வெள்ளி, 7 ஜனவரி, 2022

நாட்டு மக்கள் காஸ் , அங்கர் போன்று இந்த பொருளையும் வரிசையில் நின்று வாங்க வேண்டி வருமாம்

இலங்கையில் கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் காஸ், அங்கர் போன்று பாணையும் வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் 
தள்ளப்படலாம்.
கோதுமை மா தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்காவிடின் பொது மக்கள் ஒரு இறாத்தல் பாண் பெற்றுக் கொள்வதற்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எ
ன்.கே ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பில்.07-01-2022. இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு 
குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.