திங்கள், 7 செப்டம்பர், 2020

தென்மராட்யில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி பெண் ஸ்தலத்தில் பலி

 யாழ்.தென்மராட்சிப் பகுதியில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.தனங்கிளப்பில் இருந்த சங்குப்பிட்டி நோக்கி சென்ற டிப்பர் வாகனமே, மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியது.
தனங்கிளப்பு சந்தியில் இருந்து 
சங்குப்பிட்டி
 வீதியில் இந்த விபத்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,சாவகச்சேரி திசையிலிருந்து பூநகரி திசைக்குப் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பருமே மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது
.உயிரிழந்த
 பெண் அடையாளம் காணப்படவில்லை
. அவர் ஒரு காலையிழந்த நிலையில் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.விபத்தில் உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.