ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

எல்லோருக்கும் இந்திரன் ரவி இவர்களை தெரியும்?

எத்தனை ஆயிரம் எம்மவர்களை சிரிக்க சிந்திக்க பல குறு நாடகங்களை முகபுத்தகம் ஊடாக பதிவேற்றி எங்கள் அகப்புத்தகத்தில் நிறைந்த பிரான்ஸ் வாழ் எம் தேசத்தின் கலைஞர்கள் இந்திரன் & றவி அண்ணாமார் …
எத்தனை அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகர் தமிழ்தேசியத்தின் வழியில் பயணிக்கும் கலைஞன் தானே பாடலெழுதி பாடும் வல்லோன் நடிகன் அறிவிப்பாளன் பல்சுவை கலைஞன் இந்திரன் அண்ணா ..
அவரோடு இணைந்து தன் திறனை காட்டும் றவி அண்ணா …
இவர்களின் கலைத்திறமையை உணர்ந்து தமிழர்கள் வாழும் தேசமெங்கும் இவர்களுக்கான இரசிகர்கள் பட்டாளம். என புகழின் உச்சியினை தொட்டு நிற்க்கும் இந்த கலைஞர்களை…
வாழ்த்தவும் ஊக்கபடுத்தவும் இரசிகர்கள் இருந்தும்…
இவர்களுக்கான தளங்களை
ஊடகங்களும் நிகழ்வுகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களும் ஏன் மறந்து போகின்றார்கள் என்னும் கேள்வி என் மனதில் எழுகிறது ..
எங்கள் தேசத்து கலைஞர்கள் என்றால் இவர்களும் தானே உள்ளடங்குவர்.
என்பதை இனிமேல் சரி உணர்ந்து எம்மின கலைஞர்கள் இவர்கள் மட்டும் அல்ல இன்னும் பல கலைஞர்களை மறந்து அல்லது மறைத்து நிகழ்வுகளை நடத்தாமல் அவர்கள் திறமைகளை மதிப்பளித்து நிகழ்வுகளை நடத்துவோமாக…!
எம்மின கலைஞர்களையும் அவர்கள் திறமைகளையும் வாழ்த்துவது எம் கடமை…
அவர்கள் திறமைகளை அரங்கேற்றுவது
ஊடகங்களினதும் நிகழ்வு நடத்தும் எம்மவர்களின் கடமை….
வாழ்த்துக்கள் இந்திரன்& றவி அண்ணாமார்
எம் கலைஞர்கள் எமக்கானவர்கள் உணர்வோம்
அவர்கள் திறமைகளை வாழ்த்தி வரவேற்ப்போம்..!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.