புதன், 25 ஜனவரி, 2017

காதலனின் பிறப்புறுப்பை துண்டித்த இளம்பெண் கைது!

மத்தியப்பிரதேசம் மாநிலம், சித்தி மாவட்டத்தில் உள்ள நவ்கவான் (தர்ஷன் சிங்) கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபரும் கடந்த மூன்றாண்டுகளாக உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர்.
வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்களாக இருந்தபோதும், அந்த வாலிபரை ஒரு கோயிலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்துகொண்ட அந்த இளம்பெண், இந்த திருமண பந்தம் தந்த உரிமையால் அந்த வாலிபருடன் பலமுறை படுக்கையை பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு தகவல் அந்த இளம்பெண்ணை அதிர்ச்சியடைய வைத்தது.
தன்னை ஒதுக்கிவிட்டு, அதே கிராமத்தில் பெற்றோர் நிச்சயித்து வைத்துள்ள வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள தனது காதலன் சம்மதம் தெரிவித்து விட்டதாக தோழிகள் மூலம் அவருக்கு 
தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 23-ம் தேதி இரவு தாங்கள் எப்போதும் ரகசியமாக சந்திக்கும் இடத்துக்கு அந்த வாலிபரை வரவழைத்த அந்த இளம்பெண், கடைசியாக உங்களுடன் உடலுறவு வைத்துகொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தினார்.
அந்த வாலிபரும் அதற்கு இணங்கி, உச்சகட்ட இன்பத்தில் திளைத்திருந்தபோது, மறைத்து வைத்திருந்த கதிர் அரிவாளால் அவரது பிறப்புறுப்பை வெட்டி, துண்டித்தார்.
வலியும், வேதனையும் தாங்க முடியாமல் அங்கிருந்து தனது வீட்டுக்கு ஓட்டம் பிடித்த அந்த வாலிபர் தனது வேதனையை யாரிடமும் வெளிப்படுத்த இயலாமல் தணல்மேல் புழுவாக துடிதுடித்தார்.
எனினும், அவருக்கு ஏற்பட்ட ரத்தப்போக்கை கண்டு பதற்றம் அடைந்த பெற்றோர் அவரிடம் துருவித்துருவி, விசாரித்தபோது நடந்த விபரத்தை அவர் வெளியிட்டார்.
இதையடுத்து, அந்த வாலிபரின் பெற்றோர் உடனடியாக அவரை சித்தி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முதல்கட்ட சிகிச்சைக்கு பின்னர் ரேவாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஜபல்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரித்து வரும் நிலையில் அந்தப் பெண்ணின் துணிகரமான செயல்பாட்டை அந்த கிராமத்தை சேர்ந்த பலர் பாராட்டியும், சிலர் தூற்றியும்
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.