், 21 அக்டோபர், 2020

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவரை இலங்கையில் தேடல்

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் மூலமாக போலி டுவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி முகம் தெரியாத நபர் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்ததோடு, இது தொடர்பில் பல்வேறு
 கண்டனங்களும் எழுந்தன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தமிழக பொலிஸார், மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் சந்தேகநபர் இலங்கையில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இண்டர்போலின் உதவியுடன் இலங்கையில் உள்ளவரைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் தீவிரம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.