சனி, 12 ஆகஸ்ட், 2023

இலங்கை யால காடுகளில் உள்ள விலங்குகள் வறட்சியினால் கடுமையாக பாதிப்பு

வறட்சியான காலநிலை காரணமாக  தேசிய பூங்காவும்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாணிக்க கங்கை நீர் பயன்படுத்தப்படுவதாக யால தேசிய பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 அதன்படி, மாணிக்க கங்கையில் இருந்து பெறப்படும் தண்ணீர் பவுசர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது . 
இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் நீர் யால தேசிய பூங்காவில் வன விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 20 இடங்களுக்கு விடுவிக்கப்படவுள்ளதாக உயர் அதிகாரி மேலும்
 தெரிவித்தார். 
 இதேவேளை, இவ்வருடம் நாளாந்தம் வரும் சுற்றுலா பயணிகளின் மூலம் 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக யால தேசிய பூங்கா தெரிவித்துள்ளது
 நாளாந்தம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மூலம் சராசரியாக 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக பூங்காவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 ஏனைய வருடங்களில், இக்காலப்பகுதியில் வருகை குறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு யால தேசிய பூங்காவிற்கு வருகை அதிகரித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.