வியாழன், 22 செப்டம்பர், 2016

உதயதேவி ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் விபத்து!

இன்று அதிகாலை  மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ரயில் நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு புறப்படும் கொழும்பு, கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்து ஏற்பட காரணம் ரயில் இஞ்சின் மோதியமையே ஆகும் என மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தள்ளார்.
இதன் காரணமாக குறித்த இஞ்சின்; தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதுடன்,  ரயில் பெட்டி ஒன்றும் ரயில் கடவையும்  சேதமடைந்துள்ளன.
பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், முற்பகல் 10.25 மணிக்கு பொலன்னறுவை நோக்கிச் செல்லும் ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர்  மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.